districts

திருப்பூர் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி தொழிலாளர்களுக்கு சட்டப்படி ஊதியம் கோரி சிஐடியு வேலைநிறுத்த நோட்டீஸ்

திருப்பூர், மே 29 – திருப்பூர் மாநகராட்சி மற்றும் இம் மாவட்டத்தில் உள்ள நகராட்சிகள், பேரூராட்சிகளில் தினக்கூலி ஒப்பந் தத் தொழிலாளர்களுக்கு சட்டப்படி ஊதியம் வழங்க வலியுறுத்தி ஜூன் 11 ஆம் தேதி ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தம் மற்றும் தர்ணா போராட்டம் நடத்தப் போவதாக சிஐ டியு சார்பில் சம்பந்தப்பட்ட உள் ளாட்சி நிர்வாகங்களுக்கு முன்னறி விப்பு நோட்டீஸ் அளிக்கப்பட்டுள் ளது. இது பற்றி திருப்பூர் மாவட்ட ஊரக  வளர்ச்சி உள்ளாட்சித் துறை ஊழியர்  சங்கத்தின் மாவட்டச் செயலாளர் கே. ரங்கராஜ் புதன்கிழமை விடுத்துள்ள செய்தியறிக்கை வருமாறு: திருப்பூர் மாவட்ட ஊரக வளர்ச்சி  உள்ளாட்சித்துறை ஊழியர் சங்கம்  (சிஐடியு) சென்னை உயர்நீதிமன்றத் தில் தொடுத்த வழக்கில், மாநக ராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் வேலை செய்யும் தினக்கூலி மற்றும் ஒப்பந்த தூய்மைப் பணியாளர்கள், குடிநீர் பணியாளர்கள், ஓட்டுநர்கள் மற்றும் டிபிசி ஊழியர்களுக்கு அர சாணை (2டி) எண்:62இன்படி தினசரி  ஊதியம் கணக்கிட்டு வழங்கிட 2023  செப்டம்பர் 11-ல் நீதிமன்றம் உத்தர விட்டுள்ளது. மேற்கண்ட உத்தரவுப்படி ஊதி யம் நிர்ணயம் செய்து வழங்கவும், தொழிலாளர்களிடம் பிடித்தம் செய் யப்படும் இபிஎப் மற்றும் இஎஸ்ஐ  தொகையுடன் ஒப்பந்த நிறுவனங்க ளின் பங்குத் தொகைகளையும் சேர்த்து முறையாக செலுத்த வேண் டும் என்றும் நகராட்சி நிர்வாக இயக் குனர் 2023 அக்டோபர் 27-ல் உத்தர விட்டுள்ளார். எனினும் மேற்கண்ட உயர் நீதி மன்ற உத்தரவு மற்றும் நகராட்சி நிர் வாக இயக்குனர் உத்தரவு அடிப்ப டையில் தினக்கூலி ஒப்பந்த ஊழியர் களுக்கு இதுவரை ஊதியம் கணக் கிட்டு வழங்கவில்லை. இ.பிஎப் மற் றும் இ.எஸ்.ஐயும் ஒப்பந்த நிறுவனங் களின் பங்குத் தொகையுடன் முறை யாக செலுத்துவதில்லை.  இதுகுறித்து சிஐடியு சார்பில் கடந்த கடந்த 2023 நவம்பர் 2 மற்றும்  2024 ஜனவரி 18 தேதிகளில் திருப்பூர்  மாநகராட்சி மற்றும் இம்மாவட்டத் தில் உள்ள 6 நகராட்சிகளின் ஆணை யாளர்களிடம் நேரில் கடிதம் கொடுத்து வலியுறுத்தப்பட்டது. அரசாணைப்படி பேரூராட்சி  தூய்மைப் பணியாளர்களுக்கு தினசரி  ஊதியம் ரூ.562, குடிநீர் பணியாளர் கள் மற்றும் ஓட்டுநர்களுக்கு ரூ.638 -ம், நகராட்சி தூய்மைப் பணியாளர்க ளுக்கு தினசரி ஊதியம் ரூ.638, குடிநீர்  பணியாளர்கள் மற்றும் ஓட்டுநர்க ளுக்கு ரூ715-ம், மாநகராட்சி தூய்மைப்  பணியாளர்களுக்கு தினசரி ஊதியம் ரூ753, குடிநீர் பணியாளர்கள் மற்றும்  ஓட்டுநர்களுக்கு ரூ792-ம் கணக்கிட்டு  வழங்க வேண்டும். ஆனால் மேற் கண்ட ஊதியம் வழங்காமல் மிகவும்  குறைவாகவே வழங்கப்படுகிறது. அத்துடன் இ.பி.எப். தொகைகள் தொழிலாளர்களின் யு.ஏ.என்.கணக் கில் முறையாக செலுத்துவதில்லை.  எனவே உயர்நீதிமன்றம் மற்றும்  நகராட்சி நிர்வாக இயக்குனர் உத்தர வுப்படி ஊதியம் கணக்கிட்டு மாநக ராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் வழங்க வேண்டும். தொழிலாளர்க ளிடம் பிடித்தம் செய்யப்படும் இ.பி.எப்., இ.எஸ்.ஐ. தொகைகளுடன் ஒப் பந்த நிறுவனங்களின் பங்குத் தொகையையும் வசூலித்து முறை யாக தொழிலாளர்களின் யு.ஏ.என். கணக்கில் செலுத்த வேண்டும்.  ஊராட்சிகளில் வேலை செய்யும்,  மேல்நிலை நீரேற்றத் தொட்டி ஆப் ரேட்டர் மற்றும் தூய்மைக் காவலர்கள்,  தூய்மைப் பணியாளர்களுக்கும் மேற் கண்ட நீதிமன்ற உத்தரவுப்படி ஊதிய  உயர்வு வழங்க வேண்டும். இந்த கோரிக்கைகளை முன்வைத்து, சிஐ டியு சங்கத்தின் சார்பில் வேலை நிறுத்த முன்அறிவிப்பு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.  வரும் ஜூன் 11-ல் ஒரு நாள் அடை யாள வேலை நிறுத்தமும், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தர்ணா போராட்டமும் முதற்கட்டமாக நடத் துவது என்றும், மேற்கண்ட ஊதிய  உயர்வு கிடைக்கும் வரை பல்வேறு  கட்ட போராட்டங்களை தொடர்ந்து நடத்துவது என்றும் முடிவு செய்யப் பட்டுள்ளதாக சிஐடியு மாவட்டச் செய லாளர் கே.ரங்கராஜ் தெரிவித்துள் ளார்.