districts

சுற்றுச்சூழலை பாதிக்கும் திட்டங்களை எதிர்த்துப் போராட முன்வர வேண்டும்:

திருப்பூர், பிப். 20 – சுற்றுச்சூழலைப் பாதிக்கும் திட்டங்களை  அரசோ, தனி நிறுவனங்களோ கொண்டு வந் தால் அதை எதிர்த்துப் போராட முன்வர வேண்டும், அதன் மூலமே சுற்றுப்புறச் சூழ லைக் காக்க முடியும் என்று பூவுலகின் நண்பர் கள் அமைப்பின் சுந்தர்ராஜன் கூறினார். வனத்துக்குள் திருப்பூர் திட்டத்தின் எட் டாம் ஆண்டு நிறைவு விழாவில், “காலநிலை  மாற்றமும், தொழில் சூழலும்” என்ற தலைப் பில் பூவுலகின் நண்பர்கள் அமைப்பின் சுந்த ரராஜன் பேசியதாவது, இரண்டு நாட்களுக்கு  முன்னால் ஐக்கிய நாடுகள் சபை ஜெனிவா வில் நடைபெற்றது. இதில் கடல் கொள்ளை யால் பல இடங்கள் மூழ்க உள்ளது. இதனால்  90 கோடி மக்கள் இடம்பெயர நேரிடும் என்று  வருத்தம் தெரிவித்துள்ளது. கடந்த பத்தா யிரம் ஆண்டுகளாகதான் மனிதர்கள் பூமியில்  வாழ்வதற்கு ஏற்ற தட்பவெப்பம் நிகழ்கிறது. இதில் கடந்த 150 ஆண்டுகளில் தொழில் புரட்சி என்ற பெயரில் 3 ட்ரில்லியன் கார்பன் களை வெளியேற்றியுள்ளோம். சராசரி வெப் பநிலை 3.1க்குள் கட்டுப்படுத்த வேண்டும். இல்லாவிட்டால் பேரிடர்கள் ஏற்படும். இது போன்ற பேரிடர்களால் 145 பில்லியன் டாலர் களை இதுவரை இழந்துள்ளோம். இந்த பேரி டர்களால் நமது வாழ்வாதாரமே பாதிக்கப்ப டும். எங்கோ ஒரு நாட்டில் ஏற்படும் பேரிடர் மற் றும் கால நிலை மாற்றதால் பருத்தி உற்பத்தி  குறையும், பருத்தி தட்டுப்பாடு ஏற்படும் அத னால் சிலர் பருத்தியை பதுக்கி வைத்து அதிக  விலைக்கு விற்பார்கள். அமெரிக்காவில் பருத்தி விளைச்சல் பாதிக்கப்பட்டால் இங்கு  பருத்தி விலை ஏறும். இந்த காலநிலை மாற்றத் தின் தாக்கம் இறுதியாக பொருளாதாரத்தில் தான் முடியும். தொழில் வேண்டும் தான்.  ஆனால் அது காலநிலையை அழிக்கக் கூடாது. வெப்பநிலையை மாற்றக் கூடாது.  பிப்ரவரி 1986க்குப் பிறகு பிறந்த குழந்தைகள்  ஒரே மாதிரியான காலநிலையை அடுத்த,  

அடுத்த மாதத்தில் சந்தித்ததே இல்லை என்று ஆய்வு அறிக்கைகள் தெரிவிக்கிறது. கடந்த  கால தலைமுறைகள் தன் வாழ்நாளில் ஒரே  ஒரு முறை சந்தித்த பேரிடர்களை, இனிவரும்  தலைமுறை இரண்டு அல்லது மூன்று முறை  சந்திக்க நேரிடும் என்று அந்த ஆய்வு தெரிவித் துள்ளது. இங்கு நீங்கள் நட்டுள்ள மரங்கள்  பின்னால் பல தலைமுறைகளைக் காக்கும்.  இது போன்ற பேரிடர்களை கடவுள் நம் பிக்கை உள்ளவர்கள் இது கடவுளின் செயல்  என்று கடந்து போகக்கூடும். ஆனால் நம்மை  போல பகுத்தறிவுவாதிகள் அறிவியலை நம் புபவர்கள், மரங்களை நட்டு இதன் தாக் கத்தை குறைக்கும் செயல்களில் ஈடுபட வேண்டும். நீங்கள் சிறிய அளவில் உள் ளீர்கள் என்று எண்ணாதீர்கள். சிறிய, சிறிய  மாற்றம் பெரு மாற்றமாக மாறும். நான் நெகிழி  பயன்படுத்துவதில்லை. தனி மனிதனாக சுற் றுச்சூழலுக்கு எந்த பாதிப்பையும் ஏற்படுத் தவில்லை. அப்படி நடந்து கொள்ளவும் மாட் டேன் என்று கூறுவது மட்டும், நல்ல சுற்றுச்சூ ழலை உருவாக்காது. அரசோ, தனி நிறுவனங் களோ சுற்றுச்சூழலை பாதிக்கும் வகையில்  திட்டங்களை கொண்டு வந்தால், அதற்கு நாம்  வாய் மூடி இருந்தால் அதில் எந்த பயனும் இல்லை. அந்தத் திட்டங்களை தடுக்க நாம்  எதிர்த்து பல போராட்டங்களை நடத்த வேண் டும் என்று கூறினார்.

ஓசை காளிதாசன்

இவ்விழாவில் ஓசை காளிதாசன் பேசிய தாவது: மரம் நடுவது என்பது வெறும் பொழு துபோக்கு அல்ல, அது அடுத்த தலைமுறை வாழ்வாதாரத்திற்கான தேவை. ஆயிரம் மரம்  நட்டு இருக்கலாம், அதை வளர்ப்பது தான் கடி னம். நான் பத்து லட்சம் மரங்கள் நட இருக்கி றேன் என்று கூறுவது பெருமை அல்ல,  அதை வளர்த்திருக்கிறோம் என்பது தான்  பெருமை. 50 மரங்களை வளர்த்தவர்க ளுக்கு தான் அதன் அருமை தெரியும். இப் போது செய்கிற வேலை இன்னும் பிறக் காத, வரும் தலைமுறைக்கு செய்கின்ற சேவை. கடந்த தலைமுறைகள் ஒருவர் கூட  தண்ணீரை பாட்டில்களில் வாங்கி குடித்தது  இல்லை. இது நம் மீது கொடுக்கப்பட்டிருக் கும் போர். இது தொடர்ந்தால் நாளை ஆக்ஸி ஜனைத் தோளில் சுமந்து சுத்த வேண்டிய சூழல் உண்டாகும். உயிர்கள் வாழும் ஒரே  இடம் பூமி தான் என்று கூறுவதற்கு காரணம்.  இந்த பிரபஞ்சம் முழுக்க வேறு எங்காவது உயிர் இருக்குமா என்ற தேடல் இன்னும் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. விஞ் ஞானி ஸ்டீபன் ஹாக்கிங் கூறுகிறார், இன் னும் நூறு ஆண்டுகள் கடந்து பூமி இருக்குமா?  என்று கவலையாக இருக்கிறது. தொழில் புரட்சி என்று நாம் உமிழ்ந்துள்ள கார்பன் டை  ஆக்சைடுகள் பல தாக்கங்களை வரும் காலங்களில் ஏற்படுத்தும். வனத்துக்குள் திருப்பூர் நட்டிருக்கும் மரங்கள் 7000 டன்  கார்பன்களை உறிஞ்சி சாதித்து இருக்கிறது.  இது மனிதனுடைய பூமி அல்ல, இது உயிர்க ளின் பூமி. இந்த பூமியில் 30 லட்சம் முதல் 3  கோடி வரையிலான உயிரினங்கள் வாழ்கி றது. இந்த 30 லட்சம் உயிர்களில் மனிதனும் ஓர்  உயிர். இது மனிதர்களுக்கான பூமி என்று  தவறுதலாக நமக்கு கூறி இருக்கிறார்கள்.

நாம் வருவதற்கு முன்னே பறவைகள், பூச்சி கள், விலங்குகள் இங்கு வாழ்ந்திருக்கிறது. நாம் இல்லாமல் அவையால் வாழ முடியும்.  அவை இல்லாமல் நம்மால் வாழ முடியாது.  மிக அபாயகரமான வகையில் பெருநகரங் கள் மாறி இருக்கிறது. காற்று மாசுபாடு 50யை  தாண்டக்கூடாது. ஆனால் டெல்லியில் 800 அடைந்துள்ளது. இந்த நிலை நாளைக்கு கோவைக்கு வந்து விடக்கூடாது. நுங்கு சாட்சி சொல்லும் அளவிற்கு நொய்யல் மாசு  அடைந்துள்ளது என்று கவிதை பாடும் அள விற்கு நொய்யல் ஆறு மாசடைந்துள்ளது. நம்மை வளர்த்த நொய்யல் ஆறு இன்று அவ் வளவு மாசு அடைந்துள்ளது. ஆறு எப்படி  உருவாகிறது என்று அடுத்த தலைமுறைக்கு  சொல்லித் தர வேண்டிய கட்டாயம் இன்று  இருக்கிறது. மழையின் மூலம் கிடைக்கின்ற  தண்ணீரை மேற்கு தொடர்ச்சி மலையில்  உள்ள சோலைகள் தனக்குள் சேமித்து  வைத்துக் கொள்கிறது. இதன் மூலம்  தான் நொய்யலாறு உருவாகிறது. அங்குள்ள  பொட்டானிக்கல் கார்டன்களால் இந்த மழை  நீர் சேமிக்கப்படுவதில்லை, தேயிலை தோ டம், காபி தோட்டம் இவைகளாலும் சேமிக்கப் படுவதில்லை மேற்கு தொடர்ச்சி மலையில்  உள்ள அடர்ந்த சோலைகளால் தான் தண்ணீர்  சேமித்து வைக்கப்படுகிறது. தண்ணீர் கடலில்  வீணாகுவதை தடுக்கிறது. நாம் மலைகளைக்  காப்பதன் மூலம் தான் அடுத்த தலைமுறை யை வாழ வைக்க முடியும் என்று கூறினார்.