districts

வேலை வாங்கி தருவதாக சுமைதூக்கும் தொழிலாளியிடம் மோசடி

சேலம், நவ.10- கடந்த அதிமுக ஆட்சியில் அப் போதைய சட்டமன்ற உறுப்பினர் வெங்கடாஜலத்தின் உறவினர் கோபி நாத் என்பவர்  வேலை வாங்கித் தருவ தாக சுமை தூக்கும் தொழிலாளியி டம் ரூ.5 லட்சம் பெற்றுக்கொண்டு மிரட்டுவதாக தொழிலாளி புகார் அளித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாநகராட்சிக்குட்பட்ட ரெட்டியூர் தாசில்தார் காலனியைச் சேர்ந்தவர் பெரியசாமி. இவர் சூர மங்கலம் பகுதியில் உள்ள உழவர் சந்தையில் சுமை தூக்கும் தொழில் செய்து வருகிறார். இவருடைய மகன் சுரேஷ் என்பவர் பொறியியல் படிப்பு  முடித்துவிட்டு வேலை தேடிக் கொண் டிருக்கிறார். இதனையறிந்த ஓமலூர்,  காமலாபுரம் பகுதியைச் சேர்ந்த கோபிநாத் என்பவர், முன்னாள் சட்ட மன்ற உறுப்பினரும், அதிமுக சேலம் மாநகர மாவட்ட செயலாளருமான வெங்கடாஜலத்தின் உறவினர் என் றும், உங்களுடைய மகனுக்கு அரசு போக்குவரத்து கழகத்தில் வேலை வாங்கி தருவதாக பெரியசாமியிடம் கூறியுள்ளார். அதற்காக 5 லட்சம் ரூபாய் கேட்டுக்கொண்டதன் பெய ரில், பெரியசாமி பணத்தை எடுத்துக் கொண்டு அப்போதைய சட்டமன்ற  உறுப்பினராக இருந்த வெங்கடா ஜலத்தின் வீட்டுக்கு சென்றுள்ளனர். அப்போது வெங்கடாஜலம் வீட் டின் அருகே பெரியசாமியையும், அவரது மனைவியிடமிருந்து ரூ.5 லட்சம் பணத்தை வாங்கியுள்ளார். இதன்பின் சட்டமன்ற உறுப்பினரை சந்தித்து பணத்தை கொடுத்து விட்ட தாக வந்து கூறிய கோபிநாத், அதற் காக 20 ரூபாய் சொத்து பத்திரத்தில் கையெழுத்து போட்டும் கொடுத்து விட்டு, இன்னும் இரண்டு மாதங்க ளில் உங்களுடைய மகனுக்கு வேலை வந்துவிடும் என்று கூறியுள் ளார். இதனை நம்பிய பெரியசாமி குடும்பத்தினர் ஆறு மாதம் காத்தி ருந்துள்ளனர்.

இதற்கிடையே நடைபெற்ற சட்ட மன்றத் தேர்தலில் திமுக ஆட்சிக்கு  வந்த நிலையில், கோபிநாத்தை  தொடர்பு கொண்டபோது ஆட்சி மாறி யதால் தன்னால் ஏதும் செய்ய முடி யாது என்று பெரியசாமியிடம் கூறி யுள்ளார். அதற்கு தான் கொடுத்த 5  லட்ச ரூபாய் பணத்தை பெரியசாமி கேட்ட நிலையில், கோபிநாத் கொடுப் பதாக உறுதியும் அளித்துள்ளார். ஆனால், சிறிது காலம் கழித்து  கோபிநாத், “பணம் கொடுத்ததற் கான என்ன அத்தாச்சி வைத்துள் ளாய், என்னை உங்களால் ஒன்றும் செய்ய முடியாது” என்று மிரட்டிய தாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச் சியடைந்த பெரியசாமி குடும்பத்தி னர் சேலம் சூரமங்கலம் காவல் நிலை யத்திலும், மாவட்ட ஆட்சியர் அலுவ லகத்திலும் புகார் அளித்துள்ளனர். ஆனால், இதுவரை கோபிநாத் மீது எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. மேலும், “எங்கு  சென்று புகார் கொடுத்தாலும் தன்னை ஒன்றும் செய்ய முடியாது” எனக் கூறி பெரியசாமியையும், அவரது குடும்பத்தினரையும் கோபிநாத் மிரட்டி வருவதாக கூறப்படுகிறது. கோபிநாத் மீது நடவடிக்கை எடுத்து தங்களுடைய பணத்தை பெற்று தரு மாறு பாதிக்கப்பட்ட பெரியசாமி குடும் பத்தினர் காவல்துறை மற்றும் ஆட்சி யர் அலுவலகத்திற்கு நடையாய் நடந்து வருகின்றனர்.