districts

img

முறையாக குடிநீர் வழங்க கோரி தாராபுரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் முற்றுகை போராட்டம்

தாராபுரம், ஜூலை 1 - தாராபுரம் ஊராட்சி ஒன்றியம் கவுண்டச்சி புதூர் ஊராட்சிக்கு உட் பட்ட பாலசுப்பிரமணியம் நகர், அம் மாபட்டி மற்றும் சமத்தூர்  உள்ளிட்ட பகுதிகளுக்கு ஊராட்சி நிர்வாகம்  முறையான குடிநீர் வழங்காததை கண்டித்து 50க்கும் மேற்பட்ட பொது மக்கள் ஊராட்சி ஒன்றிய அலுவல கத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.  இதுகுறித்து பொதுமக்கள் தரப் பில் கூறுகையில், பாலசுப்பிரமணி யம் நகரில் நூற்றுக்கு மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகிறோம். எங்களுக்கு ஒரு மாத காலமாக கவுண்டச்சிபுதூர் ஊராட்சி மூலம் வழங்கப்பட்டு வந்த காவேரி மற்றும்  அமராவதி தண்ணீர் வருவதில்லை.  இது தொடர்பாக ஊராட்சி தலைவ ரிடமும் ஊராட்சி செயலரிடம் நாங் கள் பலமுறை கூறியுள்ளோம். இது வரை எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை. மேலும் தண்ணீர் வருவ தற்கான எந்த ஒரு வேலையும் செய்ய வில்லை. ஊராட்சி தலைவர் செல்வி  ரமேஷ் என்பவர் மக்கள் பணி செய்ப வர். ஆனால் அவர் மக்களைப் பற்றி  எந்த கவலையும் இல்லாமல் உள் ளார். அதேபோல அரசு பணியாளர்  ஊராட்சி செயலளர் பெரியசாமியும் மக்களுக்கு எந்த உதவியும் செய்வ தில்லை.  மேலும், சமத்தூர் மற்றும் அம்மா பட்டி  பகுதியில் மின் மோட்டார் கழட்டி  ஆறு மாதமாகியும் இதுவரை மின்  மோட்டாரை ஊராட்சி நிர்வாகம் பொருத்தி மக்களுக்கு தண்ணீர் வழங்காமல், கிடப்பில் போட்டுள் ளனர். தற்போது வறட்சி காலம்  என்பதால் இந்த தருணத்தில்  நாங்கள்  தண்ணீரை விலை கொடுத்து வாங்கி பயன்படுத்தும் அவல நிலைக்கு தள் ளப்பட்டுள்ளோம். எனவே, பாலசுப்பி ரமணியம் நகர் மற்றும் சமத்தூர் பகு திக்கு முறையாக தண்ணீர் விநி யோகம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தனர்.