திருப்பூர், டிச.30- பயணிகளுக்குப் பாதுகாப்பு இல் லாத, செயலி வழியாக வாடகைக்கு வாகனங்களை இயக்கும், ரேபிடோ நிறு வனத்தை உடனடியாகத் தடை செய்ய வலியுறுத்தி திருப்பூர் மாவட்ட ஆட்சி யர் அலுவலகம் முன்பு ஆட்டோ தொழி லாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத் தினர். திருப்பூர் மாநகரில் பாதுகாப்பு இன்றி இயக்கப்படும் ரேபிடோ நிறுவ னத்தை உடனடியாக தடை செய்ய வேண்டும். ஆட்டோ ஓட்டுநர்களின் வாழ்வாதாரத்தைப் பறிக்கும் வகையி லான கால் டாக்ஸிகளுக்குக் கட்டுப்பாடு விதிக்க வேண்டும். பெட்ரோல், டீசல் விலையை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர வேண்டும். ஆன்லைன் அபராத கட்டணத்தை முறைப்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி திங்களன்று ஆர்ப்பாட் டம் நடைபெற்றது. திருப்பூர் மாவட்ட ஆட்டோ ஓட்டுநர் பொதுநல சங்கத் தலைவர் கிருஷ் ணன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், சிஐடியு ஆட்டோ ஓட் டுநர்கள் சங்க மாவட்டத் தலைவர் டி.வி. சுகுமாறன், எச்.எம்.எஸ் மாவட்டச் செய லாளர் செயலாளர் ஆர்.முத்துச்சாமி ஆகியோர் வாழ்த்தி பேசினர். இதைத் தொடர்ந்து, ஆட்டோ ஓட்டு நர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத் தில் கோரிக்கை மனு அளித்தினர். இதில் 200க்கும் மேற்பட்ட ஆட்டோ ஓட்டுநர் கள் கலந்து கொண்டனர்.