1953 ஆம் ஆண்டில் நீலகிரி நாடா ளுமன்ற தொகுதியில் இடைத் தேர்தல் நடைபெற்றது. கம்யூனிஸ்ட் கட்சி தனது வேட்பாளராக தோழர்.பார்வதி கிருஷ்ணனை நிறுத்தியது. தேர்தல் பொறுப்பாளராக தோழர்.கே.ரமணி செயல்பட்டார். பல தேயிலை தோட் டங்களுக்கு சென்ற போது தொழிலா ளர்களின் கடின வாழ்க்கை மோசமான வேலைநிலை அறிந்து தேர்தலுக்கு பின்பு தோட்டத் தொழிலாளர் சங்கத்தை உரு வாக்க முடிவெடுத்தார்.அன்றைய காங்கி ரஸ் அமைச்சர் பக்தவச்சலம் கம்யூ னிஸ்ட்களின் தேர்தல் பிரச்சார வேலை களை கண்டு தேர்தலில் வெற்றி பெறு வதற்காக இங்கு வரவில்லை, நீலகிரி மலையில் செங்கொடியை ஊன்றுவ தற்காக வந்திருக்கிறார்கள் என்று கூறி னார். ஆம், இம்மண்ணில் செங்கொடியை ஊன்றதான் வந்திருக்கிறோம். தோட்டத் தொழிலாளர்களை திரட்டி அவர்கள் பசி, பட்டினிக்கு முடிவுகட்டிட இயக்கத்தை முன் னெடுப்போம் என கூறினார். கே.ரமணி.
வனாந்திர பகுதியாக இருந்த ஆனை மலை காட்டை தங்கள் கடுமையான உழைப்பு மூலம் தேயிலை தோட்டமாக மாற்றியவர்கள் ஏழை, எளிய உழைப்பாளி மக்கள். தமிழகத்தின் பல மாவட்டங்களிலி ருந்து குறிப்பாக, தென்மாவட்டங்களிலி ருந்து கங்காணிகள் மூலம் கொண்டு வரப் பட்டவர்கள். பல விஷப்பூச்சிகளாலும், கொடிய விலங்குகளாலும், நோய் நொடி யாலும், போதுமான சத்துயின்மையால் ஏராளமானோர் மாண்டனர். தப்ப முடியா தவர்கள் நிலையில் கொத்தடிமை களாகவும் மாற்றப்பட்டனர். காலை 6.30 மணி முதல் மாலை 6,30 மணி வரை 12 மணி நேரம் வேலைசெய்ய வேண்டும். கூலியோ ஆண்களுக்கு 7,1/2 அணா, பெண் களுக்கு 5,1/2 அணா தோட்டத்தொழிலா ளர்களுக்கு கூலி உயர்வு வேண்டுமென்ற கோரிக்கைகளை முன்வைத்து செங்கொடி சங்கம் பல வலிமையான போராட்டங்களை நடத்தியது.
இதன் விளைவாக காமராஜ் தலைமை யிலான காங்கிரஸ் அரசு கந்த நரசிமசெட்டி யார் என்ற நீதிபதி தலைமையில் விசார ணைக்குழு அமைத்தது. அந்த விசார ணைக்குழு நான்கு ஆண்டுகள் விசாரணை நடத்தி 1956 ல் தனது பரிந்துரையை வெளி யிட்டது. அதன்படி தோட்டத்தொழிலா ளர்களுக்கு தினக்கூலியாக ரூ 2.25 கொடுக்க வேண்டும். 1952 ஆம் ஆண்டு முதல் 1956 ஆம் ஆண்டு வரை பின் சம்பளம் என்ற முறையில் ஒவ்வொரு தொழிலாளர்க ளுக்கு ரூ 1110/= கொடுக்க வேண்டுமென்று பரிந்துரை செய்தது. ஆனால் தோட்ட முத லாளிகளோ இத்தீர்ப்பை அமலாக்க மறுத் தார்கள். தொழிற்சங்க தலைகள் சென்னை சென்று மாநில தொழில் அமைச்சரையும், ஒன்றிய நிதியமைச்சரையும் சந்தித்து தீர்ப்பை அமல்படுத்திட வலியுறுத்தினர். ஆனால் காமராஜர் தலைமையிலான மாநில அரசோ பல்லாயிரக்கணக்கான தொழிலா ளர்களின் வாழ்வில் அக்கரை செலுத்த மறுத்தது. இதனால் தொழிலாளர்கள் போராட்டம் வெடித்தது. 1957 ஆம் ஆண்டு ஜனவரி 26 ஆம் தேதியன்று செங்கொடி தலைமையில் பிரம்மாண்ட ஊர்வலம் வால் பாறை காந்தி மைதானம் நோக்கி வரும் போது ஆரோக்கிய சாமி என்ற தலைமை காவலர் ஒரு தொழிலாளியை அடித்து காவல் நிலையத்திற்கு இழுத்து சென் றார்.
தொழிலாளிகள் ஆட்சேபித்து விடு தலை செய் என முழக்கம் இட்டனர். போராட் டத்தை சீர்குலைக்க காந்திருந்த காவல் துறை தொழிலாளர் மீது கண்முடித்தன மாக துப்பாக்கி சூடு நடத்தியது. அதில் செங்கொடி இயக்கத்தின் முக்கிய ஊழியர் களான அப்பாறு, குருசாமி,பழனி, ஞான முத்து என நான்கு பேர் அங்கேயே மாண்ட னர். 6 பேர் படுகாயம் அடைந்தனர். இறந்த தோழர்களின் நிழல் படத்தை எடுக்க காவல் துறை அனுமதிக்க வில்லை 1957 ஆம் ஆண் டில் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் கோவை நாடாளுமன்ற வேட்பாளராக நிறுத்தப்பட்ட தோழர்.பார்வதி கிருஷ்ணன் உடன் சம்பவம் நடந்த இடத்திற்கு வந் தார். தெருவில் கிடத்தப்பட்ட தொழிலா ளர்களின் உடல்களை ஒப்படைக்க காவல் துறை மறுத்த போது பார்வதி கிருஷ்ணன் சினம் கொண்டு சீரினார். உடல்களை தர மறுத்தால் பெரும் கிளர்ச்சி நடைபெறும் என்று காவல் துறையை எச்சரித்தார். எனவே காவல் துறை பணிந்தது. கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தை யும், செங்கொடி சங்க அலுவலகத்தையும் காவல் துறையினர் பூட்டி சீல் வைத்திருந்த னர். அன்றைய கோவை மாவட்டத்தில் பொள்ளாச்சி துணையாட்சியராக இருந்த பின்னாளில் இந்திய தேர்தல் ஆணையராக இருந்த டி,என்.சேஷனிடம் பூட்டை திறக்க கோரிய போது மறுத்தார். உடனே ஆவேச மடைந்த பார்வதி கிருஷ்ணன் அவர் முன் னிலையிலேயே. தொழிலாளர்களிடம் பூட்டை உடைத்தெரியும்படி கூறினார். பூட்டு உடைத்தெறியப்பட்டது.
அன்றைய எதிர்க் கட்சி தலைவராக இருந்த திராவிட முன் னேற்ற கழகத்தை சேர்ந்த தலைவர் சி.என். அண்ணாத்துரை, “கூலி உயர்வு கேட்டான்; அதான் குண்டடி பட்டு செத்தான்” என்று இச்சம்பவம் குறித்து தமிழநாடு முழுவதும் பிரச்சார மேடைகளில் முழுங்கினார். இன்றும் கூட ஆண், பெண் தொழிலா ளர்கள் கூலியில் சமவேலைக்கு சம ஊதி யம் அமலாக்கப்பட வில்லை. செங்கொடி இயக்கத்தின் தொடர் போராட்டத்தால் ஓர ளவு ஊதியம் உயர்வு ஏற்பட்டிருந்தாலும். அதுவும் போதுமானது அல்ல. செங்கொடி இயக்கம் தொழிலாளர்களின் போராட்டங் களை தொடர்ந்து போராட்டங்களை முன் னெடுத்து சென்று கொண்டிருக்கிறது.