districts

மதநல்லிணக்கத்தை சீர்குலைக்க 24 மணி நேரமும் இயங்கும் பாஜக

கோவை, ஜூலை 1- சிறுபான்மை மக்களை பாதுகாப்பது தான் ஜனநாயகத்தின் உண்மையான அடை யாளம். அந்த ஜனநயாகத்தை, மதநல்லி ணக்கத்தை சீர்குலைக்க பாஜக 24 மணி நேரமும் முனைப்போடு இயங்கிக்கொண்டி ருப்பதாக சிபிஎம் மாநில செயற்குழு உறுப்பி னர் என்.குணசேகரன் குற்றம்சாட்டினார்.  சிறுபான்மை மக்கள் மீது நடைபெறும் தாக்குதல் மற்றும் சிறுபான்மை மக்கள் நலன் பாதிக்கும் வகையில் செயல்படும் ஒன்றிய  பாஜக அரசை கண்டித்து மார்க்சிஸ்ட் கட்சி யினர் நாடு தழுவிய ஆர்ப்பாட்டத்திற்கு அறை கூவல் விடுத்தது. இதன்ஒருபகுதியாக கோவை உக்கடம் பகுதியில் மார்க்சிஸ்ட் கட்சியின் சார் பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப் பாட்டத்தில் சிபிஎம் மாநில செயற்குழு உறுப் பினர் என்.குணசேகரன், சிபிஎம் கோவை  நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடரா ஜன், சிபிஎம் மாநிலக்குழு உறுப்பினர் சி.பத்ம நாபன் ஆகியோர் பங்கேற்று உரையாற்றி னர்.  முன்னதாக என்.குணசேகரன் பேசுகை யில், சிறுபான்மை மக்கள் அனைத்து கிரா மங்களிலும், நகரங்களிலும் இதர உழைப் பாளி மக்களோடு இணைந்து வாழ்ந்து வரு கிறார்கள். பல நூற்றாண்டு காலமாக இஸ்லா மிய மக்களின் கலாச்சாரம், இந்து மக்களின் கலாச்சாரத்தோடு மற்றும் பழக்க வழக்கங்க ளோடு இணைந்து இருக்கிறது. அதே போன்று இந்து மக்களின் கலாச்சாரமும், இஸ்லாமிய மக்களின் கலாச்சாரத்தில் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது. நமது நாட் டில் சகோதரர்களாக பெரும்பான்மை என்று சொல்லக்கூடிய உள்ள இந்துக்களும், சிறு பான்மை என்று சொல்லக்கூடிய மதச்சிறு பான்மையினரும் வாழ்ந்து கொண்டு இருக் கின்றனர். 

ஆனால் கடந்த 8 ஆண்டுகாலமாக பாஜக தலைமையிலான மோடி அரசும், ஆர்எஸ்எஸ் சங்பரிவார அமைப்புகளும் வலுவாக நீடித்து கொண்டு இருக்கிற மதநல்லிணக்கத்தை சீர்குலைக்கிறது. ஒற்றுமையை சீர்குலைக்க 24 மணி நேரமும் முனைப்போடு செயல்பட்டு கொண்டு இருக்கிறது. உலகளவில் அங்கீ கரிக்கப்பட்ட ஒரு நாட்டில் ஜனநாயகம் இருப் பதற்கு அடையாளம் தேர்தலாக கருதப்படு கிறது. ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை தேர் தல் நடத்தி, பிரதிநிதிகளை தேர்ந்து எடுப்பது மட்டும் ஜனநாயகம் அல்ல. ஜனநாயகத்தின் அடிப்படை அம்சமே ஒரு நாடு எந்த அளவுக்கு சிறுபான்மை மக்களை கண்ணும் கருத்து மாக பார்த்துக் கொள்கிறது என்பதில்தான் உள்ளது.  ஏனென்றால் சிறுபான்மை என்கிற கார ணத்தினாலே, பெருபான்மையால் அடைக்கி  ஒடுக்கப்படும் ஆபத்து எப்போதும் இருக்கி றது. ஜனநாயகம் நீடிக்க வேண்டுமென்றால் அவர்களுடைய உரிமையை பாதுகாத்து, அச்சத்தை போக்க வேண்டும். பாதுகாப்பற்ற  உணர்வு அவர்களுக்கு வந்துவிட்டால், ஜன நாயகம் செத்துவிட்டது என்று அர்த்தம். நாடு முழுவதும் தேச ஒற்றுமை என்பது கேள்விக் குறியான ஒன்றாக உள்ளது. இந்தியாவில் இஸ்லாமியர்கள் எங்கோ தாக்கப்படுகிறார் கள் என்று சொன்னால், இந்துக்கள் கவலை கொள்ளாமல் இருக்க முடியாது. ஏனெறால் அதனை தீவிரவாத இயக்கங்கள் பயன்ப டுத்திக் கொள்ளும். இதனால், இந்தியாவில் மத நல்லிணக்கம் சீர்குலைய  வாய்ப்புள்ளது. எனவே, ஒவ்வொரு படுகொலையும் இந்தி யாவில் வசிக்கக்கூடிய இந்துக்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பு மக்களுக்கும் ஆபத்து என் பதை உணர வேண்டும். 

பாஜகவின் முக்கிய தலைவர்கள், இஸ் லாமிய மதத்தை கொச்சைப்படுத்துகிறார் கள். இதனால், நீண்ட காலமாக நம்முடன் உறவு வைத்திருக்கும் அரபு நாடுகள் கண்டிக் கும் சூழல் ஏற்பட்டது- இப்படி ஒரு சூழ்நிலை வந்தபோது, இந்திய பொருளாதாரம் கேள் விக்குறியாக உள்ளது.  இஸ்லாமிய மக்களின் வாழ்விடத்தை அப்புறப்படுத்துகிறார்கள். அவர்களது குடி யிருப்பை அகற்றுகிறார்கள். தில்லியில் ஜஹாங்பூரில் புல்டோசர் வைத்து இஸ்லா மிய மக்களின் குடியிருப்புகளை தகர்க்கும் போது, அன்றைக்கு ஒரு அரசியல் கட்சியின ரும் முன் வரவில்லை. மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் பிருந்தாகாரத், “என்னை தகர்த்து விட்டு பின்னர் அவர்களது குடியிருப்பை தக ருங்கள்” என்று சொன்னார். தங்களுடைய வெறுப்பு அரசியலை கொண்டு செல்வதற்கு சட்டத்துறை, அமலாக்கத்துறை ஆகிய வற்றை இந்த ஒன்றிய அரசாங்கம் பயன்ப டுத்தி வருகிறது. பாசிச அரசிற்கெதிராக அனைத்து தரப்பு மக்களையும் ஒன்றினைத்து வலுவான மக்கள் ஒற்றுமையை கட்டியெ ழுப்புவோம், என்றார்.