districts

img

அனைத்து வங்கிகளிலும் நிபந்தனையின்றி கடன்

தருமபுரி, அக்.23- விவசாய தொழிலாளர்களுக்கு அனைத்து வங்கிகளிலும் நிபந்த னையின்றி கடன் வழங்க வேண்டும்  என விதொச தருமபுரி ஒன்றிய மாநாடு வலியுறுத்தியுள்ளது. அகில இந்திய விவசாயத்தொ ழிலாளர் சங்கத்தின் தருமபுரி ஒன்றிய 4ஆவது மாநாடு தருமபுரி  முத்து இல்லத்தில் நடைபெற்றது. ஒன்றிய தலைவர் பி.ரவி  தலைமை வகித்தார். ஒன்றியக் குழு உறுப்பினர் எஸ்.காளியப்பன்  சங்க கொடியேற்றி வைத்தார். ஒன்றியக்குழு உறுப்பினர் எஸ்.தையல்நாயகி வரவேற்றார். விதொச தருமபுரி மாவட்ட தலைவர் வி.ரவி மாநாட்டை துவக்கி வைத்து உரையாற்றினார். ஒன்றிய செயலாளர் டி.மாரியப்பன்  வேலை அறிக்கையும், பொரு ளாளர் என்.மனோகரன் வரவு செலவு அறிக்கையும் முன்வைத் தனர்.  மாநாட்டை வாழ்த்தி மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றிய செயலாளர் என்.கந்த சாமி, மாதர் சங்க நிர்வாகி கே. சுசிலா ஆகியோர் உரையாற்றினர்.  

தருமபுரி வட்டத்தில் உள்ள  நிலமற்ற விவசாய தொழிலா ளர்களுக்கு 2 ஏக்கர் நிலம் இலவச மாக வழங்கவேண்டும்.தரும புரி நகராட்சிக்கு 100 நாள் வேலை வழங்கவேண்டும்.இத்திட்டத்தை விவசாய பணிகளுக்கும் பயன் படுத்த வேண்டும். மகாத்மா காந்தி  தேசிய ஊரக வேலை வாய்ப்பு உறுதித் திட்டத்தின் கீழ் விவசாயத்  தொழிலாளர்களுக்கு ஒரு ஆண் டுக்கு 200 நாள் வேலையும் தினக் கூலி ரூ.600 வழங்கவேண்டும். வீடற்ற மக்களுக்கு ரூபாய் பத்து  லட்சத்தில் வீடு கட்டி கொடுக்க வேண்டும். விவசாயத் தொழிலா ளர்களுக்கு அனைத்து வங்கி களிலும் நிபந்தனை இன்றி  கடன் வழங்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும். விவசாயத் தொழிலா ளர்கள் வாழும் அனைத்து பகுதி களுக்கும் நடமாடும் கால்நடை  மருத்துவமனை அமைக்க வேண்டும். சுடுகாடு இல்லாத கிரா மங்களுக்கு சுடுகாட்டிற்கு இடம்,  பாதை வசதி செய்துகொடுக்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.  மாநாட்டில், ஒன்றிய தலைவ ராக டி.மாரியப்பன், ஒன்றிய செய லாளராக கே.கோவிந்தசாமி, பொருளாளராக சின்னதுரை உள்ளிட்ட 16 பேர் கொண்ட ஒன்றி யக்குழு உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டனர். மாநாட்டை நிறைவு செய்து விதொச தருமபுரி மாவட்ட செயலாளர் எம்.முத்து உரையாற்றினார்.