districts

மாற்றுத்திறனாளிகள் மீதான வன்முறையை தடுத்து நிறுத்த வலியுறுத்தல்

நாமக்கல், டிச.11- மாற்றுத்திறனாளி பெண்கள் மற் றும் குழந்தைகள் மீதான வன்முறை யை தடுத்து நிறுத்த வேண்டும் என மாற்றுத்திறனாளிகள் சங்கம் வலியு றுத்தி உள்ளது. தமிழ்நாடு அனைத்துவகை மாற் றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப் போர் உரிமைகளுக்காக நலச்சங்கத் தின் குமாரபாளையம் தாலுகா மாநாடு பி.பராசக்தி தலைமையில் குமார பாளையம் ரோட்டரி மண்டபத்தில் நடைபெற்றது. மாநாட்டை துவக்கி  வைத்து சங்கத்தின் மாநிலச் செய லாளர் பி.ராஜேஷ் உரையாற்றினார். மக்கள் ஒற்றுமை மேடை மாவட்ட அமைப்பாளர் ஏ.ரங்கசாமி, விவசாய  தொழிலாளர் சங்க மாவட்ட தலைவர் துரைசாமி, மாதர் சங்க மாவட்ட செய லாளர் அலமேலு, தமுஎகச மாவட்ட தலைவர் காந்தி சரவணன் ஆகியோர் சிறப்புரையாற்றினர். இம்மாநாட்டில் நலத்திட்ட உத விகள், உபகரணங்கள் உள்ளிட் டவை மாற்றுத்திறனாளிகளுக்கு உட னடியாக சேரும் வகையில் ஒன்றிய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். மாற்றுத்திறனாளி பெண் கள், குழந்தைகள், மீதான வன்மு றையை தடுத்து, குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை வழங்க வேண்டும். நகர்ப்புறங்களிலும் 100 நாள் வேலை திட்டத்தை செயல்படுத்த வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன. இதைத்தொடர்ந்து சங்கத்தின் குமாரபாளையம் தாலுகா தலைவ ராக எஸ்.ஆறுமுகம், செயலாளராக வி.அருண்குமார், பொருளாளராக சி.சண்முகம் உட்பட 25 பேர் கொண்ட தாலுகாக்குழு தேர்வு செய்யப்பப் டது. மாநாட்டை நிறைவு செய்து மாவட்ட அமைப்பாளர் எம்.ஆர்.முரு கேசன் உரையாற்றினார். முடிவில், எம்.சரவணன் நன்றி கூறினார்.