திருப்பூர், அக். 3 - ஒன்றிய மோடி அரசு அளித்த வாக் குறுதிகளை நிறைவேற்றாதது பற்றி இடுவாய் கிராம சபையில் கேள்வி எழுப்பியதால், பாஜகவினர் தகராறு செய்து தாக்க முற்பட்டனர். இடுவாய் ஊராட்சி ஆட்டையம் பாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநி லைப் பள்ளி வளாகத்தில் ஞாயி றன்று நடைபெற்ற கிராம சபைக்கு, ஊராட்சி மன்ற தலைவர் கே. கணேசன் தலைமை வகித்தார். இக் கூட்டத்தில் திருப்பூர் தெற்கு வட்டாட் சியர் கோவிந்தராஜன், சார்பு நீதி மன்ற நீதிபதி மேகலா மைதிலி, கிராம நிர்வாக அதிகாரி ராதாமணி, அரசு துறையை சார்ந்த அதிகாரிகளும், ஊராட்சியில் உள்ள அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களும், ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் உள் ளிட்ட பொதுமக்களும் கலந்து கொண்டனர். அரசு அதிகாரிகள் அரசின் திட்டங் களை விளக்கி உரையாற்றினார்கள். தமிழக அரசு வழிகாட்டிய பொருள டக்கத்தின்படி இந்த கிராம சபை கூட்டம் நடைபெற்றது. ஊராட்சி செயல்பாடுகள் சம்பந்த மாக பாரதிய ஜனதா கட்சியினர் கூட் டத்தில் சில பொய்யான குற்றச்சாட்டு கள் கூறினார்.
அப்போது ஊராட்சி மன்ற தலைவர் கணேசன், பாஜகவி னர் சொல்லிய குற்றச்சாட்டுக்கள் அத்தனைக்கும் தெளிவான ஆதார பூர்வமான விளக்கத்தோடு பதில் அளித்தார். மலிவான அரசியல் நோக் கத்தோடு, பொய்யாக சொல்லப் பட்ட பாஜகவினரின் குற்றச்சாட்டு கள் கிராம சபையால் முழுமையாக நிராகரிக்கப்பட்டது. இக்கூட்டத்தில் பங்கேற்று இருந்த திருப்பூர் நிலவள வங்கியின் இயக்குநர் கே.ஈஸ்வரன், பாஜக ஆட்சிக்கு வருவதற்கு முன்னால் கொடுக்கப்பட்ட, வருடத்துக்கு இரண்டு கோடி பேர்களுக்கு வேலை, 45 ரூபாய்க்கு பெட்ரோல் தருவோம் என்றது, ஒரு குடும்பத் திற்கு தலா ரூ.15 லட்சம் போடுவது, கருப்பு பணத்தை கண்டுபிடித்து பொருளாதார சீர்திருத்தத்தை ஏற்ப டுத்தி விலைவாசியை குறைப்பது போன்ற வாக்குறுதிகள் என்ன ஆனது என்று கேள்வி எழுப்பினார். அதற்கு சரியாக பதில் சொல்ல முடியாத பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த சிலர் தகராறு செய்தனர். கேள்வி கேட்ட அவரை தாக்கவும் முற் பட்டனர். காவல்துறையும் தலையிட்டு பாஜக கட்சியினரிடம் முறையாக நடந்து கொள்ளும்படி அறிவுறுத் தினர். அதன் பிறகு கிராமசபை கூட் டம் தொடர்ந்து நடைபெற்றது. இறுதியில் அனைவருக்கும் தேநீர் வழங்கப்பட்டு ஊராட்சி மன்றத் துணைத் தலைவர் பரமசிவம் நன்றி தெரிவித்து கூட்டம் முடிவடைந்தது.