இளம்பிள்ளை, ஏப்.19- குறைந்தபட்ச ஓய்வூதியமாக ரூ.7 ஆயி ரத்து 850 வழங்க வேண்டும் என்பன உள் ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியு றுத்தி தமிழ்நாடு அனைத்துத்துறை ஓய்வூதி யர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட னர். ஓய்வூதியர்களின் மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தில் அனைத்து சிகிச்சைகளுக்கும் மருத் துவத்தை உறுதி செய்ய வேண்டும். கூடுதல் ஓய்வூதியம் பெறுவதற்கு தகுதியான வயதை 80லிருந்து 70 ஆக குறைக்க வேண்டும். ஊராட்சி செயலர், சத்துணவு, அங்கன்வாடி, வருவாய் கிராம உதவியாளர்கள் மற்றும் வனத்துறை காவ லர்கள் உள்ளிட்டோர்களுக்கு குறைந்தபட்ச ஓய்வூதியமாக ரூ.7 ஆயிரத்து 850 வழங்க வேண்டும். பழைய ஓய்வூதிய திட்டத்தையே அமல்படுத்திட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ் நாடு அனைத்து ஓய்வூதியர் சங்கத்தினர் செவ்வாயன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சேலம் சங்ககிரி பழைய பேருந்து நிலை யம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் வட்டக்கிளை தலைவர் மாணிக் கம் தலைமை வகித்தார். இதில், செயலாளர் சுப்ரமணி, பொருளாளர் தனசேகரன், மாவட்ட இணைச் செயலாளர் ஜெயமணி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
கோவை
கோவை டாடாபாத் பகுதியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு அரசு அனைத் துத்துறை ஓய்வூதியர்கள் சங்கத்தின் துணைத் தலைவர் பாலசுப்பிரமணியன் தலைமை வகித்தார். இதில், திரளான ஓய்வூதியர்கள் கலந்து கொண்டனர்.
தருமபுரி
தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு வட்ட தலைவர் ஏ.மணி தலைமை வகித்தார். மாவட்ட தலைவர் எஸ்.பழனிச்சாமி, மாவட்ட துணைத் தலைவர் கே.துரை, வட்டசெயலாளர் முனி ராஜ், வட்டபொருளாளர் எம்.பாபு ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட பொருளாளர் கே.புக ழேந்தி வாழ்த்தி பேசினர். அரூரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு வட்ட தலைவர் பத்மநாபன் தலைமை வகித் தார். மாவட்டசெயலாளர் எம்.பெருமாள், மாவட்ட இணைசெயலாளர் எம்.கோபால், வட்ட செயலாளர் கே.சிவகிரி,வட்டபொருளாளர் முடி மண்ணன் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர். நல்லம்பள்ளியில் வட்ட தலைவர் கிருஷ்ண ணமூர்த்தி தலைமை வகித்தார். மாவட்ட பொரு ளாளர் கே.கேசவன்,மாவட்ட துணைத் தலைவர் மோகனராஜ்,போக்குவரத்து ஓய்வூதியர் அமைப்பின் மாநில இணைசெயலாளர் கே.குப்பு சாமி, மின்வாரிய ஓய்வூதியர் நல அமைப்பின் மாவட்டசெயலாளர் ஜி.பி.விஜயன் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கிபேசினர். இந்த ஆர்ப் பாட்டங்களில் ஏராளமானோர் கலந்து கொண்ட னர்.