கோவை, நவ.25- வெள்ளானைப்பட்டி ஊராட்சித் தலைவர் மற்றும் துணைத்தலைவரின் காசோலையில் கையொப்பமிடும் அதிகாரத்தை ரத்து செய்து கோவை ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். கோவை மாவட்டம், சர்க்கார் சாமக்குளம் ஒன்றியம், வெள்ளானைப்பட்டி ஊராட்சித் தலைவராக கவிதா, துணைத்தலைவராக வி. ராஜன் ஆகியோர் உள்ளனர். இதில், பட்டியல் சமூகத்தை சேர்ந்த கவிதா தலைவராக இருப் பதால் அவருக்கும், துணைத்தலைவருக்கும் கருத்து வேற்றுமை காரணமாக ஊராட்சி யில் அடிப்படை வசதிகள், பொது சுகாதாரம், தார்ச்சாலை வசதி, 100 நாள் வேலை வாய்ப் புத்திட்டம் உள்ளிட்ட பல்வேறு வளா்ச்சிப் பணிகளில் கவனம் செலுத்தாமல் இருவரும் தனித்தனி குழுக்களாக செயல்பட்டு வந்த தாக கூறப்படுகிறது. மேலும், துணைத்தலை வர் தன்னிச்சையாக செயல்பட்டு, தலைவ ரின் ஆலோசனையை கேட்காமல் ஊராட் சியை தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்ததா கக் கூறப்படுகிறது. இதனால், ஊராட்சிப் பணி களில் முழுமையாக செயல்பட முடியாமல் துணைத்தலைவர் தடுத்து வருகிறார் என ஊராட்சித் தலைவர் கவிதா மாவட்ட ஆட்சி யரிடம் புகாரளித்தார். அதேபோல, ஊராட்சி துணைத்தலைவர் ராஜனும், தலைவர் கவிதா மீது புகாரளித்திருந்தார். இதுதொடர்பாக விசாரணை நடத்தி அறிக்கை அளிக்குமாறு ஊராட்சி உதவி இயக்குநருக்கு மாவட்ட ஆட்சியர் உத்தர விட்டார். இதனடிப்படையில் விசாரணை அதி காரி நியமனம் செய்யப்பட்டு, வெள்ளா னைப்பட்டி ஊராட்சியில் ஆய்வு மேற்கொள் ளப்பட்டது. அதில் கடந்த 2 ஆண்டுகளாக அரசு ஒதுக்கிய நிதியில் பல்வேறு முறைகேடுகள், வளர்ச்சிப் பணிகளில் விதிமீறல், அடிப்படை வசதிகள் செய்யாதது உள்ளிட்ட பல்வேறு புகார்கள் உறுதி செய்யப்பட்டன. இதுதொ டர்பான அறிக்கை மாவட்ட ஆட்சியருக்கு அளிக்கப்பட்டது. இதனையடுத்து வெள்ளா னைப்பட்டி ஊராட்சித் தலைவர் கவிதா, துணைத்தலைவர் ராஜன் ஆகியோரின் காசோலையில் கையொப்பமிடும் அதிகா ரத்தை ரத்து செய்தும், வார்டு உறுப்பினர் கூட்டம் நடத்த தடை விதித்தும் மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி உத்தரவிட்டார். மேலும், ஊராட்சியில் வளர்ச்சிப்பணிகளை மேற்கொள்ள சிறப்பு அதிகாரியையும் நிய மித்து உத்தரவு பிறப்பித்துள்ளார்.