மக்களின் சேமிப்பிற்கு பாதுகாப்பில்லாமல் போகும்
கோவையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் இந்திய வங்கி ஊழியர் சம்மேளனத்தின் செயலாளர் ஆர்.மகேஷ்வரன் பேசுகையில், பொதுத்துறை வங்கிகளை தனியார்மயமாக்கக்கூடாது. மக்களின் சேமிப்பிற்கு எந்த ஆபத்தும் வரக்கூடாது என்கிற ஒற்றை கோரிக்கையை வலியுறுத்தி இந்த வேலை நிறுத்தம் நடைபெறுகிறது. கடந்த காலங்களில் பல தனியார் வங்கிகள் மக்கள் சேமிப்பை சுருட்டி சென்றது. இதனைத்தொடர்ந்தே பொதுத்துறை வங்கிகளாக மாற்றப்பட்டது. சமீப காலங்களில்கூட யெஸ் பேங்க் உள்ளிட்ட பல வங்கிகள் இழுத்து மூடப்பட்டது. இவ்வளவு அனுபவங்கள் இருந்தும் கார்ப்பரேட்கள் வசம் பொதுத்துறை வங்கிகளை தாரை வார்க்க ஒன்றிய அரசு முயற்சிக்கிறது. இது மக்களின் சேமிப்பிற்கு பாதுகாப்பில்லாதது என்பது மட்டுமல்ல, சாதராண மக்கள் வங்கி கிளைகளுக்கு கடன் கேட்கக் கூட செல்ல முடியாத நிலை ஏற்படும், என்றார்.
பல ஆயிரம் கோடி பண பரிவர்த்தனை முடங்கும்
அனைத்து வங்கி ஊழியர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் நடைபெறும் இப்போராட்டத்தால் திருப்பூர் மாவட்டத்தில் நாள் ஒன்றுக்கு ரூ.ஆயிரத்து 500 கோடி வீதம், இரண்டு நாட்களில் ரூ.3 ஆயிரம் கோடியும், சேலம் மாவட்டத்தில் நாள் ஒன்றுக்கு ரூ.ஆயிரம் கோடி வீதம், இரண்டு நாட்களில் ரூ.2 ஆயிரம் கோடியும், கோவை மாவட்டத்தில் நாள் ஒன்றுக்கு ரூ.5 ஆயிரம் கோடி வீதம், இரண்டு நாட்களில் ரூ.10 ஆயிரம் கோடி பண பரிவர்த்தனை முடங்கும் என வங்கி ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.
திருப்பூர், டிச.16- பொதுத்துறை வங்கிகளை தனி யாருக்கு தாரை வார்க்கும் ஒன்றிய அர சின் சட்ட முன்வடிவை ரத்து செய்ய வலியுறுத்தி, அனைத்து பொதுத் துறை வங்கிகளின் கூட்டமைப்பினர் வியாழனன்று வேலை நிறுத்தப் போராட் டத்தில் ஈடுபட்டனர். பொதுத்துறை வங்கிகளை தனி யார்மயமாக்குவது குறித்து கடந்த பிப்ரவரி மாதம் தாக்கல் செய்யப்பட்ட ஒன்றிய அரசின் நிதிநிலை அறிக்கை யில் அறிவிக்கப்பட்டது. இதற்காக வங்கிகள் சட்ட திருத்த மசோதாவை நடப்பு நாடாளுமன்ற கூட்டத்தில் தாக் கல் செய்ய அரசு பட்டியலிட்டுள்ளது. ஆனால், இதற்கு எதிர்ப்பு தெரிவித் துள்ள வங்கி ஊழியர்கள், வங்கி அதிகாரிகள் சங்கங்களின் கூட்ட மைப்பு டிச.16, 17 ஆகிய இரண்டு நாட் கள் அகில இந்திய அளவில் வேலை நிறுத்தப் போராட்டத்தினை அறிவித் தது. இதன்படி, திருப்பூர் மாவட்டத்தில் பொதுத்துறை வங்கிகளின் வேலை நிறுத்த போராட்டம் வெற்றிகரமாகத் தொடங்கியது. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கி களின் 352 கிளைகள் முழுமையாக முடங்கின. இந்த வேலை நிறுத்த போராட்டத்தில் 3 ஆயிரத்திற்கும் மேற் பட்ட வங்கி ஊழியர்கள், மேலாளர் கள் பங்கேற்றனர். ஏற்றுமதி நகரமான திருப்பூரில் மட்டுமின்றி காங்கேயம், உடுமலைபேட்டை, பல்லடம் உள்பட முக்கிய தொழில், வர்த்தக நகரங்களி லும் முழுமையாக வங்கிகள் சார்ந்த பணப் பரிவர்த்தனை முடங்கியுள்ளது. வெள்ளியன்றும் (இன்று) இதே நிலை தொடரும் என்றும் வங்கி ஊழியர் சங் கத்தினர் தெரிவித்தனர். இந்த வேலைநிறுத்தப் போராட் டத்தின் ஒரு பகுதியாக திருப்பூர் ஊத் துக்குளி சாலையில் உள்ள பாரத ஸ்டேட் வங்கி மெயின் கிளை வாயிலில் அனைத்து வங்கி ஊழியர் சங்கங்க ளின் கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட் டம் நடத்தப்பட்டது. இதில் கூட்டமைப் பின் ஒருங்கிணைப்பாளர் டி.மனோ கரன், கூட்டமைப்பில் பங்கேற்றுள்ள சங்கங்களின் நிர்வாகிகள் விஜய் ஆனந்த், ராதாகிருஷ்ணன், கற்பகம், மகாதேவன், ரங்கசாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதேபோல், திருப்பூர் டவுன்ஹாலில் உள்ள யூனியன் வங்கி கிளை முன்பு புதனன்று அனைத்து வங்கி கூட்டமைப்பின் சார்பில் நடை பெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு அனைத்து வங்கிக் கூட்டமைப்பின் செயலாளர் மனோகரன் தலைமை வகித்தார். இதில், அரசுடமையாக்கப்பட்ட வங்கி களின் அலுவலர்கள், ஊழியர்கள் பெருந்திரளானோர் கலந்து கொண்ட னர்.
சேலம்
சேலம் கோட்டை பகுதியில் உள்ள பாரத ஸ்டேட் வங்கி முன்பு அனைத்து வங்கி ஊழியர் கூட்டமைப்பு சார்பில் நடைபெற்ற வேலை நிறுத்தப் போராட் டத்திற்கு கூட்டமைப்பின் ஒருங்கி ணைப்பாளர் கே.சுவாமிநாதன் தலைமை வகித்தார். இதில், பிஇஎப்ஐ மாநிலச் செயலாளர் எஸ்.எ.ராஜேந்தி ரன், ஏஐபிஓசி குணாலன், ஏஐபிஇஏ விமல்ராஜ், என்சிபிஇ ஸ்ரீராம், ஏஐபி ஓஏ உமாநாத் உள்ளிட்ட 3 ஆயிரத்திற் கும் மேற்பட்ட வங்கி ஊழியர்கள் கலந்து கொண்டனர்.
கோவை
கோவை மாவட்டத்தில் 500 வங்கி கிளைகளில் உள்ள 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் முழுமையாக பங்கேற் றனர். இதனால் அனைத்து வங்கி கிளைகளின் பண பரிவர்த்தனை சேவை முழுமையாக பாதிப்பிற்குள் ளானது. இதைத்தொடர்ந்து கோவை ரயில் நிலையம் முன்பு உள்ள பேங்க் ஆப் பரோடா தலைமை வங்கி முன்பு ஊழியர்கள் பெருந்திரள் ஆர்ப்பாட் டத்தில் ஈடுப்பட்டனர். இந்த ஆர்ப் பாட்டத்திற்கு பாட்சா தலைமை வகித் தார். இதில், ஏஐபிஏ சையது, எம்.வி. ராஜன், ஏஐபிஓசி ராஜூவேல், பெபி மகேஷ்வரன், என்.ஜெயபாலன் மற் றும் சசி, செந்தில்குமார், தேவஆசிர் வாதம் உள்ளிட்ட வங்கி தொழிற்சங்க தலைவர்கள் கண்டன உரையாற்றி னர்.