சேலம், ஜூன் 21- மேற்கு வங்க மாநிலத்தில் தொடர்ந்து சிபிஎம் தலை வர்கள் மீது நடத்தப்படும் கொடூர தாக்குதல்களை கண்டித்து சிபிஎம் சேலம் மாநகர கிழக்கு கமிட்டி சார்பாக தாதகாப் பட்டி பகுதியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மேற்கு வங்க மாநிலத்தில் திரிணாமுல் காங்கிரஸ் குண் டர்களால், சிபிஎம் கட்சி தலைவர்கள் மற்றும் உறுப்பினர் கள் மீது கடந்த சில மாதங்களாக கடுமையான தாக்குதல் கள் நடத்தப்பட்டு வருகிறது. தேர்தல் களத்தில் ஈடுபடும் வேட்பாளர்களையும் கட்சி தொண்டர்களை தாக்குவது, துப் பாக்கியால் சுடும் அசம்பாவிதங்கள் தொடர்ந்து நடைபெறு கிறது. மேற்கு வங்க மாநிலத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி யின் குண்டர்களின் இந்நடவடிக்கையை கண்டித்து, சிபிஎம் சேலம் மாநகர கிழக்கு குழு சார்பாக தாதகாப்பட்டி பகுதியில் மாநகர குழு உறுப்பினர் வி.பெரியசாமி தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்டக்குழு உறுப்பி னர் ஆர்.வைரமணி, இடைக்கமிட்டி உறுப்பினர் பச்சமுத்து, ராஜேஷ், ஆகியோர் கண்டன உரையாற்றினர். இதில் பலர் கலந்து கொண்டு, ஆவேச முழக்கங்களை எழுப்பினர்.