திருப்பூர், பிப்.12 - இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் சார்பாக போதைக்கு எதிரான ஒரு கோடி கையெழுத்து பெறும் இயக்கம் திருப்பூரில் தொடங்கப்பட்டது. இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் தமிழ்நாடு மாநில குழுவின் முடிவுப்படி ஞாயிறன்று இந்த இயக்கம் வாலிபர் சங்கத்தின் திருப்பூர் மாவட்டக்குழு சார்பாக தியாகி குமரன் சிலை முன்பு நடைபெற்றது. போதைக்கு எதிராக கையெ ழுத்து இயக்கத்தில் திருப்பூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவர், எலும்பு நோய் சிகிச்சை நிபுணர் டாக்டர் சுந்தர மூர்த்தி கையெழுத்திட்டு துவக்கி வைத்தார். இந்த இயக்கத்தில் வாலிபர் சங்கத்தின் மாவட்ட தலைவர் எஸ்.அருள், மாவட்டச் செயலாளர் செ.மணிகண்டன் உள்பட வாலிபர் சங்கத்தினர் கலந்து கொண்டனர்.