கோவை, டிச.28- இருதய குறைபாடுகளுடன் இருந்த மூன்று பெண் குழந்தைக ளுக்கு கோவை அரசு மருத்துவ மனை மருத்துவர்கள் நவீன இரு தய சிகிச்சையை வெற்றிகரமாக மேற்கொண்டு சாதித்துள்ளனர். கோவை அரசு மருத்துவக் கல் லூரி மருத்துவமனையின் இருதய வியல் துறையில், மூன்று பள்ளி மாணவிகளுக்கு ஏட்ரியல் செப்டல் குறைபாடு - Atrial septal defect (இதயத்தில் ஏற்படும் துளை) வெள்ளியன்று சரி செய்யபட்டது. இதுகுறித்து கோவை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவ மனை முதல்வர் நிர்மலா கூறுகை யில், நமது அரசு மருத்துவமனை யின் இருதயவியல் துறைக் குழு, இத்தகைய துல்லியமான செயல் முறையை மேற்கொள்ள குறைந் தது இரண்டு வாரங்களுக்கு முன்பே திட்டமிட்டு, நோயாளியின் இதயத்தில் உள்ள துளையின் அளவை எக்கோகார்டியோகிராபி Echocardiography) மூலம் அள விட்டு, குறைபாட்டை மூட தனிப்ப யனாக்கப்பட்ட கருவியை தயார் செய்தனர். இந்த சிகிச்சையானது பெர்கு டேனியஸ் 4 (Percutaneous tran scatheter) முறை மூலம் செய்யப் பட்டதால், நோயாளிகளுக்கு திறந்த இதய அறுவை சிகிச்சை யால் (Open heart surgery) ஏற்ப டும் வலி மற்றும் இரத்த இழப்பு தவிர்க்கப்பட்டது. மூன்று சிறுமிக ளும் சிகிச்சைக்குப் பிறகு நன்றாக உள்ளனர். தேசிய சுகாதார பணி - TN (NHM -TN)-ராஷ்ட்ரிய பால் ஸ்வஸ்த்யா காரியக்ரம் (RBSK) திட்டம் மற்றும் அப்பல்லோ குழந்தைகள் ‘Healing Little hearts’ அமைப்பின் முயற்சியுடன் இணைந்து இந்த நவீன சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. இந்த அறுவை சிகிச்சைக்கு தனியார் மருத்துவமனைகளில் ரூ.5 லட்சம் வரை செலவாகும். நமது அரசு மருத்துவமனையில், நமது அரசு மருத்துவர்கள் இலவசமாக இந்த சிகிச்சையை மேற்கொண்டு மூன்று பெண் குழந்தைகளை பாதுகாத் துள்ளனர் என்றனர்.