உதகை, செப்.28- உதகையில் இயங்கி வந்த ஸ்டெர்லிங் பயோடெக் தொழிற்சா லையை மூட அரசு அனுமதி வழங்கா ததால், அரசு ஆணையை தொழிலா ளர் நலத்துறை செயல்படுத்த வேண் டும் என ஸ்டெர்லிங் பயோடெக் எம்ப்லாயீஸ் யூனியன்(சிஐடியு) வலி யுறுத்தியுள்ளது. இது குறித்து ஸ்டெர்லிங் பயோ டெக் எம்ப்லாயீஸ் யூனியன் (சிஐடியு) தலைவர் ஆப்ரஹாம், செய லாளர் மூர்த்தி, பொருளாளர் அன்ப ரசு ஆகியோர் சனியன்று செய்தியா ளர்களிடம் கூறியதாவது, நீலகிரி மாவட்டம், உதகை சாண்டிநல்லா பகுதியில் இயங்கி வந்த ஸ்டெர்லிங் பயோடெக் தொழிற்சாலையில் 169 நிரந்திர தொழிலாளர்கள் மற்றும் ஒப்பந்த அடிப்படையில் ஏராளமான தொழிலாளர்கள் பணியாற்றி வந் தோம். இந்த நிறுவனம் 2018 ஆம் ஆண்டு வேறு நிர்வாகத்துக்கு மாற் றப்பட்டது. இதனால், புதிய நிர்வாகம் 30 தொழிலாளர்களை மட்டும் வைத்துக் கொண்டு, பிற தொழிலாளர்களை விடுவித்தது. மேலும், தொழிலாளர்க ளுக்கு கடந்த 5 ஆண்டுகளாக பாதி ஊதியம் மட்டுமே வழங்கி வந்தது. கடந்த பிப்ரவரி மாதம் முதல் அந்த ஊதியமும் நிறுத்தப்பட்டது. மேலும், தொழிற்சாலையை மூட அனுமதி கோரி நிர்வாகம் விண்ணப் பித்தது. இதனால், தொழிலாளர்கள் கடும் பாதிப்புக்குள்ளாகி வருகின்ற னர். தொழிலாளர்களுக்கு தெரி விக்காமல் நிர்வாகம் எடுத்த இந்த முடிவை எதிர்த்து தொழிலாளர்கள் சார்பில் தொழிற்சங்கங்கள் தொழி லாளர் நலன் மற்றும் மேம்பாட்டுத்து றைக்கு மனு அனுப்பினோம். இதன் பேரில் அரசு செயலாளர் வீரராகவ ராவ் தொழிலாளர்களின் மனு பரிசீ லித்து, தொழிற்சாலை மூட நிர்வாகம் அரசிடம் அனுமதி கோரிய விண்ணப் பித்தை தொழிற்தகராறுகள் சட்டத் தின் கீழ் நிராகரிக்க அரசு முடிவெ டுத்து அரசாணை பிறப்பித்து, அதை செயல்படுத்த தொழிலாளர் ஆணை யரை அறிவுறுத்தி உள்ளார். இது தொழிலாளர்களின் 6 ஆண்டு கால போராட்டத்துக்கு கிடைத்த வெற்றியாகும். எனவே, தொழிலாளர்களின் நலனை கருத்தில் கொண்டு தொழி லாளர் ஆணையர் அரசின் ஆணையை உடனடியாக செயல்ப டுத்த வேண்டும். என்றனர்.