கோவை, ஜூலை 13– கோவைக்கு வரும் ஒன்றிய அமைச்சர்கள் தொழிற்சங்க பிரதி நிதிகளை சந்திக்க நேரம் கொடுக் காமல் தொழில் அதிபர்களை மட் டும் சந்திப்பதற்கு முக்கியத்துவம் தருவதை கண்டித்து கோவையில் அனைத்து தொழிற்சங்கத்தினர் ஆவேச ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட் டனர். ஒன்றிய அரசின் தேசிய பஞ்சா லைக்கழகத்தின் கீழ் (என்டிசி) தமிழகத்தில் 7 பஞ்சாலைகள் உள்ளன. இந்த ஆலைகளில் சுமார் 6 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழி லாளர்கள் பணியாற்றி வந்தனர். இந்நிலையில் கொரோனா தொற்று பரவல் காரணமாக பொது முடக்கம் அறிவிக்கப்பட்ட நிலையில் இந்த ஆலைகள் அனைத்தும் மூடப்பட் டன. இரண்டு ஆண்டுகள் கடந்த பின்னரும் தற்போதுவரை ஆலை கள் திறக்கப்படவில்லை. இதர பொதுத்துறை நிறுவனங்களை அடிமாட்டு விலைக்கு விற்பதைப் போல என்டிசி ஆலைக்கு சொந்த மான கோடிக்கணக்கான ரூபாய் சொத்துக்களை விற்பதற்கு ஒன்றிய அரசு சூழ்ச்சி செய்கிறதோ என்கிற அச்சம் தொடர்ந்து தொழிலாளர்க ளிடம் இருந்து வருகிறது. இதற்கி டையில் பஞ்சாலைகள் மூடப்பட்ட தால் தொழிலாளர்களின் வாழ்வா தரம் பாதித்துள்ளது. ஆலை நிர்வா கம் அலுவலர்களுக்கு முழு ஊதிய மும், தொழிலாளர்களுக்கு பாதி ஊதியம் மட்டுமே தந்து கொண்டி ருக்கிறது.
இந்நிலையில், ஆலைகளை முழுமையாக இயக்கிட வேண்டும். தொழிலாளர்களுக்கு வேலை வழங்க வேண்டும்.அதுவரை முழு ஊதியம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர்ந்து தொழிற்சங்கங்கள் இனைந்து போராட்டத்தை நடத்தி வருகிறார்கள். தலைநகர் தில் லிக்கு சென்று ஒன்றிய அமைச்சர் களை மேற்கு மாவட்டத்தை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒன் றினைந்து தொழிற்சங்க பிரநிதிக ளின் கோரிக்கையை வலியுறுத்தி னர். இருந்தபோதும் ஒன்றிய அரசு தொழிலாளர்களின் நிலை குறித்த எந்த அக்கறையும் இல்லாத தால் தற்போதுவரை என்டிசி ஆலை கள் திறக்கப்படவில்லை. மேலும், கோவைக்கு வருகை தரும் ஒன்றிய அமைச்சர் கள் தொழில் அதிபர்களை மட்டும் சந்தித்துவிட்டு திரும்பி செல்கின்ற னர். தொழிலாளர்களையோ, தொழிற்சங்க பிரதிநிதிகளையோ குறைந்தபட்ச மரியாதைக்காககூட சந்திப்பதில்லை. இதற்கிடையே மிக சமீபத்தில் ஒன்றிய அமைச்சர் பியூஸ்கோயல் கோவைக்கு வருகை தந்திருந்தார். அப்போது என்டிசி ஆலை குறித்து கோரிக்கை குறித்து தொழிற்சங்க பிரதிநிதிகளோடு சந்திக்க நேரம் ஒதுக்குமாறு கோவை, திருப்பூர் எம்பிக்கள் கேட்டுள்ளனர். இதற்கு நேரமில்லை என தெரிவித்துவிட்டு தொழில் அதிபர்களுடன் விரி வான சந்திப்பை நடத்திவிட்டு சென் றுள்ளார்.
தொழில் வளர்ச்சிக்கு மூல ஆதாரமாய் உள்ள தொழிலார் களை புறக்கணித்துவிட்டு தொழில் அதிபர்களை மட்டும் சந்திக்கும் போக்கை தொழிற்சங்கங்கள் வன்மையாக கண்டித்துள்ளது. இதன்தொடர்ச்சியாக இனிவரும் காலங்களில் கோவை மாவட்டத் திற்கு வரும் ஒன்றிய மாநில அமைச் சர்கள் தொழிற்சங்க பிரதிநிதி களை அழைத்து பேச வேண்டும். என்டிசி ஆலைகளை உடனடியாக திறக்க வேண்டும். ஆலைகளை நவீனப்படுத்த போதிய நிதி ஒதுக் கீடு செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கோவை சிவானந்தகாலணி அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத் திற்கு எச்எம்எஸ் தொழிற்சங்க தலைவர் ராஜாமணி தலைமை தாங் கினார். ஆர்ப்பாட்ட நோக்கள் குறித்து சிஐடியு பஞ்சாலை சங்க மாநில தலைவர் சி.பத்பநாபன், ஏஐ டியுசி மாநில பொருளாளர் எம்.ஆறு முகம், ஏடிபி கோபால், எம்எல்எப் தியாகராஜன், ஐஎன்டியுசி பால சுந்தரம், அம்பேத்கர் சங்கம் நீல மேகம் உள்ளிட்ட தலைவர்கள் கண்டன உரையாற்றினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் ஏராளமானோர் பங்கேற்றனர்.