திருப்பூர், மே 30 - கோவை, திருப்பூர் மாவட்டங்களில் நலி வடைந்த சிறு, குறு தொழில் துறையினர், விவ சாயிகளின் நிலங்களை குறிவைத்து வங்கி அதிகாரிகளும், மாபியா கும்பலும் கூட்டுச் சேர்ந்து அபகரித்து வருகின்றனர். இது தொடர்பாக நொய்யல் விவசாயிகள் பாதுகாப்புச் சங்கத்தில் தலைமை ஒருங்கி ணைப்பாளர் திருஞானசம்பந்தம் தலைமை யில் பாதிக்கப்பட்ட விவசாயிகள் வியாழ னன்று திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவல கத்தில் மனு அளித்தனர். இம்மனுவில் அவர்கள் கூறியிருப்பதா வது: திருப்பூர் மாவட்டத்தில் திருப்பூர், பல்ல டம், சாமளாபுரம், அவிநாசி, ஊத்துக்குளி, காங்கேயம், தாராபுரம் ஆகிய வட்டாரங்க ளிலும், கோவை மாவட்டத்தில் சூலூர், சோம னூர், அன்னூர் பகுதிகளிலும் வங்கிகளில் கடன் பெற்று, நலிவடைந்த சிறு குறு தொழில் துறையினர், விவசாயிகள் ஆகியோரின் நிலங்களை சர்பாசி சட்டப்பிரிவு 31-ஐ சட்டத்திற்கு புறம்பாக வங்கி அதிகாரிகளும், ரெக்கவரி ஏஜென்ட் என்ற பெயரில் ரியல் எஸ்டேட் மாபியா கும்பலும் சேர்ந்து கொண்டு பறிக் கின்றனர். இதனால் பாதிக்கப்படுவோர் பலர் தற்கொலை செய்து உயிரிழந்துள்ளனர். மேலும் ஆயிரக்கணக்கான விவசாயிகள் தங்கள் நிலத்தை இழந்துள்ளனர். குறிப்பாக, மழையின்மை, பண மதிப்பி ழப்பு, ஜிஎஸ்டி வரி விதிப்பு, கொரோனா பொதுமுடக்கம் போன்ற காரணங்களால் வங் ங்கிகளில் கடன் பெற்று இருந்த சிறு, குறு தொழில் துறையினரும், விவசாயிகளும் நலி வடைந்துள்ளனர். நலிவடைந்தவர்களின் விவசாய விளைநி லங்களை சர்பாசி சட்டம் 31-ஐ படி ஏலம் விடக் கூடாது. ஆனால் வங்கி அதிகாரிகளும், ரெக் கவரி ஏஜென்ட்கள் என்ற பெயரில் ரியல் எஸ்டேட் மாபியா கும்பலும் நலிவடைந்த வர்களின் நிலங்களை, நிலத்தின் மதிப்பை குறைத்துக் காட்டியும், விவசாயிகள் பணம் செலுத்திய பிறகும் கூட மிரட்டல் விடுத்தும் சட்டத்திற்கு புறம்பாக அவர்களது நிலங் களை பறித்துக் கொள்கின்றனர். மேற்கண்ட கும்பல் தங்கள் சொத்துக் களை பறித்து கொள்வதால் பாதிக்கப்படு வோர் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகின் றனர். பலர் தற்கொலை செய்து இறந்துள்ள னர். விவசாய நிலங்களை ஏலம் விடக்கூடாது என்று சட்டம் இருந்தும் காவல்துறையினர் ஒத் துழைப்புடன் விவசாயிகளை மிரட்டியும், வங்கி அதிகாரிகள் துணையுடனும் லெமன், தாய், ஸ்டார் என்ற பெயரில் உள்ள ரெக்க வரி ஏஜென்ட்களின் அடியாட்களும் நிலங்க ளைப் பறித்து வருகின்றனர். இது விவசாயிக ளின் அடிப்படை உரிமையை பறிக்கும் செயலாகும். எனவே இது போன்ற சம்பவங்களில், விவ சாயிகளின் நில ஆவணங்களை வட்டாட்சியர் மூலம் நிலத்தின் வகைப்பாட்டை ஆய்வு செய்தும், அவர்களிடம் விசாரணை நடத்தி விவசாயிகளை காப்பாற்ற வேண்டும். விவ சாயிகள் அந்த நிலங்களை மீட்க 25 சதவீதம் முதல் 100 சதவிகிதம் வரை பணம் செலுத்தி னாலும் கூட, விவசாயிகளுக்கு நிலத்தை ஒப்ப டைக்காமல், மேற்படி கும்பல் ஏல முறையில் அதை கைப்பற்றிக் கொள்கின்றனர். இது பற்றி நீதிமன்றத்தில் விவசாயிகள் வழக்கு தொடுத்தால், வங்கி நிர்வாகங்கள் பதில் கொடுப்பதில்லை. மேலும் நிலத்தின் மதிப்பில் நான்கில் ஒரு பங்கு என மிகக் குறைந்த விலை மதிப்பீடு செய்து அந்த சொத்துக்களை விற்று வருகின்றனர். விவசா யிகள் பணம் செலுத்திய பின்பும் அந்த சொத் துக்களை விவசாயிகளுக்கு ஒப்படைக்க மறுக்கின்றனர். மாறாக சி.ஜே.எம்.மில் ஆர் டர் வாங்கி சொத்துக்களை அபகரித்து வரு கின்றனர். இதனால் நூற்றுக்கணக்கான விவசாயி கள் உயிரிழந்துள்ளனர். எனவே வங்கி அதிகா ரிகள் ரெக்கவரி ஏஜென்ட்கள் ரியல் எஸ்டேட் மாஃபியா கும்பல் இணைந்து இந்த நிலங் களை பறிப்பதை மாவட்ட நிர்வாகம் நீதித் துறை தடுத்து நிறுத்த வேண்டும். விவசாயி களுக்கு உரிய நிலம் அவர்களிடம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நொய் யல் விவசாயிகள் பாதுகாப்பு சங்க தலைமை ஒருங்கிணைப்பாளர் கேட்டுக் கொண்டிருக் கிறார். திருப்பூர் மாவட்ட ஆட்சியர், மாவட்ட வருவாய் அலுவலர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆகியோரிடம் இதுகு றித்து விவசாயிகள் முறையிட்டுள்ளனர்.