ஈரோடு, பிப். 25- கடந்த ஆட்சியில் கொண்டு வந்த வருவாய் பங்கீட்டு முறையை ரத்து செய்து, இந்தாண்டே கரும்பு டன்னுக்கு ரூ.4 ஆயிரம் விலை வழங்கிட வேண்டும் என வலியுறுத்தி தமிழ்நாடு முதல்வருக்கு மனு அனுப்பும் இயக்கம் நடை பெற்றது. கடந்த ஆட்சியில் 2018 ல்கொண்டு வந்த வருவாய் பங் கீட்டு முறையை ரத்து செய்ய வேண்டும். இந்தாண்டே டன் னுக்கு ரூ.4 ஆயிரம் வழங்க வேண்டும். வெட்டுக்கூலி ரூ.1400 வரை உயர்ந்துள்ள நிலையில் மாநில அரசு முத்தரப்பு கூட் டத்தை நடத்தி வெட்டுக்கூலியை நிர்ணயம் செய்ய வேண்டும். 2013-14 முதல் 2016-17 வரை மாநில அரசின் பரிந்துரை விலை யான ரூ.36 கோடியை பாக்கி வைத்துள்ள பண்ணாரி அம்மன் ஆலையிடமிருந்து பெற்றுத் தர வேண்டும். ஆரூரான் ஆலை பிரச்சனையில் உரிய தீர்வு காணப்பட வேண்டும் உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்தனர். முன்னதாக, தமிழ்நாடு முதல்வருக்கு கடிதம் அனுப்பும் இயக்கம் வடக்கு பேட்டை தபால் அலுவலகத்தில் நடை பெற்றது. துணை தலைவர் திருமூர்த்தி தலைமை ஏற்றார். தலைவர் பி.கணேஷ் கடிதம் அனுப்பும் இயக்கத்தை தொடங்கி வைத்தார். செயலாளர் எஸ்.முத்துசாமி நிறைவுரை யாற்றினார். முடிவில், துணைச்செயலாளர் எம்.சதீஸ்ராஜ் நன்றி கூறினார்.