districts

img

சாலையோர வியாபாரிகளை பாதுகாக்க வலியுறுத்தி சிஐடியு ஆர்ப்பாட்டம்

திருப்பூர், ஜூலை 6- திருப்பூர் பல்லடம் ரோடு சாலையோர வியாபாரிகள் வாழ்வாதாரத்தை பாது காத்து, உச்சநீதிமன்ற தீர்ப்பின் அடிப்ப டையிலும் ஒன்றிய, மாநில அரசுகளின்  அறிவிப்புகளின் அடிப்படையில், சாலை யோர வியாபாரிகளுக்கு மாற்று இடம் ஒதுக்க   வலியுறுத்தி சிஐடியு சார்பில் கண்டன ஆர்ப் பாட்டம் நடைபெற்றது. திருப்பூர் மாநகராட்சி பல்லடம் சாலை உழவர் சந்தை பகுதியில் பல  ஆண்டு கால மாக சாலையோர வியாபாரிகள் போக்குவ ரத்துக்கு இடையூறு இல்லாமல் வியாபாரம்  செய்து வருகிறார்கள். எனவே உச்ச நீதி மன்ற தீர்ப்பின் அடிப்படையிலும், ஒன்றிய மாநில அரசுகளின் அறிவிப்புகளின் அடிப் படையில், சாலையோர வியாபாரிகளுக்கு மாற்று இடம் ஒதுக்கீடு செய்து தரும்  வரை ஏற்கனவே வியாபாரம் செய்யும்  இடங்களிலேயே வியாபாரம் செய்ய அனுமதிக்க வேண்டும் என திருப்பூர் மாநகராட்சி அலுவலகம் எதிரில் புத னன்று சிஐடியு சார்பில் கண்டன ஆர்ப் பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சாலையோர வியாபாரிகள் சங்க திருப்பூர் மாவட்ட செய லாளர் பி.பாலன் தலைமை வகித்தார். பல்ல டம் ரோடு தென்னம்பாளையம் உழவர் சந்தை  பகுதியில் சாலையோரம் பழங்கள் விற்பனை  செய்யும் வியாபாரிகளை அப்புறப்படுத்தக் கூடாது என்று  வலியுறுத்தி முழக்கங்கள் எழுப் பப்பட்டன. சிஐடியு மாவட்டத் தலைவர்  கே உன்னிகிருஷ்ணன் மாவட்ட துணை செய லாளர் சி.மூர்த்தி ஆகியோர் கோரிக்கை களை வலியுறுத்தி பேசினர். இதில் திரளா னோர் பங்கேற்றனர். போராட்டத்தின் நிறைவாக திருப்பூர் கோட்டாட்சியர் பேச்சுவார்த்தைக்கு சிஐடியு நிர்வாகிகளை அழைத்து இருந்தார். புத னன்று மாலை கோட்டாட்சியர் அலுவலகத் தில் இந்த பேச்சுவார்த்தை நடைபெற்றது.