ஈரோடு, ஜூலை 31- விவசாய தொழிலாளர் சங்கத்தின் மூத்த தோழர் மறைந்த ஆர்.சத்திய மூர்த்தியின் முதலாம் ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. தீண்டாமை ஒழிப்பு முன்னணி மற்றும் விதொசவின் ஒன்றிய நிர்வாகியாக திறம்பட களப்பணியாற்றியவர் தோழர் ஆர்.சத்தியமூர்த்தி. இவரின் முதலாம் ஆண்டு நினைவேந்தல் கூட்டம் செவ்வாயன்று ஈரோடு, சத்திய மங்கலம் சிபிஎம் அலுவலகத்தில் நடைபெற்றது. இந்நிகழ்விற்கு, சத்தி தாலுகாச் செயலாளர் கே.எம். விஜயகுமார் தலைமை வகித்தார். தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநில துணைத்தலைவர் யு.கே.சிவஞா னம் படத்தை திறந்து வைத்து உரையாற்றினார். இதில், மூத்த தோழர்கள் கே.ஆர்.திருத்தணிகாசலம், எஸ்.முத்துசாமி மற்றும் சத்தியமூர்த்தி குடும்பத்தினர் கோகி லவாணி, மகாலட்சுமி, ராஜேஸ்வர், சக்திவேல் உட்பட திரளானோர் கலந்து கொண்டனர்.