districts

img

அரூர்: பயனற்று கிடக்கும் துணை சுகாதார நிலையம்

தருமபுரி, ஜன.22-  அரூர் அருகே உள்ள எம்.வெளாம்பட்டியில் பயனற்று பூட்டிகிடக்கும் அரசு துணை சுகாதார நிலை யத்தை பயன்பாட்டிற்கு  கொண்டு வர வேண்டும் என  அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தருமபுரி மாவட்டம், அரூர் ஊராட்சி ஒன்றியம், எம்.வெளாம்பட்டியில் அரசு துணை சுகாதார நிலையம் உள்ளது. இந்த துணை சுகாதார நிலை யம் எம்.பள்ளிப்பட்டி, சுண்டாங்கிப்பட்டி, புதுக்காடு, சிங்கிரிப்பட்டி, காந்தி நகர், மருதிப்பட்டி, மோட் டூர், கல்லடிப்பட்டி, மூங்கில்பட்டி, கூச்சனூர் உள்பட 15க்கும் மேற்பட்ட கிராம மக்களுக்கு பயனுள் ளதாக இருந்தது. ஆனால், தற்போது வருட கணக் கில் திறக்கப்படாமல் உள்ளது. இதனால், அவசர சிகிச்சைக்காக சுமார் 8 கிலோ மீட்டர் தொலை வில் உள்ள கொங்கவேம்பு, மொரப்பூர் ஆகிய அரசு  ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. மேலும், தடுப்பூசி செலுத்துதல், வளர் இளம் பெண்களுக்கு சுகாதார கல்வி வழங்கு தல், பெண் சிசுக்கொலை மற்றும் இளம் வயது திரு மணங்களை தடுத்தல் உள்ளிட்டவைகளை கண் காணிக்க கிராம செவிலியர் இல்லாததால் பொது மக்கள் பல்வேறு இடையூறுகளை சந்தித்து வரு கின்றனர். இதுகுறித்து அரசு அலுவலர்களிடம் பலமுறை கோரிக்கை மனுக்கள் அளித்தும் எவ்வித நடவ டிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே, பயனற்று பூட்டிக் கிடக்கும் எம்.வெளாம்பட்டி அரசு துணை சுகா தார நிலையத்தை திறக்க மாவட்ட நிர்வாகம் முன்வர  வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.