districts

img

உழைப்பை சுரண்டும் ஒப்பந்த முறையை கைவிடுக

தருமபுரி, பிப்.7- தொழிலாளர்களின் உழைப்பை சுரண் டும் வகையில், நிரந்தர தொழில்களில் கொண்டு வரப்பட்டுள்ள ஒப்பந்த முறையை கைவிட வேண்டும் என வலியுறுத்தி சிஐடியு சார்பில் செவ்வாயன்று ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. அரசு நிறுவனங்களான ரயில்வே, மின்சா ரம், போக்குவரத்து, கேபிள் டிவி, குடிநீர், மருத்துவம் உள்ளிட்ட அனைத்து துறைகளி லும் தொழிலாளர்களின் உழைப்பை சுரண் டும் விதத்தில், நிரந்தர தொழில்களில் ஒப்பந்த முறையை புகுத்துவதை தடுத்து நிறுத்த வேண்டும். உள்ளாட்சித் துறையில் மாநக ராட்சி, நகராட்சி, பேரூராட்சி ஆகியவற்றில்‌ அவுட்சோர்சிங் முறையை  புகுத்த பிறப்பிக் கப்பட்டுள்ள அரசாணைகள் 152, 10, 139 ஆகி யவற்றை உடனடியாக திரும்பப்பெற வேண் டும். குறைந்தபட்ச ஊதியம் ரூ.26 ஆயிரம் என் பதை அமல்படுத்த வேண்டும். அனைவருக் கும் பிஎப், இஎஸ்ஐ உள்ளிட்ட சட்ட சலுகை களை வழங்க வேண்டும். முறைசாரா தொழி லாளர்களுக்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ள அனைத்து பணப்பயன்களையும் நிபந்தனை யின்றி வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக் கைகளை வலியுறுத்தி சிஐடியு சார்பில் செவ் வாயன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு சிஐ டியு மாவட்ட துணைத்தலைவர் சி.முரளி தலைமை வகித்தார். இதில், மாநிலச் செய லாளர் சி.நாகராசன், மாவட்ட செயலாளர் பி. ஜீவா, மாநிலக்குழு உறுப்பினர் சி.கலாவதி, மாவட்ட நிர்வாகிகள் எஸ்.சண்முகம், சி.அங் கம்மாள், டி.லெனின் மகேந்நிரன், சி.சண்மு கம், எஸ்.ஆனஸ்ட்ராஜ், சி.கவிதா, வி.ஜெய ராமன், எம்.சங்கர், வி.வெங்கட்ராமன், கண் ணதாசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்ட னர். சேலம் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு சிஐடியு மாவட்ட தலைவர் டி.உதய குமார் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. இதில், சிஐடியு சாலை போக்கு வரத்து தொழிலாளர் சங்கத்தின் மாநில துணைத்தலைவர் எஸ்.கே.தியாகராஜன், சிஐடியு மாவட்ட செயலாளர் ஏ.கோவிந்தன், மாவட்ட பொருளாளர் வி.இளங்கோ, பி. பன்னீர்செல்வம் உள்ளிட்ட திரளானோர் கலந்து கொண்டனர்.  நீலகிரி நீலகிரி மாவட்டம், உதகை ஆட்சியர் அலு வலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத் திற்கு சிஐடியு மாவட்ட செயலாளர் சி. வினோத் தலைமை வகித்தார். இதில், மாவட்ட பொருளாளர்  நவீன் சந்திரன், மாதர் சங்க மாவட்ட செயலாளர் ஆதிரா, அரசு போக்கு வரத்து சங்க செயலாளர் கணேஷ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

சேலம்

சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு சிஐடியு மாவட்ட தலைவர் டி.உதய குமார் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. இதில், சிஐடியு சாலை போக்கு வரத்து தொழிலாளர் சங்கத்தின் மாநில துணைத்தலைவர் எஸ்.கே.தியாகராஜன், சிஐடியு மாவட்ட செயலாளர் ஏ.கோவிந்தன், மாவட்ட பொருளாளர் வி.இளங்கோ, பி. பன்னீர்செல்வம் உள்ளிட்ட திரளானோர் கலந்து கொண்டனர். 

நீலகிரி

நீலகிரி மாவட்டம், உதகை ஆட்சியர் அலு வலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத் திற்கு சிஐடியு மாவட்ட செயலாளர் சி. வினோத் தலைமை வகித்தார். இதில், மாவட்ட பொருளாளர்  நவீன் சந்திரன், மாதர் சங்க மாவட்ட செயலாளர் ஆதிரா, அரசு போக்கு வரத்து சங்க செயலாளர் கணேஷ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.