districts

img

சாலையோர வியாபாரிகள் குழு அமைக்க சிஐடியு கோரிக்கை

திருப்பூர், ஆக. 8 – திருப்பூர் மாநகரில் சாலையோர வியாபாரிகள் நலனைப்  பாதுகாக்கும் வகையில் மாநகராட்சி நிர்வாகம் தெருவோர  வியாபாரிகள் குழு அமைக்கவும், அந்த குழுவின் ஆலோச னைப்படி சாலையோர வியாபாரிகள் நலனைப் பாதுகாக்க வேண்டும் என்று திருப்பூர் மாவட்ட சாலையோர வியாபாரி கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. சிஐடியு சாலையோர வியாபாரிகள் சங்க மாவட்டச் செய லாளர் பி.பாலன் உள்ளிட்டோர் திங்களன்று மாவட்ட வரு வாய் அலுவலரிடம் அளித்த கோரிக்கை மனுவில் கூறியிருப்ப தாவது: திருப்பூர் பல்லடம் ரோடு தெற்கு உழவர் சந்தை  அருகில் 150 மீட்டர் தொலைவில் சாலையோர வியாபாரிகள்  தினசரி காலை 4 மணி முதல் 8 மணி வரை பழங்களை வைத்து  வியாபாரம் செய்து வருகிறார்கள். அதில் கிடைக்கும் வருமா னத்தில் அவர்கள் குடும்பங்கள் பிழைத்து வருகின்றன. உழவர் சந்தையில் விவசாயிகள் விற்பனை செய்யும் காய்கறிகளையோ, சந்தையில் வியாபாரிகள் விற்பனை செய்யும் காய்கறிகளையோ சாலையோர வியாபாரிகள் விற் பனை செய்வதில்லை. ஆனால் சந்தை வியாபாரிகள், சாலை யோர வியாபாரிகளை அப்புறப்படுத்த வேண்டும் என்று மாந கராட்சி நிர்வாகத்துக்கு மனு அளித்துள்ளனர். இது பொருத் தமற்றது. சந்தை வியாபாரிகளில் சிலர் சந்தைக்கு வெளியே  தள்ளுவண்டிகளிலும், சாலையிலும் காய்கறிகளைக் கொட்டி  வியாபாரம் செய்கின்றனர். அத்துடன் சாலையோர கடைக ளின் முன்பகுதியிலும் வாடகைக்கு எடுத்து வியாபாரம்  செய்கின்றனர்.  இந்த நிலையில் சாலையோரம் 150 மீட்டர் தொலைவில் போக்குவரத்துக்கு இடையூறு இல்லாமல் வியாபாரம் செய் வோரை பாதுகாக்க உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தர வுப்படி, தெருவோர வியாபாரிகள் குழு அமைக்க வேண்டும்.  அந்த குழுவின் ஆலோசனைகளை கருத்தில் கொண்டு சாலையோர வியாபாரிகள் வாழ்வாதாரத்தைப் பாதிக்கப் படாமல் அவர்களது தொழிலுக்கு உத்தரவாதம் அளிக்க வேண்டும். எனவே மாவட்ட நிர்வாகம் இது குறித்துப் பரிசீ லித்து சாலையோர வியாபாரிகள் வாழ்வாதாரம் பாதுகாக்க  நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பி.பாலன் கோரியுள் ளார்.