districts

img

அரசு ஊழியர்களை ஒருமையில் பேசிய அதிமுக எம்எல்ஏ

கோவை, டிச.8-  கோவையில் அதிமுக எம்.எல்.ஏ  அரசு அதிகாரிகளையும், காவல் துறையினரையும் ஒருமையில் பேசி, மிரட்டல் விடுக்கும் வகை யில் பேசிய சம்பவம் பெரும் சர்ச் சையை ஏற்படுத்தியுள்ளது.  மாவட்ட அதிமுக அலுவலக மான இதய தெய்வம் மாளிகையில் மாவட்ட செயல்வீரர்கள் கூட்டம் செவ்வாயன்று நடைபெற்றது. செயல் வீரர்கள் கூட்டத்திற்காக ஏராள மான அதிமுகவினர் கட்சி அலுவல கம் முன்பு குவிந்தனர்.  அப்போது அங்கு இருந்த வாக னங்களை ஒழுங்குபடுத்த காவல் துறையினர் முயன்றபோது காவல் துறையினருக்கும், அதிமுகவின ருக்கும் இடையே வாக்குவாதம் ஏற் பட்டது. மேலும், வாகனங் களுக்கு அபராதம் விதிக்க கூடாது எனவும், பறிமுதல் செய்யும் வாக னத்தை அப்புறபடுத்த வேண்டும் என கூறி காவல் துறையை கண் டித்து அதிமுகவினர் மறியலில் ஈடு பட்டனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.  இதனையடுத்து அதிமுக சட்ட மன்ற உறுப்பினர் அம்மன் அர்ஜூனன் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை அழைத்து சென்றார். இதனை தொடர்ந்து கூட்டத்தில் பேசிய வடக்கு மாவட்ட செயலாளரும்,  கவுண்டம்பாளையம் எம்.எல்ஏவுமான  பி.ஆர்.ஜி அருண்குமார் பேசுகையில், அரசு அதிகாரிகளையும், காவல் துறையினரையும் ஒருமையில்  மிரட்டல் விடுக்கும் வகையில் பேசி னார். கோவையில் உள்ள அரசு அதிகாரிகள் அனைவரும்  திமிர்  பிடித்து அலைகின்றனர் என்றும், ஸ்டாலினுக்கு கொத்தடிமைக ளாக உள்ளனர் என்றும் தெரிவித்தார். மேலும், எங்கள் மீது வழக்கு போடுங் கள், நாங்கள் மீண்டும் ஆட்சிக்கு வரு வோம். எங்கு பணியில் இருந்தா லும், ஓய்வு பெற்றாலும் விடமாட் டோம், ஆம்பளைங்க நாங்க என மிரட்டல் விடுத்தார்.  காவல் துறை அடக்கி வாசிக்க வில்லை என்றால் மிகவும் மோசமாக போய்விடும் எனவும் மேடையிலேயே காவல்  துறையினருக்கும், அரசு அதிகாரி களிக்கும் மிரட்டல் விடுத்து பேசியது அரசு ஊழியர்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.

;