districts

கோயம்புத்தூர் முக்கிய செய்திகள்

கருவேப்பிலை தொகுப்பு செயல்படுத்த ரூ.2.5 கோடி ஒதுக்கீடு

கோவை, ஜூன் 20- கோவை மாவட்டத்தில், முதலமைச் சரின் மானாவாரி நில மேம்பாட்டு இயக் கத்தின் கீழ் 9,024 மானாவாரி விவசாயி கள் ரூ.2.99 கோடி மதிப்பீட்டில் இடு பொருட்கள் பெற்று பயனடைந்துள்ள தாக மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி தெரிவித்துள்ளார். வேளாண்மை மற்றும் உழவர் நலத் துறைக்கென தனியாக நிதிநிலை  அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள் ளது. இந்த ஆண்டு நிதிநிலை அறிக்கை யில், கோவை மாவட்டத்தில் கருவேப் பிலை சாகுபடியை அதிகரிக்க, ஐந்து ஆண்டுகளில் 1500 ஹெக்டரில் கரு வேப்பிலை தொகுப்பு செயல்படுத்த ரூ.2.5 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள் ளது. கோவை மாவட்டத்தில், வேளாண் மற்றும் உழவர் நலத்துறை சார்பில், கடந்த இரண்டு ஆண்டுகளில், முதல மைச்சரின் மானாவாரி நில மேம்பாட்டு இயக்கத்தின் கீழ் 9,024  மானாவாரி விவ சாயிகளுக்கு ரூ.2.99 கோடி மதிப்பீட்டில் இடுபொருட்களும், வேளாண் இயந் திர மயமாக்குதல் திட்டத்தின் கீழ் 77 விவசாயிகளுக்கு ரூ.72.18 லட்சம் மானியத்தில் வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகளும்,

வேளாண் இயந்தி ரங்கள் வாடகை மையம் அமைத்தல் திட்டத்தின் கீழ் ரூ.74 லட்சம் மதிப்பீட்டில் 8 இயந்திரங்கள் வாடகை மையங்கள், ரூ.56.52 லட்சம் மதிப்பீட்டில் 29 சூரிய ஒளி உலர்த்தி கூடாரங்களும், சூரிய ஒளியால் இயங்கும் மோட்டார் அமைக் கும் திட்டத்தில் ரூ.36.42 லட்சம் மதிப் பீட்டில் 15 சூரிய ஒளியால் இயங்கும் மோட்டார்களும் வழங்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு விவசாய நிலங்களில் நீடித்த பசுமை போர்வைக்கான இயக் கம் என்ற புதிய வேளாண் காடு வளர்ப் புத் திட்டத்தின் கீழ், 6,171 விவசாயி களுக்கு ரூ.96.45 லட்சம் மதிப்பீட்டில் 6,44,100 மரக்கன்றுகளும், தென்னை சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு 2230 ஹெக்டர் பரப்பிற்கு ரூ.76.35 லட் சம் மதிப்பீட்டில்  உழவு மானியம், பசுந் தாள் உரம், போராக்ஸ் மற்றும் உயிர் உரங்கள் போன்றவை 50 சதவிகித மானி யத்தில் வழங்கப்பட்டுள்ளன.  இதேபோன்று, முதலமைச்சரின் ஊட் டம் தரும் காய்கறித் தோட்டம் திட்டத் தின் கீழ், ரூ.450  மானிய விலையில் 4500 எண்ணிகையிலான மாடித்தோட்டத் தளைகள், ரூ. 750 மானிய விலையில் 500 எண்ணிக்கையிலான ஊட்டச்சத்து தளைகள் வழங்கப்பட்டுள்ளது என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

அண்ணாமலை நாடகம்

பெருமாநல்லூர் விவசாய தியாகிகள் நினைவிடத்தில் பாஜக தலைவர் அண்ணாமலை திங்களன்று அஞ்சலி செலுத்த வந்தார். ஆண்டு கணக்கில் தில்லியில் விவசாயிகள்  போராடியபோது கண்டுகொள்ளாத பாஜக, விவசாய சங்கத்த லைவர்களிடம் ஒப்புக் கொண்டபடி குறைந்தபட்ச ஆதார விலைக்கு சட்டம் இயற்றவில்லை. ஆனால் விவசாய தியாகிக ளுக்கு அஞ்சலி செலுத்துவதாக வழக்கமான கபட நாடகத்தை  அரங்கேற்ற வந்துவிட்டார் என்று அங்கிருந்த விவசாயிகள் பேசிக் கொண்டனர்.

அண்ணாமலை நாடகம்

பெருமாநல்லூர் விவசாய தியாகிகள் நினைவிடத்தில் பாஜக தலைவர் அண்ணாமலை திங்களன்று அஞ்சலி செலுத்த வந்தார். ஆண்டு கணக்கில் தில்லியில் விவசாயிகள்  போராடியபோது கண்டுகொள்ளாத பாஜக, விவசாய சங்கத்த லைவர்களிடம் ஒப்புக் கொண்டபடி குறைந்தபட்ச ஆதார விலைக்கு சட்டம் இயற்றவில்லை. ஆனால் விவசாய தியாகிக ளுக்கு அஞ்சலி செலுத்துவதாக வழக்கமான கபட நாடகத்தை  அரங்கேற்ற வந்துவிட்டார் என்று அங்கிருந்த விவசாயிகள் பேசிக் கொண்டனர்.

மகளிர் சுகாதார வளாகத்தை திறக்க வலியுறுத்தல்

தருமபுரி, ஜூன் 20- தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்பட்டி வட்டத்தில் சிந்தல் பாடி கிராமம் உள்ளது. இங்கு தலித் மக்கள் வாழும் குடியி ருப்பிற்கென மகளிர் சுகாதார வளாகம் அமைக்கப்பட்டது. திறக்கப்பட்ட சில மாதங்களிலிலேயே தண்ணீர் வசதியின்றி  மூடப்பட்டது. இங்குள்ள மக்கள் அரசு வழங்கிய தொகுப்பு  வீட்டில் குடியிருந்து வருகின்றனர். மேலும் பலர் வீடு இல்லா மல் ஒரே வீட்டில் இரண்டு மூன்று குடும்பங்களாக வசித்து வரு கின்றனர். இங்குள்ள பெரும்பகுதி வீடுகளுக்கு கழிவறை இல்லை. இதனால் இயற்கை உபாதை கழிப்பதற்கு பெண் கள் சிரமப்படுகின்றனர். வயல்வெளிக்கு செல்வதால் மாண விகளுக்கு பாதுகாப்பற்ற சூழ்நிலை உள்ளது. எனவே, இந்த மகளிர் சுகாதார வளாகத்தை சீரமைத்து  தண்ணீர் வசதியிடன் மீண்டும் திறக்க வேண்டும் என அப் பகுதி மக்கள் மாவட்ட நிர்வாகத்தை வலியுறுத்தியுள்ளனர்.

பட்டியலின, பழங்குடியின துணைத்திட்டத்திற்காக சட்ட நகல் வரைவுக்கான ஆலோசனைக்கூட்டம்

கோவை, ஜூன் 20- கோவையில் பட்டியலின, பழங்குடியின துணைத்திட்டற் திற்காக சட்ட நகல் வரைவுக்கான ஆலோசனைக்கூட்டம் திங் களன்று நடைபெற்றது. பட்டியலின, பழங்குடியின மக்களின் நலன் குறித்த பல யோசனைகள், திட்டங்களை முன்னெடுக்க முயற்சித்தா லும், அரசுகள் கவனக்குறைவின் காரணமாக அவை கனவு திட்டமாகவே இருந்து வருகிறது. நலத்திட்டங்களை நிறை வேற்ற ஆயிரக்கணக்கான கோடி ரூபாய்கள் ஒதுக்கீடு செய் தாலும், அவை உரிய மக்களுக்கு சென்றடைவதில் பல  சவால்கள் உள்ளன. அரசியல் மட்டங்களில் உள்ள அனைத்து கட்சிகளுக்கும், தலைவர்களுக்கும், அமைப்புகளுக்கும் தெரிந்த ஒன்றாக உள்ள இந்த நடைமுறையில் செய்ய  வேண்டிய மாற்றங்கள், வகுக்கப்பட வேண்டிய புதிய நடைமுறை குறித்த, துணைத்திட்ட சிறப்பு சட்டம் உரு வாக்க வேண்டும். “பட்டியலின மக்களின் பங்கைக்கொடு” என்கிற முழக்கத்தோடு, தீண்டாமை ஒழிப்பு முன்னணி இந்த முயற்சியை மேற்கொண்டுள்ளது. அதன்படி, ஹோப் காலேஜ் பகுதியிலுள்ள கே.ரமணி நினைவகத்தில் நடை பெற்ற கூட்டத்திற்கு, தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாவட்ட தலைவர் யு.கே.சிவஞானம் தலைமை வகித்தார். செயலாளர் இரா.ஆறுச்சாமி வரவேற்றார். மாநில துணைப் பொதுச்செயலாளர் கே.சுவாமிநாதன் துவக்க உரையாற்றி னார். இதன் நோக்கம் குறித்து மாநில துணைப்பொதுச் செயலாளர் பி.சுகந்தி உரையாற்றினார். இந்நிகழ்வில் தபெதிக பொதுச்செயலாளர் கு.ராமகிருட் டிணன், ஆதித்தமிழர் பேரவையின் பொதுச்செயலாளர் ரவிக் குமார், விடுதலை சிறுத்தைகள் கட்சி மாநகர மாவட்ட செய லாளர் ஜோ.இலக்கியன், பியுசிஎல் தேசிய செயலாளர் பால முருகன், புரட்சிகர இளைஞர் முன்னணி அமைப்பாளர் மலர வன், திராவிட தமிழர் கட்சியின் தலைமை நிலைய செயலா ளர் பேரறிவாளன், அகில இந்திய வழக்கறிஞர் சங்க மாநிலப் பொருளாளர் மாசேதுங், மாவட்ட தலைவர் என்.ராமர், மூத்த வழக்கறிஞர் மு.ஆனந்தன், சமூக செயற்பாட்டாளர் கலைய ரசன்,  மக்கள் அதிகாரம் அமைப்பின் மூர்த்தி, திராவிட விடு தலை கழகத்தின் நேருதாஸ், சிபிஐ(எம்எல்) ரெட் ஸ்டார்  கட்சியின் மாவட்ட செயலாளர் சுர்ஜித் ராஜா, தமுஎகச மாவட்ட செயலாளர் அ.கரீம், மாதர் சங்க மாவட்ட செயலாளர் சுதா, வாலிபர் சங்க மாவட்ட பொருளாளர் தினேஷ் ராஜா, மாணவர் சங்க மாவட்ட செயலாளர் அசாருதீன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு கருத்துக்களை பதிவு செய்தனர். முடிவில், பதிவு செய்த கருத்துக்களை தொகுத்து தீண் டாமை ஒழிப்பு முன்னணியின் மாநில பொதுச்செயலாளர் கே.சாமுவேல்ராஜ் பேசுகையில், பெறப்பட்ட கருத்துக்களை தொகுத்து வடிவமைக்க சட்ட வரைவு நகலை அமைப்பின் சார்பாக மிகப்பெரிய நிகழ்ச்சியை ஏற்பாடு செய்து, அந்த  நிகழ்ச்சியின் மூலமாக அரசுக்கு வழங்க ஏற்பாடு செய்வதாக, அவர் தெரிவித்தார். முடிவில், தீண்டாமை ஒழிப்பு முன்னணி யின் திருப்பூர் மாவட்ட செயலாளர் சி.கே.கனகராஜ் நன்றி  கூறினார்.

பெண்களுக்கான உரிமைத்தொகை பெயரை சொல்லி வசூல் வேட்டை

சேலம், ஜூன் 20- குடும்ப தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1000 உரிமைத் தொகை வழங்கும் திட்டத்திற்கு, ரூ.200 வசூல் செய்யும் கும்பல் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர். தகுதி வாய்ந்த குடும்ப தலைவிகளுக்கு உரிமைத் தொகையாக மாதந்தோறும் ரூ.1000 வழங்கப்படும் என  தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. சேலம் மாவட்டம், எடப் பாடியை அடுத்த வெள்ளாண்டிவலசு, பழையபேட்டை பகுதி யில் எடப்பாடி நகராட்சி அலுவலகம் முன்பு இரண்டு நியாய விலை கடைகள் செயல்பட்டு வருகின்றன. இந்த கடைகள் அருகாமையில் இரண்டு நபர்கள் அமர்ந்து கொண்டு, “குடும்ப தலைவிகளுக்கு வழங்கும் உரிமைத்தொகையை பெற வேண்டுமென்றால் ரூ.200 செலுத்தி அட்டைப்பெற்றுக் கொள்ள வேண்டும். அப்போதுதான் உங்களுக்கு ஆயிரம் ரூபாய் பணம் வந்து சேரும்” என்று கூறி, அப்பகுதியில் உள்ள பொதுமக்களிடம் ஒவ்வொரு குடும்ப அட்டைக்கும் ரூ.200 பணம் வாங்கி வருகின்றனர். “மேலும், ரூ.200 வழங்கினால் மட்டுமே பொங்கல் பரிசுத்தொகை உள்ளிட்ட அனைத்து திட் டங்களும் உங்களுக்கு வந்து சேரும்” என்றுக்கூறி பண வசூலில் சிலர் ஈடுபட்டு வருகின்றனர். அப்பகுதி பெண்கள்  ஏராளமானோர் போட்டி போட்டுக்கொண்டு பணம் வழங்கி வருகின்றனர். இந்த காட்சிகள் தற்பொழுது சமூக வலை தளங்களில் வெளியாகியுள்ளது. அரசு எந்த ஒரு அறிவிப்பையும் வெளியிடாத நிலையில், அரசின் அறிவிப்பை இதுபோன்ற நபர்கள் பயன்படுத்தி, பணம் வசூல் செய்யும் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அரசு உடனடியாக இதுபோன்ற பணம் வசூல் செய் யும் நபர்கள் மீது நடவடிக்கை எடுத்து, முறையான அறி விப்பை வெளியிட வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

கால்பந்து போட்டி

உதகை, ஜூன் 20- கோத்தகிரி அருகே உள்ள கடைகம்பட்டி கிராமத்தில், பாரதி இளைஞர் மன்றம்  சார்பில் மாவட்ட அளவி லான கால்பந்து போட்டிகள் கடந்த ஒரு வாரமாக நடை பெற்று வந்தன. போட்டி களில் வெற்றி பெற்ற கட்ட பெட்டு, உயிலட்டி அணிகள்  இறுதிக்கு தகுதி பெற்றன. இரு அணிகளும் சம பலத்துடன் விளையாடியதால் கோல் கள் எதுவுமின்றி சமநிலை யில் முடிவடைந்தது. பின்னர் நடந்த டை பிரேக்கரில் கட்ட பெட்டு அணி வெற்றி பெற்று  சாம்பியன் பட்டத்தை தட்டி சென்றது.