கோவை, மார்ச் 3- கோவை மாவட்டத்தில் அனைத்து மாநிலத்தினரும் மிகுந்த பாதுகாப்புடன் வேலை செய்வதற் கான அனைத்து நடவடிக்கை களும் மாவட்ட நிர்வாகத்தால் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், வதந்தியாக பரவும் வீடியோக் களை யாரும் நம்ப வேண்டாம் எனவும் மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி கேட்டுக்கொண் டுள்ளார். இது குறித்து மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கோவை மாவட்டம் அனைத்து சமூக மக்களும், அனைத்து மாநிலங்களையும் சார்ந்த தொழி லாளர்களை கொண்டு தொழில் நிறுவனங்கள், பல்வேறு தொழிற்சாலைகள் இயங்கிவரும் தொழில் சார்ந்த மாவட்டமாகும். இந்த மாவட்டத்தில் உள்ள மக்கள் எவ்வித பகைமையுமின்றி அமைதி யான முறையில் பாதுகாப்புடன் வாழ்ந்து வருகின்றனர். இங்கு பணிபுரியும் அனைத்து தொழிலாளர்களுக்கும் தேவை யான இருப்பிடவசதி, உணவு, ஊதியம் மற்றும் குழந்தைகளுக் ்கான கல்வி அனைத்தும் வேலைய ளிப்பவர்களால் வழங்கப்பட்டு வருகிறது. இதுவரை சாதி, மொழி மற்றும் இனப்பிரச்சனைகள் ஏதும் நடைபெறாத வண்ணம் மாவட்ட நிர்வாகம் சிறப்பான துரித நடவ டிக்கைகள் மேற்கொண்டு சட்டம் மற்றும் பொது அமைதியினை பரா மரித்து வருகிறது. இந்நிலையில், கோவை மாவட்டத்தில் கடந்த சில நாட்க ளாக வடமாநில தொழிலாளர் களுக்கு அச்சுறுத்தல் உள்ளதா கவும், அதன் காரணமாக கோவை யிருந்து வெளியேறி வருவதாகவும் வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக வலை தளங்களில் தவறான தகவல்கள் பரவி வருகின்றது. அவை அனைத் தும் தீய நோக்கத்தில் பொய்யாக சித்தரிக்கப்பட்ட வதந்திகளாகும். பிறமாநில தொழிலாளர்களுக்கு குறைகள் மற்றும் புகார்களை தீர்த்து உடனுக்குடன் உரிய நடவ டிக்கை மேற்கொள்ளப்பட்டு நிவாரணம் வழங்கப்பட்டு வருகிறது. மேலும், காவல் துறை யின் மூலமும் சட்ட ஒழுங்கு சிறப்பாக பராமரிக்கப்பட்டு வரு கிறது. எனவே, கோவை மாவட்டத்தில் அனைத்து மாநிலத்தினரும் மிகுந்த பாதுகாப்புடன் வேலை செய்வதற்கான அனைத்து நடவ டிக்கைகளும் மாவட்ட நிர்வாகத் தால் மேற்கொள்ளப்பட்டு தகுந்த பாதுகாப்பு வழங்கப்பட்டு வரு கிறது. எனவே வதந்தியாக பரவும் வீடியோக்களை பிறமாநில தொழி லாளர்கள் யாரும் நம்ப வேண்டாம் என அவர் தெரிவித்துள்ளார்.