districts

img

கருக்கலைப்பு மாத்திரைகள் பயன்படுத்தியதால் இளம்பெண்களுக்கு உடல்நிலை பாதிப்பு

திருப்பூர், டிச.15- மருத்துவர்கள் பரிந்துரை இல்லாமல்  கருக்கலைப்பு மாத்திரைகள் பயன்படுத்திய தால் இளம்பெண்கள் உடல்நிலை பாதிக்கப் பட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவ மனைகளில் அனுமதிக்கபட்டுள்ளனர். திருப்பூர் வீரபாண்டி, பலவஞ்சிபாளை யம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள பனியன்  நிறுவனங்களில் தங்கியிருந்து பணிக்கு சென்று வரும் தமிழகம் மற்றும் வடமாநி லத்தை சேர்ந்த இளம்பெண்கள் பலர் உடல் நிலை பாதிக்கப்பட்டு அரசு மருத்துவமனைக ளில் சிகிச்சைக்கு சேர்ந்தனர்.  தொடர்ந்து பெண் தொழிலாளர்கள் சிகிச் சைக்கு அனுமதிக்கப்படவே அதிர்ச்சிய டைந்த சுகாதாரத்துறை அதிகாரிகள் இது  குறித்து உடல்நிலை பாதிக்கப்பட்ட பெண்க ளிடம் விசாரணை நடத்தினர். அப்போது அவர் கள் கருக்கலைப்பு மாத்திரைகளை பயன்ப டுத்தியதன் காரணமாக உடல்நிலை பாதிக் கப்பட்டு மருத்துவமணையில் சிகிச்சைக்கு  சேர்ந்தது தெரியவந்தது. கர்ப்பமான இளம் பெண்கள், பெற்றோர் மற்றும் உறவினர்க ளுக்கு தெரியாமல் இருக்க மருந்துக்கடை களில் கருக்கலைப்பு மாத்திரைகளை வாங்கி  பயன்படுத்தியுள்ளனர். இதில் உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளது. மருத்துவர்கள் பரிந் துரை இல்லாமல் மருந்துக்கடைகளில் கருக் கலைப்பு மாத்திரைகள் வழங்கக்கூடாது என்ற விதிமுறை உள்ளது. ஆனால் அதனை  மீறி திருப்பூர் மாநகரில் உள்ள சில மருந் துக்கடைகளில் கருக்கலைப்பு மாத்திரைகள் விற்பனை செய்யப்பட்டுள்ளது.

ரூ.1000, ரூ. 1500 என கூடுதல் விலைக்கு கருக்கலைப்பு  மாத்திரைகளை விற்பனை செய்துள்ளது அதி காரிகள் விசாரணையில் தெரியவந்தது.  இதையடுத்து திருப்பூர் மாவட்ட சுகாதா ரத்துறை இணை இயக்குநர் கனக ராணி  தலைமையிலான மருத்துவத்துறை அதிகா ரிகள் திருப்பூர் வீரபாண்டி, பல்லடம் சாலை  உள்பட மாநகர் பகுதியில் உள்ள மருந்துக்க டைகளில் அதிரடி சோதனை மேற்கொண்ட னர். இதில் சில மருந்துக்கடைகளில் சட்டவி ரோதமாக கருக்கலைப்பு மாத்திரைகள் விற்ப னைக்கு வைக்கப்பட்டு இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது. அதனை அதிகாரிகள் பறிமு தல் செய்ததுடன் எச்சரிக்கையும் விடுத்த னர்.  இதுகுறித்து சுகாதாரத்துறை இணை  இயக்குநர் கனகராணி கூறுகையில், மருத் துவர்கள் பரிந்துரை இல்லாமல் கருக்க லைப்பு மாத்திரைகள் வழங்கக்கூடாது. மேலும் பெண்களும் அதனை பயன்படுத் தக்கூடாது. அதனை பயன்படுத்துவதால் உடல் உபாதைகள் ஏற்படும். எனவே விழிப்பு ணர்வோடு இருக்க வேண்டும். கருக்க லைப்பு மாத்திரைகள் விற்பனை செய்தால் மருந்து கடைகள் மீது நடவடிக்கை எடுக் கப்படும். தேவைபட்டால் காவல்துறை மூல மும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என் றார்.