districts

img

குழந்தைகள் தின கொண்டாட்டம்

அவிநாசி,நவ.14- அவிநாசி அருகே காட்டுவளவு பகுதியில் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு பாலர் பூங்கா அமைப்பு மற்றும் கலை  நிகழ்ச்சிகள் அரங்கேற்றம் செய்தனர். அவிநாசி ஒன்றியம், வடுகபாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட காட்டுவளவு பகுதியில் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு பாலர் பூங்கா அமைப்பு உருவாக்குவது, குழந்தை களுக்கு தற்காப்பு கலைகள் பயிற்சி அளிப்பது குறித்து கலந்துரையாடல் நடைபெற்றது. இக்கூட்டத்தில் காட்டு வளவு, வடுகபாளையம், முத்து செட்டிபாளையம், உள்ளிட்ட  பகுதிகளைச் சேர்ந்த 6 வயது முதல் 16 வயது வரை ஆண்  மற்றும் பெண் குழந்தைகள் சுமார் 60க்கும் மேற்பட்டோர்  மூன்று மாதங்களில் சிலம்பம், வாள் வீசுவது, பறைய டித்தல், கதை சொல்லுதல் மற்றும் கதை கேட்பது, கணித  விளையாட்டு ஆகியவற்றிற்கு பயிற்சி வழங்கப்பட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக குழந்தைகள் தினத்தன்று காட்டு வளவு பகுதியில், பயின்று கொண்ட கலைகளை அரங் கேற்றம் செய்தனர். இதில் தமிழ்நாடு அறிவியல் இயக் கத்தின் சார்பில் மாவட்ட செயலாளர் கௌரி சங்கர், மாவட்ட  நிர்வாகி ஹரிகரன், ஒன்றிய பொறுப்பாளர்கள் ஆர். பழனிச் சாமி, அவிநாசியப்பன், தங்கராசு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.