districts

கோயம்புத்தூர் முக்கிய செய்திகள்

பண மோசடி செய்த  நிறுவனங்கள் மீது வழக்கு

கோவை, நவ.10- பொதுமக்களிடையே கோடிக்கணக்கில் பணம் பெற்று மோசடி செய்த நிறுவனங்கள் மீது வழக்குப்பதிவு செய்யப் பட்டுள்ளதாகவும், இந்த நிறுவனத்தினரால் பாதிக்கப்பட்ட நபர்கள் தகுந்த ஆவணங்களுடன் புகார் அளிக்கலாம் என்றும்  கோவை மாநகர காவல் துறையினர் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து கோவை மாநகர காவல் துறை வெளியிட் டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, கோவை சாய்பாபா காலனி பகுதியில் ட்ரீம்ஸ் மேக்கர்ஸ் குளோபல்  பிரைவேட் லிமிட்டெட், காந்திபுரத்தில் ஏரோ டிரேடிங், போத்த னூரில் கொங்கு நாடு அன்னை சிட்ஸ் (பி) லிமிடெட் மற்றும்  சரவணம்பட்டியில் வின் வெல்த் இண்டர் நேசனல் ஆகிய 4  தனியார் நிறுவனங்கள் செயல்பட்டு வந்தன. இந்த நிறுவ னங்கள் பொதுமக்களிடமிருந்து கோடிக்கணக்கில் பணத்தை  முதலீடாக பெற்று அதிக வட்டி தருவதாகக்கூறி மோசடி செய்த தாக புகார் எழுந்தது. இதனைத்தொடர்ந்து கோயமுத்தூர் பொருளாதார குற்றப் பிரிவில் வழக்கு பதிவு செய்யப்பட்டு, விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. எனவே, மேற்கண்ட நிறுவனத்தினரால் பாதிக்கப்பட்ட நபர்கள் தகுந்த ஆவணங்களுடன் வரும் நவ.30 ஆம் தேதிக் குள் கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலக வளா கத்திலுள்ள பொருளாதார குற்றப்பிரிவை அணுகி புகார் அளிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கட்டாய திருமணம் செய்து  மாணவிக்கு பாலியல் தொல்லை

கோவை, நவ.10 - கோவையில் கல்லூரி மாணவியை கட்டாய திருமணம்  செய்து பாலியல் தொல்லை அளித்து வந்த வாலிபரை காவல்  துறையினர் கைது செய்து, சிறையில் அடைத்தனர். கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தை அடுத்த வஉசி நகரை சேர்ந்தவர் விஜய் (28). இவர் வேலைக்கு சென்று வரும் போது வெள்ளிப்பாளையம்  பகுதியைச் சேர்ந்த 17 வயது கல்லூரி மாணவியிடம் பழக்கம் ஏற்பட்டது.  இருவரும் நண்பர்களாக பழகி  உள்ளனர். அப்போது விஜய்,  கல்லூரி மாணவியிடம் நாம் திருமணம் செய்து கொள்ளலாம்  என கேட்டுள்ளார். அதற்கு அந்த மாணவி கல்லூரி படிப்பை  முடித்துவிட்டு பெற்றோரின் சம்மதத்துடன் திருமணம் செய்து  கொள்ளாம் என்று தெரிவித்துள்ளார். ஆனால், விஜய்  மாணவியிடம் திருமணத்திற்கு தொடர்ந்து வற்புறுத்தி உள்ளார். இதற்கிடையே விஜய் மாணவியை மேட்டுப் பாளையம் பகுதியிலுள்ள ஒரு கோவிலுக்கு அழைத்து சென்று, மாணவியை கட்டாயப்படுத்தி திருமணம் செய்துள்ளார். அதன்பின் விஜய் மாணவியை அடிக்கடி சந்தித்து, பாலியல் தொல்லை கொடுத்து வந்தார். தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்ததால் மாணவி  அவரிடமிருந்து விலகி சென்றார். ஆனாலும், அவர்  அந்த மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதனால் மாணவி மேட்டுப்பாளையம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் காவல் துறையினர் விஜயை பிடித்து விசாரணை மேற்கொண்டனர். அதில், அந்த வாலி பருக்கு ஏற்கனவே திருமணமாகி 2 குழந்தைகள் இருப்பது  தெரியவந்தது. இதையடுத்து போலீசார் விஜய் மீது போக்சோ சட்டத்தின்  கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். இதன்பின் அவரை நீதிமன்றத்தில் நேர்நிறுத்தி சிறையில் அடைந்தனர்.

குரூப் 2 தேர்வு – சிறுபான்மை மக்கள் நலக்குழுவின் பயிற்சி மையத்தில் பயின்ற மாணவர்கள் தேர்ச்சி

ஈரோடு, நவ.10- தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழுவின் சார்பில் நடத்தப்பட்ட டிஎன்பிஎஸ்சி குரூப் 2 பயிற்சி வகுப்பில் பயின்ற  மாணவிகள் முதல்நிலை தேர்வில் தேர்ச்சியடைந்துள் ளனர். தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழுவின் சார்பில் ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் பேருந்து நிலையம் அருகில் உள்ள பாஷா டியூசன் சென்டரில்  போட்டித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி மையம் நடத்தப்பட்டு வருகிறது. அரசு பணியில் இருப்பவர்கள், கல்லூரி பேராசியர்கள், முற்போக்காளர்கள் இம்மையத் திற்கு வந்து வகுப்புகளை நடத்துகின்றனர்.  இப்பயிற்சி பள்ளியில் பயின்ற கோபிசெட்டிபாளை யத்தை சேர்ந்த ஹாஜிரா பானு மற்றும் சத்தியமங்கலத்தை சேர்ந்த ஐஸ்வர்யா ஆகிய மாணவிகள் சமீபத்தில் நடந்த டிஎன்பிஎஸ்சி குருப் 2 தேர்வில் வெற்றி பெற்றுள்ளனர். இது போல கடந்தாண்டு நடைபெற்ற குரூப் 4 தேர்வு வெற்றி பெற்று  இருவர் அரசு பணிக்குச் சென்றுள்ளனர்.  இந்நிலையில், வகுப்பறைகள் இலவசமாக அனுமதித் தவர்க்கும், அர்ப்பணிப்பு உணர்வுடன் பாடம் நடத்திய வகுப்பு  ஆசிரியர்களுக்கும், ஆர்வமுடன் பயின்று மாணவர்க ளுக்கும், வெற்றி பெற்றவர்களுக்கும் தமிழ்நாடு சிறு பான்மை மக்கள் நலக்குழுவின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர்  ஹாத்திம்தாய் மற்றும் மாநில உதவி தலைவர் ப.மாரிமுத்து உள்ளிட்டோர் வாழ்த்துக்களை தெரிவித்தனர். 

சுயவிளம்பரம் தேடும் ஊராட்சி தலைவர்

ஈரோடு, நவ. 10- நிர்வாக நடைமுறையை பின்பற்றாமல் சுயவிளம்பரம் தேடும் தொட்டிபாளையம் ஊராட்சி தலைவர் ஈடுபட் டுள்ளார் என நெடுஞ்சாலைத்துறையினர் குற்றம்சாட் டியுள்ளனர்.  ஈரோடு மாவட்டம், பவானி ஊராட்சி ஒன்றியத் திற்குட்பட்ட பவானி - அந்தியூர் சாலையில் செலம்பகவு ண்டன்பாளையத்தில் சாலையில் குழாய் உடைந்து நீர் வீணாகி வருகிறது. இதுகுறித்து ஒப்பந்ததாரரை அழைத்து சரி செய்வதாக நெடுஞ்சாலைத்துறையினர் தெரிவித் துள்ளனர்.  ஆனால், குடிநீர் வடிகால் வாரிய செயற்பொறியாளரோ, தொட்டிபாளையம் ஊராட்சி தலைவரோ எவருமே குழாய்  உடைப்பை சரி செய்ய எந்த தகவலும் அளிக்கவில்லை. ஆனால், இதற்கு மாறாக சுயவிளம்பரம் தேடுவதற்காக ஊராட்சி தலைவர் தவறான தகவல்களை அளித்துள்ளதாக நெடுஞ்சாலைத்துறையினரை குற்றம் சாட்டியுள்ளனர்.

தாராபுரம், காங்கயம் சட்டமன்ற தொகுதி  வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு

தாராபுரம், நவ.10-  தாராபுரம் மற்றும் காங்கயம் சட்டமன்ற தொகுதிகளுக்கான வரைவு வாக்காளர் பட்டி யலை தேர்தல் அதிகாரியும், தாராபுரம் கோட்டாட்சியருமான குமரவேல் அரசியல் கட்சியினர் முன்னிலையில் வெளியிட்டார். நிகழ்ச்சியில் தாராபுரம் வட்டாட்சியர் முரு கேஸ்வரி, காங்கயம் வட்டாட்சியர் புவனேஸ் வரி தேர்தல் துணை வட்டாட்சியர்கள் ராதா, ஈஸ்வரமூர்த்தி மற்றும் அரசியல் கட்சிகள் சார்பில் தாராபுரம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தாலூக்கா செயலாளர் என்.கனகராஜ் திமுக நகர அவை தலைவர் கதிரவன், அதிமுக சார் பில் நகர இளைஞரணி செயலாளர் ராஜேந்தி ரன், காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் உள் ளிட்ட பல்வேறு அரசியல் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இதுகுறித்து தேர்தல் அதிகாரியும், தாரா புரம் கோட்டாட்சியருமான குமரவேல் கூறு கையில், வரும் நவம்பர் 12 மற்றும் 13 ஆம் தேதி, டிசம்பர் மாதம் 26, 27 ஆகிய தேதிகளில் இரு சட்டமன்ற தொகுதிகளுக்குட்பட்ட அனைத்து வாக்குச் சாவடிகளிலும் வரைவு  வாக்காளர் பட்டியல் பொதுமக்கள் பார் வைக்கு வைக்கப்படும். பொதுமக்கள் வரைவு வாக்காளர் பட்டியலை பார்த்து வாக் காளர் பட்டியலில் புதிதாக சேர்க்க, வாக்கா ளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்க, வாக்காளர் பட்டிய லில் பெயரினை நீக்க வாக்காளர் பட்டியலில் ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு குடி யிருப்பு மாற்றம், முகவரி மாற்றம் திருத்தங் களை மேற்கொள்ளுதல் புகைப்பட மாற்றம் மற்றும் நகல் வாக்காளர் அடையாள அட்டை பெறுதல் உள்பட பல்வேறு பணிகளை உரிய படிவங்களை பெற்று சிறப்பு முகாம்களில் விண்ணப்பங்களை அளிக்கலாம் என தெரி வித்தார்.

சாலை விபத்தில் இளைஞர் பலி

அவிநாசி, நவ.10- ஈரோடு மாவட்டம், புளியம்பட்டி, சுல்தான்  வீதியை சேர்ந்தவர் ஆறுமுகம் மகன் சுரேஷ் கிருஷ்ணா(24). இவர் அன்னூர் அருகே பொங்கலூரில் தனியார் நிறுவனத்தில் பணி யாற்றி வந்தார். இந்நிலையில் புளியம்பட்டி யிலிருந்து அன்னூர் நோக்கி இருசக்கர வாக னத்தில் சென்று கொண்டிருந்துள்ளார். சேவூர், பெத்தநாயக்கன்பாளையம் அருகே வரும் போது, அன்னூரிலிருந்து, அந்தியூருக்கு நோக்கி சென்ற லாரியும், இருசக்கர வாகன மும் மோதி விபத்துக்குள்ளானது. இதில் பலத்த காயமடைந்த சுரேஷ்கிருஷ்ணா சம் பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதைய டுத்து சேவூர் போலீசார்  லாரியை ஓட்டி வந்த  அந்தியூர் சின்னத்தம்பிபாளையம் புதுமேட்டூ ரைச் சேர்ந்த அருள்(26) மீது வழக்கு பதிவு செய்து உள்ளனர்.

ரூ.36 லட்சத்துக்கு பருத்தி ஏலம்

அவிநாசி, நவ.10 - அவிநாசி வேளாண்மை உற்பத்தியாளர் கூட்டுறவு விற் பனை சங்கத்தில் புதனன்று பருத்தி ஏலம் நடைபெற்றது. இந்த  ஏலத்துக்கு 1420 பருத்தி மூட்டைகள் கொண்டு வரப்பட்டன. இதில், ஆர்.சி.எச்.ரகப்பருத்தி குவிண்டால் ரூ. 8,000 முதல் ரூ.10,190 வரையிலும், மட்டரக (கொட்டு ரக) பருத்தி குவிண் டால் ரூ.2,000 முதல் ரூ.4,000 வரையிலும் ஏலம் போனது. மொத்தம் ரூ.36 லட்சத்துக்கு வர்த்தகம் நடைபெற்றது.

பால் பாக்கியை விரைந்து வழங்க பால் உற்பத்தியாளர் சங்கம் வலியுறுத்தல்

தருமபுரி, நவ.10- பால் பாக்கியை உடனடியாக வழங்குமாறு தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது. தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தரும புரி மாவட்ட செயலாளர் எஸ்.தீர்த்தகிரி, மாவட்ட தலைவர் அன்பு ஆகியோர்  விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதா வது, தருமபுரி மாவட்டம் விவசாயம் சார்ந்த மாவட்டமா கும். இங்கு தொழிற்சாலைகள் இல்லாததால் விவசாயத் திற்கு அடுத்தபடியாக கால்நடை வளர்ப்பில் ஈடுபட்டு வருகின் றனர். குறிப்பாக கறவை மாடுகள் வளர்த்து இதன் பாலை  கூட்டுறவு சொஸைட்டிக்கு வழங்கி வருகின்றனர். சொஸைட் டிகளில் வாரம் ஒருமுறை பால் உற்பத்தியாளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்வது வழக்கம். தற்போது 3 வாரங்களாக பால் உற்பத்தியாளர்களுக்கு பணம் வழங்கப்படவில்லை. இத னால் பலர் குடும்பம் ‌நடத்தவே சிரமப்படுகின்றனர். எனவே  மாவட்ட நிர்வாகம் தலையிட்டு, பால் உற்பத்தியாளர்களுக்கு வழங்க வேண்டிய பால் பாக்கிக்கான பணத்தை பட்டுவாடா  செய்ய வேண்டும்.  தருமபுரி மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன் றியத்தில் 259 பதிவு பெற்ற சங்கங்கள் செயல்படுகிறது. இச்சங் கத்தில் உள்ள 13273 பதிவு பெற்ற பால்  உற்பத்தியாளர்கள்  மூலம் நாளொன்றுக்கு சராசரியாக 140000 லிட்டர் தரமான பால்  33 குளிர்விப்பு நிலையம் மூலம் கொள்முதல் செய்யப்படு கிறது. இதில் 120000 லிட்டர் பால் சென்னை இணையத்திற்கு அனுப்பப்படுகிறது. சராசரியாக 6000 லிட்டர் பால் உள்ளுர்  விற்பனைக்கு போக மீதம் 14000 லிட்டர் பாலிருந்து வெண் ணெய் மற்றும் பால் பவுடராக உருமாற்றம் செய்யப்படு கிறது. மாவட்டத்தில் பால் உற்பத்தி அதிகமாக இருப்பதால் பால்  கொள்முதலை 5 லட்சம் லிட்டராக உயர்த்தவேண்டும். ஒன்றி யங்களில் பல்வேறு வகைகளில் முறைகேடு நடைபெறு கிறது இதனை தடுக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க  வேண்டும். தமிழ்நாடு அரசு பால் கொள்முதல் விலையை ரூ.3 உயர்த்தியுள்ளது. இந்த விலை உயர்வு ஏமாற்றம் அளிக் கிறது. எனவே பசுமபாலுக்கு ரூ.42ம், எருமை பாலுக்கு ரூ.51 என  உயர்த்தி வழங்க வேண்டும். பால் சொஸைட்டியில் பால் கொள்முதல் செய்தவுடன் பாலின் அளவு தரம் கையேடடில் குறித்து கொடுக்க வேண்டும். கால்நடைகளுக்கு 50 சத மானி யத்தில் தீவனம் வழங்க வேண்டும். ஆரம்ப சங்க பணியாளர் களுக்கு சம்பள உயர்வு, பணி பாதுகாப்பு வழங்க வேண்டும்.  சத்துணவு திட்டத்தில் ஆவின் பால் பொருட்களை சேர்த்து  வழங்க வேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கோவை: 33 இடங்களில் என்ஐஏ சோதனை

கோவை, நவ.10- கோவை கார் வெடிப்பு சம்பவத்தை தொடர்ந்து, கோவை மாநகர பகுதியில் என்ஐஏ மற்றும் மாநகர போலீசார் இணைந்து 33 இடங்களில் சோதனை மேற்கொண்டு வரு கின்றனர். கோவை, கோட்டைமேடு பகுதியில் நடைபெற்ற கார்  வெடிப்பு சம்பவத்தில் ஜமேஷா முபின் என்பவர் உயிரிழ;e தார். இதைத்தொடர்ந்து முபினுடன் தொடர்பிலிருந்த ஆறு பேர் கைது செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த வழக்கு தற்போது தேசிய புலனாய்வு முகமைக்கு (என்.ஐ.ஏ) மாற்றப்பட்டுள்ளது. கோவை மாநகரம் முழுவ தும் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்ற னர். இதனிடையே வியாழனன்று காலை முதல் தேசிய புல னாய்வு அதிகாரிகள் மற்றும் கோவை மாநகர போலீசார் இணைந்து மாநகரில் 33 இடங்களில் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். தமிழகம் முழுவதும் 45க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது. இதில், கார் வெடிப்பு சம்ப வத்தில் உயிரிழந்த ஜமேஷா முபினின் சகோதரிகள், உறவி னர்கள் மற்றும் நண்பர்கள் வீடுகளில் சோதனை நடைபெற்று வருவதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.

கோவை: தண்டவாளத்தில் சிக்கிய லாரி 100 மீட்டருக்கு முன்பு நிறுத்தப்பட்ட ரயிலால் பெரும் விபத்து தவிர்ப்பு

கோவை, நவ.10- கோவை - மேட்டுப்பாளையம் பயணிகள்  ரயில் வந்த நேரத்தில், துடியலூர் ரயில்வே கேட் பகுதியில் சரக்கு ஏற்றி வந்த லாரி புத னன்று இரவு, தண்டவாளத்தின் நடுவே சிக்கி பழுதடைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. கோவை - மேட்டுப்பாளையம் இடையே  உள்ள ரயில் தண்டவாளங்கள் ரயில்களின் வேகத்தை அதிகரிப்பதற்காக கடந்த 2 மாதங் களாக புதிதாக மாற்றும் பணிகள் நடை பெற்று வருகிறது. தற்போது மாற்றப்பட் டுள்ள தண்டவாளங்கள் ஏற்கனவே இருந்த தண்டவாளங்களில் உயரத்தைவிட ஒரு அடி  வரை உயரமாக உள்ளது. அது அங்கு ஏற்க னவே இருந்த தார்ச்சாலையிலிருந்து உயர்த்தி அமைக்கப்பட்டுள்ளதால், அவ்வழி யாக செல்லும் அனைத்து வாகன ஓட்டிகளும்  மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வருகின்ற னர். இருசக்கர வாகன ஓட்டிகள் கீழே விழுந்து காயமடைகின்றனர். மேலும், கார்களின் அடிப்பகுதி தண்டாவாளங்களில் உரசி சேத மடைகின்றன. அதேபோல் அதிக பாரத்துடன் வரும் லாரிகள் தண்டவாளங்களை கடக்க  முடியாமல் ஆக்சில் உடைந்து பழுதடைந்து அங்கேயே நிற்கின்றன. இந்நிலையில், புதனன்று இரவு 7 மணியள வில் மேட்டுப்பாளையத்திலிருந்து கோவை  செல்லும் பயணிகள் ரயிலுக்காக துடியலூர் ரயில்வே கேட் மூடப்படும் நேரத்தில் அவ்வழி யாக சுமார் 30 டன் எடையுள்ள சரக்கு ஏற்றி வந்த லாரி தண்டவாளத்தை கடக்க முற்பட் டது. அப்போது தண்டவாள உயரம் கார ணமாக தண்டவாளத்தை கடக்க முடியாமல் அப்படியே தண்டவாளத்தின் நடுவே பழு தாகி நின்றுவிட்டது. அந்த நேரம் வந்த கோவை - மேட்டுப்பாளையம் பயணிகள் ரயி லுக்கு கேட் கீப்பர் உடனடியாக சிகப்பு விளக்கை காண்பித்து லாரிக்கு 100 மீட்டர் முன்பாக ரயிலை நிறுத்தினார். இதன் காரண மாக லாரி மீது ரயில் மோதும் மிகப்பெரிய விபத்து தவிர்க்கப்பட்டது. இதையடுத்து அங்கிருந்த பொதுமக்கள் லாரியை தண்டவாளத்திலிருந்து நகர்த்த முற் பட்டனர். ஆனால், லாரியில் 30 டன் அளவிற்கு சரக்கு இருந்ததால் ஒரு மணி நேரம் கடந்தும் நகர்த்த முடியவில்லை. இதையடுத்து லாரி யின் பின் பக்கத்தில் இருந்து மற்றொரு டெம்போ மூலம் தள்ளி தண்டவாளத்தில் இருந்து லாரியை பொதுமக்கள் நகர்த்தி னர். இதையடுத்து உடனடியாக ரயில்வே கேட் மூடப்பட்டு அங்கி காத்திருந்த பயணிகள் ரயில் ஒரு மணி நேர தாமதத்திற்கு பின் கோவை நோக்கி புறப்பட்டு சென்றது. இதே ரயில்வே கேட் பகுதியில் ஏற்கனவே தண்டவாள உயரம் காரணமாக 3 லாரிகள் தண்டவாளத்தில் நடுவே பழுதாகி நின்றுள் ளது. எனவே, உடனடியாக தண்டவளத்தின் உயரத்திற்கு ஏற்றவாறு சாலையின் உயரத் தையும் அதிகரிக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சிறுத்தை உயிரிழப்பு

உதகை, நவ.10- கோத்தகிரி அருகே காம ராஜர் நகர் பகுதியில் சிறுத்தை ஒன்று இறந்து  கிடப்பதாக அப்பகுதி மக்கள் வனத்துறையினருக்கு தக வல் அளித்தனர். அதன் பேரில் வனச்சரகர் செல்வ குமார் தலைமையிலான வனத் துறையினர் சம்பவ இடத் திற்கு சென்று ஆய்வு செய்த னர். இதன்பின் முதுமலை புலிகள் காப்பக கால்நடை மருத்துவர் ராஜேஷ், கோத்த கிரி கால்நடை மருத்துவர் ராஜன் ஆகியோர் வரவழைக் கப்பட்டு, உதவி வன அலுவ லர் சரவணகுமார் முன்னி லையில் சிறுத்தையின் உடல் பிரேத பரிசோதனை செய் யப்பட்டு, அதே பகுதியில் எரிக்கப்பட்டது. இதுகுறித்து வனத்துறையினர் விசா ரணை மேற்கொண்டு வரு கின்றனர்.