districts

img

பண்டைய இசைக்கருவிகள் மீட்டெடுக்கப்பட வேண்டும்

கோவை, ஜூன் 18- பண்டைய கால தமிழர்கள் பயன்படுத் திய இசைக்கருவிகள் மீட்டெடுக்கப்பட வேண் டும் என கோவையில் நடைபெற்ற பறையிசை மாநாட்டில் தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தெரிவித்தார். கோவை பேரூர் பகுதியில் உள்ள சாந்த லிங்க அடிகளார் கலை மற்றும் அறிவியல் தமிழ் கல்லூரியில், நிமிர்வு கலையகம் மற் றும் பேரூர் ஆதீன கல்வி நிறுவனங்கள் இணைந்து உலக பொதுப்பறை மாநாடு  ஞாயிறன்று நடைபெற்றது. இந்த மாநாட்டில் நூற்றுக்கும் மேற்பட்ட தொழில் இசைக் கருவிகள் கண்காட்சிக்கு வைக்கப்பட்டிருந் தன. அது மட்டுமன்றி இந்நிகழ்வில் பறை நூல் கள் வெளியீடு, 1330 திருக்குறள் வரைபடை நிகழ்ச்சி, கருத்தரங்கம்  போன்ற பல்வேறு  நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இந்த மாநாட்டை  தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச் சர் மு.பெ.சாமிநாதன், பறை இசைத்து தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்வில் பேரூர் ஆதீனம் சாந்தலிங்க மருதாசல அடிகளார் உட்பட தமிழ் அறிஞர்கள், பேராசிரியர்கள், பறையிசை கலைஞர்கள் என திரளானோர் கலந்து கொண்டனர். சொல்லிசை கருவிகள் கண்காட்சியை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் பார்வையிட்டு, பல்வேறு இசைக்கருவிகள்  குறித்து கேட்டறிந்தார். மேலும், அங்குள்ள சில கருவிகளையும் இசைத்து ரசித்தார். இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், தமிழர்கள் தங்களுடைய வாழ்க்கையில் பல்லாயிரம் ஆண்டுகளாக இசையை வளர்த்துள்ளனர். பறை போன்ற இசைக்கருவிகளை கொண்டுதான் மன்னர் களே பொதுமக்களுக்கு செய்திகளை கொண்டு சென்றனர். அக்காலத்தில் கோவில் நிகழ்ச்சி களிலும் இக்கருவி பயன்படுத்தப்பட்டுள் ளது. இதுபோன்ற நமது கலாச்சாரம் பண்பாடு களை மீட்டெடுக்க வேண்டியது தான், நம் முடைய தலையாய கடமையாகும். அதற் கான வேலைகளை முதல்வர் சிறப்பாக  செய்து வருகிறார். இதுபோன்ற நிகழ்ச்சிகள் ஒவ்வொரு கிராமங்களிலும் நடத்தப்பட வேண் டும். பண்டைய கால தமிழர்களிடமிருந்த இசைக்கருவிகள், பண்பாடு கலாச்சாரம் ஆகியவை மீட்டெடுக்கப்பட வேண்டும், என் றார். முன்னதாக, கல்லூரி மைதானத்தில் ஒன்றுகூடிய, 100க்கும் மேற்பட்ட பறையிசை கலைஞர்கள், பறையை ஒலிக்க செய்தனர். இதனால் அப்பகுதி முழுவதும் பறையிசை யால் அதிர்ந்தது.