districts

img

கேரள லாட்டரி விற்பனை செய்த பாஜக நிர்வாகி கைது

கோவை, நவ.12- கோவையில் கேரள லாட்டரி விற்பனை செய்த பாஜக நிர்வாகி கைது செய் யப்பட்டுள்ளார். கோவை, காந்திபுரம் ராம்  நகர் பகுதியில் காட்டூர் போலீ சார் ரோந்து பணியில்  ஈடு பட்டனர். அப்போது அங்கு  லாட்டரி சீட்டு விற்பனையில் செய்த நபரை பிடித்து விசா ரணை செய்தனர்.  அதில் அவர் சாய்பாபா காலனி பகுதியை சேர்ந்த சபரி பாலன் (32)  என்பதும், கோவை பாஜக  மாவட்ட இளைஞர் அணி செயலாளர் என்பதும் தெரிய வந்தது.  இதையடுத்து, அவரை கைது செய்த போலீசார் அவரிட மிருந்து 10 கேரளா லாட்டரி சீட்டுகள் மற்றும் ரூ.6400-யை பறி முதல் செய்தனர். பின்னர் அவரை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.