districts

img

காட்டு யானையை விரட்டிய வளர்ப்பு நாய்

மேட்டுப்பாளையம், ஜூலை 7-  மேட்டுப்பாளையம், மங்களக்கரைப்புதூர் கிராமத் தில் ஒரு வீட்டுக்குள் நுழைய முற்பட்ட காட்டு யானையை  விரட்டிய வளர்ப்பு நாயின் சிசிடிவி காட்சிகள் தற்போது  வைரலாகி வருகிறது.  கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் மற்றும்  அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இரவு நேரங்களில் வனப் பகுதியில் இருந்து வெளியேறும் காட்டு யானைகள் விவ சாயப் பயிர்களை சேதப்படுத்துவதோடு பொதுமக்களை அச்சுறுத்தும் சம்பவங்கள் அதிகிரித்து வருகிறது. இந் நிலையில், சனியன்று இரவு வனப்பகுதியில் இருந்து  சுமார் 10 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள மங்களக்க ரைப்புதூர் கிராமத்தில், காட்டு யானை ஒரு வீட்டின் முன்பு பயிர் செய்யப்பட்டு இருந்த வாழைமரங்களை சேதப்படுத்தியது. பின்னர், அருகில் இருந்த வீட்டினுள் ளும் நுழைய முற்பட்டது. அப்போது வீட்டிலிருந்து வளர்ப்பு நாய் யானையை பார்த்து குலைக்க ஆரம் பித்தது. இதனையடுத்து யானை அங்கிருந்து வெளி யேறியது. இச்சம்பவம் அங்கு பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தது தற்போது  அந்த வீடியோ வைரலாகி வருகிறது. தினந்தோறும் இரவு நேரங்களில் வனப்பகுதியில் இருந்து வெளியே றும் யானைகளை கட்டுப்படுத்த வனத்துறை நடவ டிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.