districts

img

பள்ளி மாணவியிடம் பாலியல் வல்லுறவு- வாலிபர் போக்சோவில் கைது

தாராபுரம், ஜன.29- தாராபுரம் அருகே பள்ளி மாணவியிடம் அத்துமீறிய எலக்ட்ரிஷனை போக்சோ சட்டத்தின் கீழ் அனைத்து மக ளிர் காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைந்தனர். இதுகுறித்து தாராபுரம் அனைத்து மகளிர் காவல் துறையினர் தரப்பில் கூறியதாவது, தாராபுரம் அடுத்த சிக்கன் னாபுரத்தை சேர்ந்த பழனிசாமி மகன் பூபதி (24), எலக்ட்ரீசியன் வேலை பார்த்து  வரும் இவர் குண்டடம் பகுதியில் உள்ள  தனது உறவினர் வீட்டிற்கு வேலைக்காக சென்றுள்ளார். அந்த உறவினருக்கு பத்தாம் வகுப்பு படிக்கும் 15 வயதில் மகள் உள் ளார். இந்நிலையில்  பூபதி மாணவியின் பெற் றோர் வெளியில் சென்றதை அறிந்து அந்தப் பெண்ணிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட் டுள்ளார்.  இதுகுறித்து மாணவி அவரது  பெற்றோரிடம் தெரிவிக்கவே, பூபதியை அவர்கள் கண்டித்துள்ளனர்.  இந்நிலையில் அந்த பள்ளி மாணவிக்கு சில தினங்களாக உடல் நலம் சரியில்லாமல் போனதால், மாணவியின் பெற்றோர்  மாணவியை மருத்துவம னைக்கு அழைத்து சென் றுள்ளனர். பரிசோதனையில் மாணவி கர்ப்பமாக இருப் பது தெரியவந்தது. இது குறித்து மாணவியிடம் பெற் றோர் விசாரித்த போது  உறவினர் பூபதி தான் காராணம் என தெரி வித்துள்ளார். இதனையடுத்து மாணவி யின் பெற்றோர் தாராபுரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.புகாரின் பேரில் பூபதியை அழைத்து வந்து விசாரித்தபோது உண் மையை ஒப்புக் கொண்டுள்ளார். இதை யடுத்து மகளிர் காவல் ஆய்வாளர் செல் லம் மாணவியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட பூபதி மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து அவரை  கைது  செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.