சேலம், ஜூன் 1- “சாலை பாதுகாப்பு என்பது அனைவருக் கும் உயிர் பாதுகாப்பு” என ஓட்டுநர் தினத்தில் ஓட்டுநர்கள் அனைவரும் உறுதிமொழி ஏற்று, ஓட்டுனர் தினத்தை சிறப்பாக கொண்டாடி னர். ஜூன் 1 ஆம் தேதி மாநிலம் முழுவதும் ஓட்டுநர் தினமாக கொண்டாடப்பட்டு வரு கிறது. அதன்ஒருபகுதியாக சேலம் மாவட் டத்தில் சிஐடியு சார்பில், சேலம் மாவட்ட ஆட்டோ தொழிலாளர்கள் மற்றும் சாலை போக்குவரத்து மோட்டார் தொழிலாளர் சங் கத்தினர் இணைந்து கொண்டாடினர். சேலம் மாவட்டத்தில் பழைய பேருந்து நிலையம், ஜங்ஷன், முக்கோணம், செவ்வாய்பேட்டை, எடப்பாடி, ஓமலூர் உள்ளிட்ட பகுதிகளில் ஓட்டுநர் தினத்தை கேக் வெட்டி கொண்டாடி னர். சேலம் முக்கோணம் பகுதியில் சாலைப் போக்குவரத்து தொழிலாளர் சங்கத்தின் மாநில துணைத்தலைவர் எஸ்.கே.தியாக ராஜன் தலைமையில் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. அதில், சாலை பாது காப்பே உயிர் பாதுகாப்பு எனவும், ஆம்பு லன்ஸ், தீயணைப்பு வாகனங்களுக்கு வழி விட வேண்டும். பொதுமக்கள் கூடும் இடங் களில் மெதுவாக செல்ல வேண்டும். அதிக பாரங்களை ஏற்றக்கூடாது. பள்ளிகள், மருத்துவமனைகள் அருகில் ஒலி எழுப்பக் கூடாது. சாலை விதிகளை மதித்து நடப் போம் என உறுதிமொழி ஏற்றனர். இதில் சாலைப்போக்குவரத்து தொழிலா ளர் சங்க மாவட்டச் செயலாளர் முருகே சன், ஆட்டோ தொழிலாளர் சங்க மாவட்டச் செயலாளர் உதயகுமார், வாலிபர் சங்க முன் னாள் செயலாளர் எம்.கனகராஜ் உட்பட திர ளான ஓட்டுநர்கள் கலந்து கொண்டனர்.