திருப்பூர், ஜன.3 - நல வாரியக்கூட்டத்தில் எடுக் கப்பட்ட முடிவுகளை தமிழக அரசும், வாரியமும் நடைமுறைப் படுத்த வேண்டும். சட்டத்தில் இல்லாததை நடைமுறைப்படுத்து வதை ஏற்க முடியாது என சிஐடியு கட்டுமான சங்கத்தின் பொதுச்செய லாளர் டி.குமார் உரையாற்றி னார். திருப்பூர் முறை சாரா தொழி லாளர் நல வாரிய அலுவலகம் முன்பாக திங்களன்று நடை பெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு தலை மையேற்று தமிழ்நாடு கட்டிட கட்டு மான தொழிலாளர் சம்மேள னத்தின் மாநில பொதுச் செயலா ளரும், தமிழக கட்டுமான தொழி லாளர் நல வாரிய உறுப்பினரு மான டி.குமார் உரையாற்றினார். அப்போது அவர் பேசுகையில், ஒன்றிய அரசின் திட்டத்தை தமிழ கத்தில் அப்படியே பொருத்தக் கூடிய முறையில் மாநில நிதி அமைச்சரும், நிதித்துறை செய லாளரும், யாருக்குமே தெரி யாமல், கடந்த 2022 ஆம் ஆண்டு பிப்ரவரி 2ஆம் தேதி அரசாணை 17 வெளியிட்டுள்ளனர். இதன் மூலம் கடந்த 25 ஆண்டு காலமாக தொழிலாளர்கள் பெற்று வந்த உரிமைகளை பறித்து அவர்களின் வயிற்றில் அடிக்கும் ஏற்பாட்டை செய்துள்ளனர்.
கடந்த கால தொழிலாளர் மற்றும் தொழிற்சங்க சட்டங்கள் ஆகியவற்றில் இல்லாத விதிமுறை களை கொண்டு வந்து, நிதி அமைச் சரும், ஆட்சியாளர்களும் மோடி அரசின் திட்டத்தை அப்படியே காப்பி அடித்து உள்ளனர். ஏழை, எளிய, உழைப்பாளி மக்களுக்கு எந்த ஒரு மானியமும் தர மாட்டோம் என்னும் மோடி அரசின் கொள்கையை இவர்கள் பின்பற்றுகின்றனர். நலவாரியத் தின் மூலம் ஓய்வூதியம் பெற்று வரும் 1 லட்சத்து 40 ஆயிரம் முதிய வர்களின் ஓய்வூதியத்தைப் பறிக் கும் செயலை செய்துள்ளனர். கட்டு மானம் மற்றும் 17 நல வாரியங் களில் பதிவு செய்யப்பட்டுள்ள 50 லட்சம் தொழிலாளர்களில் ஒரு லட்சத்து 40 ஆயிரம் பேர் ஓய்வூ தியம் பெற்று வருகின்றனர். ஆய்வு செய்கிறோம் என்ற பெயரில் ரூ. 10 லட்சத்திற்கு மேல் சொத்து வைத்திருக்கக் கூடாது, இரண்டு சமையல் எரிவாயு சிலிண்டர் வைத் திருக்கக் கூடாது. அப்படி இருந் தால் ஓய்வூதியம் கிடையாது என்று கூறுகின்றனர். நகர்ப்புறத்தில் ஒரு சென்ட் காலி இடம் வைத்திருந் தாலே பல லட்சம் மதிப்பு பெறும். நலவாரியமே வீடு கட்டுவதற்கு ரூ. 4 லட்சம் நிதி தருகிறது. அப்படி இருக்க 10 லட்சத்திற்கு மேல் சொத்து வைத்திருக்கக் கூடாது என்ற நிபந்தனை சட்டவிரோ தமானது, அநீதியானது. 2 ஏக்கர், ஒரு ஏக்கர், அரை ஏக்கர் நிலம் வைத்திருந்தால் கூட அவர்கள் விண்ணப்பித்தால் ஓய்வூதியம் கிடையாது என்று கூறுகின்றனர். அரிசி கார்டுக்கு மட்டுமே பென் சன், சர்க்கரை கார்டு வைத்து இருந்தால் பென்ஷன் கிடையாது என்று சட்டத்தில் இல்லாத நடை முறைகளை தமிழ்நாடு அரசு உரு வாக்குகிறது.
இதுபோல் தொடர்ந்து தொழி லாளர் விரோத நடவடிக்கைகளை மேற்கொள்ளும் பொழுது தொழி லாளர்களை திரட்டி மிகப்பெரும் போராட்டங்களை நடத்த வேண் டியது வரும். சட்டரீதியாகவும் உயர்நீதிமன்றம், உச்ச நீதிமன்றத் தில் வழக்கு தொடுத்து, முறை சாரா தொழிலாளர்களின் கடைசி கால வாழ்க்கையை பாதுகாக்கவும் முயற்சி மேற்கொள்வோம். தொழிலாளர்கள் உரிமை யைப் பறிக்கும் ஆய்வு என்ற நடை முறையை கைவிட வேண்டும். உண்மைக்கு புறம்பாக தகவல் கொடுத்து யாரேனும் தவறான முறையில் பென்சன் பெற்றால் அவர்கள் மீது நடவடிக்கை எடுப் பதற்கு சிஐடியூ ஆட்சேபம் தெரி விக்காது. “கோழி எப்போது மேயும், குஞ்சுகளை கொத்திச் செல்ல லாம்!” என பறக்கும் கழுகை போல மோடி அரசு நல வாரியத்தை கலைக்கும் நிலையை உரு வாக்கத் துடிக்கிறது. நலவாரி யத்தில் ரூ. 45 ஆயிரம் கோடி நிதி இருக்கிறது. ஒரே தேசம், ஒரே மொழி, ஒரே பண்பாடு, ஒரே கலாச்சாரம் என சொல்லித் திரியும் மோடி அரசு, இந்த நல வாரியத் தையும் கார்ப்பரேட்டுகள் கையில் தூக்கி கொடுக்க துடிக்கிறது. ரூ. 45 ஆயிரம் கோடி நல வாரிய நிதியில் ஒரு சதவீதத்தை ஒதுக்கினாலே ஆட்டோ, சமையல், மோட்டார், உள்ளிட்ட இதர தொழில்களில் வேலை செய்யும் முறை சாரா தொழிலாளர்கள் வாழ்க்கையை பாதுகாக்க முடியும். ஓய்வூதி யத்தை ரூ. 3000 ஆக உயர்த்தவும், முதல் வகுப்பு முதல் கல்வி உதவித் தொகை வழங்கவும் வேண்டும் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளிக்கிறது. ஆனால் அதை அமலாக்க ஒன்றிய, மாநில அரசுகள் தயாராக இல்லை.
வாரிய கூட்டத்தில் பெண் தொழிலாளர்கள் 55 வயது அடையும் பொழுது ஓய்வூதியம் வழங்க வேண்டும், மற்ற தொழிலா ளர்களுக்கு 60 வயதில் ஓய்வூ தியம் அளிக்க வேண்டும், இயற்கை மரண நிதி வழங்க வேண்டும் என வாரிய கூட்டத்தில் முடிவு செய்யப் பட்டது. ஆனால் இதற்கு அரசு தரப்பில் பதில் இல்லை. தொழிலா ளர்கள் கோபத்தில் இருக்கின்ற னர். பொங்கல் பரிசு தொகுப்பு வழங் கும்பொழுது முறைசாரா தொழிலா ளர்களுக்கும் நல வாரியத்தில் பதிவு செய்திருப்பவருக்கு வழங்க வேண்டும் என்று கடந்த ஆண்டு அதிமுக ஆட்சி காலத்தில் கோரிக்கை வைத்தோம். அந்தக் கோரிக்கையை ஏற்று உடனே நலவாரியத்தில் முறைசாரா தொழிலாளர்களுக்கும் பொங்கல் தொகுப்பு வழங்கப்பட்டது. அப்படி கொடுத்ததை திமுக அரசு நிறுத் துவது சரியல்ல. நலவாரியத்தில் புதிய பதிவு களை, விசாரணை என்ற பெயரில் மூன்று லட்சம் பேரை, வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வரு கிறது. ஏற்கனவே பதிவு செய்த தொழிலாளர்களை ரேண்டம் செக்கப் என வெளியேற்ற நடவ டிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் தவறே செய்யாத தொழிலாளர்களுக்கு தண்டனை தருவது போல, தமிழக அரசின் நடவடிக்கை அமைந்துள்ளது.
35 மற்றும் 36 ஆவது நல வாரியக் கூட்டத்தில் பல்வேறு முடிவுகள் எடுக்கப்பட்டன. ஆனால் அதை அரசு அமல்படுத்துவதில்லை. கட்டிடத் தொழிலில் எந்த சித்தா ளாவது ஹெல்மெட் வேண்டும், காலணி சூ வேண்டும் என்று கேட்டார்களா? ஆனால் அதற்காக ரூ. 90 கோடி செலவு செய்திருக் கிறார்கள். ரூ.10 ஆயிரம், 15 ஆயிரம் மதிப்புள்ள லேப்டாப் மொத்தமாக வாங்கும் போது தமிழக அரசு இரண்டாயிரத்திற்கு கொள்முதல் செய்தது. ஆனால் ஷூ, தொப்பி ஆகியவற்றிற்கு ரூ. 4000 என விலை நிர்ணயித்து உள்ளனர். இதில் யார் கமிசன் அடிக்கிறார்கள்? பத்து ஆண்டுகள் வேலை செய்த தொழி லாளர்களுக்கு பயிற்சி அளிப்ப தாக வாரிய பணம் செலவு செய்யப் படுகிறது. 18 நல வாரியங்களுக்கு 41 மாவட்டங்களில் அலுவலகம், அதிகாரிகள், வாகனம் டீசல் செலவு என ஆண்டுக்கு ரூபாய் 150 கோடி செலவு செய்யப்படு கிறது. நீ அரிசி கொண்டு வா, நான் உமி கொண்டு வருகிறேன், இரு வரும் ஊதி, ஊதி சாப்பிடலாம் என்று சொல்லப்படுவதைப் போல, நல வாரிய தொழிலாளர்கள் பணத்தை அதிகார வர்க்கம் செலவு செய்கிறது. இப்போது நலவாரிய நிர்வாக செலவிற்கு நல வாரியத்தில் உள்ள தொழிலாளர் பணத்தில் 80 சதவீ தத்தை செலவு செய்ய வேண்டு மாம். அரசு 20 சதவீதம் தருமாம். இது சரியல்ல. நிர்வாக செலவை அரசு ஏற்க வேண்டும். பல ஆண்டுகளாக தொழிலாளர்கள் செலுத்திய பணத்தை நிர்வாக செலவு செய்யக் கூடாது. அவர்களுக்கு உரிய நல வாரிய பலன்களை வழங்க வேண்டும். கட்டுமான தொழிலாளர் களுக்கு டெல்லியில், கர்நாட காவில் ரூபாய் 3 ஆயிரம் ஓய்வூ தியம் தரப்படுகிறது. ஆனால் தமிழகத்தில் வாரிய கூட்டத் தில் பேசியும் கூட இது அமலாவ தில்லை. 4ஆம் தேதி (இன்று) நடை பெறும் வாரிய கூட்டத்தில் மீண்டும் இது வலியுறுத்தப்படும். இவ்வாறு டி.குமார் கூறினார்.