districts

img

“நாட்டிலேயே முதன்முறையாக மேட்டுப்பாளையத்தில் துவக்கம்”

மேட்டுப்பாளையம், நவ.30- நாட்டிலேயே முதன்முறையாக மேட்டுப்பாளையம் அரசு வனக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலை யத்தில், “நபார்டு” வங்கியின் வேளாண் காடுகள் சேவை மையம் துவக்கப்பட்டுள்ளது. கோவை மாவட்டம், மேட்டுப் பாளையத்தில் தமிழ்நாடு வேளாண் பல்கலைகழகத்தின் கீழ் அரசு  வனக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் செயல்பட்டு வருகிறது. இங்கு மரம் வளர்ப்பு மற்றும் வன விரிவாக்கம் குறித்த பல்வேறு ஆராய்சிகள் நடைபெற்று வருகி றது. அதுமட்டுமின்றி விவசாயிக ளுக்கு பலனளிக்கும் வகையில் காடுகளுக்கு வெளியே வேளாண் காடுகள் சார்ந்த விவசாயம் மற்றும்  இதன் மூலம் மரங்கள் தேவைப் படும் தொழில் முனைவோரின் தேவைகளை பூர்த்தி செய்தல்  போன்ற திட்டங்கள் செயல்படுத் தப்பட்டு வருகின்றன. நாட்டின் வனப்பரப்பு குறைந்து வரும் நிலை யில், அதனை ஈடு செய்ய வேளாண்  காடுகளின் தேவை மற்றும் அவசி யம் போன்ற காரணங்களினால் இத்திட்டத்தை ஊக்குவிக்கும் வித மாக மேட்டுப்பாளையம் அரசு வனக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலை யத்தில் நபார்டு வங்கியின் வேளாண் காடுகள் சேவை மையம் துவக்கப் பட்டுள்ளது. இச்சேவை மையத்தை திறந்து  வைத்த நபார்டு வங்கியின் தமிழக பொது மேலாளர் வெங்கடகிருஷ் ணன், “விவசாயிகள் மற்றும் தொழில் முனைவோரை உருவாக் கும் சிறந்த மையமாக இது அமைவ தோடு வேளாண் காடுகள் சார்ந்த அனைத்து தேவைகளுக்கும் இந்த சேவை மையம் ஒரு தீர்வு மையமாக இருக்கும்” என்றார்.