districts

சென்னை புறநகர் மின்சார ரயில் சேவை தொடங்கியது

சென்னை, டிச.6- “மிக்ஜம்” புயல் காரணமாக நிறுத்தப்பட்ட சென்னை புறநகர் பகுதி களுக்கு மின்சார ரயில் சேவை தொடங்கியது “மிக்ஜம்” புயல் காரணமாக சென்னையில் ரயில்வே பாலங்கள் மற்றும் தண்டவாளங்களில் அபாய  அளவை தாண்டி மழைநீர் தேங்கிய தால் கடந்த 2 நாட்களாக சென்னை புற நகர் மின்சார ரயில் சேவை முற்றி லும் பாதிக்கப்பட்டது. இந்நிலையில் தமிழ்நாடு அரசின் துரித நிவாரண நடவடிக்கை காரணமாக புதனன்று  சென்னை மூர்மார்க்கெட் - ஆவடி - திருவள்ளூர் - அரக்கோணம் வழித்  தடத்தில் 1 மணி நேர கால இடைவெளி யில் மின்சார ரயில்கள் இயக்கப் பட்டன. சென்னை எழும்பூரில் இருந்து  தாம்பரம், செங்கல்பட்டு செல்வ தற்கு 30 நிமிடங்களுக்கு ஒரு ரயிலும்,  கடற்கரை - திருவள்ளூர், அரக்கோ ணம் மற்றும் சிந்தாதிரிப்பேட்டை - வேளச்சேரி இடையே 30 நிமிடங்க ளுக்கு ஒரு ரயிலும் இயக்கப்பட்டன. இதனால் பயணிகள் மகிழ்ச்சி யடைந்தனர்.