districts

img

முறையான குடிநீர் விநியோகம் செய்திடுக

கோவை, மார்ச் 15- கோவை, சின்னமேட்டுப் பாளையம் அடுத்த வேளப்பன் பாளையம் பகுதி மக்களுக்கு முறை யாக குடிநீர் வழங்காமல் இருப் பதை கண்டித்து சிபிஎம் கோவை  மாமன்ற உறுப்பினர்கள் தலைமை யில் பொதுமக்கள் குடிநீர் உந்து  நிலையத்தில் உள்ளிருப்பு போராட் டத்தில் செவ்வாயன்று ஈடு பட்டனர்.  கோவை, எஸ்.எஸ்.குளம் பகுதி  வெள்ளக்கிணறு அருகேவுள்ள வேளப்பம்பாளையத்தில்  அத்திக்கடவு குடிநீரை விநியோகம் செய்யும் குடிநீர் உந்து நிலையம் அமைந்துள்ளது. இங்கிருந்து கோவை மாநகர 12,13,14, மற்றும் 2,3 ஆகிய வார்டு பகுதிகளான உருமாண்டம்பாளையம்,  சின்ன வேடம்பட்டி, அஞ்சுகம் நகர்,  உடையம்பாளையம், வெள்ளக் கிணறு ஆகிய பகுதிகளுக்கு குடி நீர் விநியோகம் செய்யப்படுகிறது.  இந்நிலையில், கடந்த சில  மாதங்களாக குடிநீர் விநியோ கிக்கும் நேரமும், அளவும் குறைந்து  வழங்கப்பட்டது. இப்பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு கள், தனியார் ஹோட்டல்கள்  மற்றும் விடுதிகளுக்கு கூடுதலாக  குடிநீர் விநியோகம் செய்யப் படுவதாக பொதுமக்கள் கூறுகின் றனர். இதுகுறித்து இப்பகுதி பொதுமக்கள், சிபிஎம் கோவை மாமன்ற உறுப்பினர்களான வி.ராம மூர்த்தி, என்.சுமதி ஆகியோரிடம் புகார் தெரிவித்தனர்.  இது குறித்து, குடிநீர் விநியோக  அலுவலகத்தில் புகார் தெரிவித் தால் முறையான பதில் வழங்கப் படவில்லை.

இதையடுத்து, இப் பகுதிக்கு முறையான குடிநீர் வழங்கக் கோரி சிபிஎம் மாமன்ற  உறுப்பினர் என்.சுமதி,  வி.ராம மூர்த்தி ஆகியோர் தலைமையில்  பொதுமக்கள் செவ்வாயன்று வேளப்பம்பாளையம் குடிநீர்  உந்து நிலையத்தில் உள்ளிருப்பு  போராட்டத்தில் ஈடுபட்டனர்.   இதையறிந்த, துணை குடிநீர்  வழங்கல் பொறியாளர் வெங்கடா சலம், கோவை மாநகர வடக்கு மண்டல துணை ஆணையாளர் மோகனசுந்தரி, வடக்கு மண்டல  குடிநீர் வழங்கல் உதவி பொறி யாளர் மற்றும் சரவணம்பட்டி காவல் நிலைய உதவி ஆய்வாளர் கள் ஆனந்த், சரவணன் ஆகியோர்  சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து  போராட்டக்காரர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர்.  இந்த பேச்சுவார்த்தையில் 70  சதமான குடிநீரை உரிய நேரத்தில்  விநியோகம் செய்வது,  மீதமுள்ள  30 சதவிகித குடிநீரை மாநகராட்சி  ஆணையாளர் ஒப்புதலுடன் வழங் குவது என முடிவு செய்யப்பட்டது.  இதையடுத்து போராட்டத்தை கைவிட்டு அனைவரும் கலைந்து  சென்றனர்.  இப்போராட்டத்தில், மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எஸ்.எஸ். குளம் மேற்கு பகுதி செயலாளர்  சண்முகசுந்தரம், பகுதி குழு உறுப் பினர்கள் ரமேஷ், உடையம்பா ளையம் சண்முகசுந்தரம், வாலிபர் சங்க மாவட்ட செயலாளர் அர்ஜுன்,  பொருளாளர் தினேஷ் ராஜா  உள்ளிட்டோர் கலந்து கொண் டனர்.