ஈரோடு, நவ.2- இந்திய தொழிற்சங்க மையத்தின் 15 ஆவது மாநில மாநாட்டிற்கு எடுத்து செல்லப் படும் சின்னியம்பாளையம் தியாகிகள் நினைவு ஜோதி பயணத்திற்கு ஈரோடு மாவட் டத்தில் பல்வேறு பகுதிகளில் உற்சாக வர வேற்பு அளிக்கப்பட்டது. இந்திய தொழிற்சங்க மையத்தின் (சிஐ டியு) 15 ஆவது மாநில மாநாடு நவ.4, 5, 6 ஆகிய தேதிகளில் கன்னியாகுமரியில் நடை பெறுகிறது. இம்மாநாட்டிற்கு எடுத்து செல் லப்படும் சின்னியம்பாளையம் தியாகிகள் நினைவு ஜோதி சிஐடியு கோவை மாவட்ட செயலாளர் எஸ்.கிருஷ்ணமூர்த்தி தலைமை யிலான பயணக்குழு நீலகிரி மாவட்டம் வழி யாக புஞ்சை புளியம்பட்டிக்கு வந்தது. அங்கு சிஐடியு அனைத்து வகை தொழி லாளர் ஐக்கிய தொழிற்சங்க தலைவர் டி. சுப்பிரமணி தலைமையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இதில், சிஐடியு மாவட்ட தலைவர் எஸ்.சுப்ரமணியன், செயலாளர் ஹெச். ஸ்ரீராம், மாவட்டக்குழு உறுப்பினர் ப.மாரி முத்து, மாற்றுத்திறனாளிகள் சங்க செயலா ளர் பி.என்.ராஜேந்திரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதைத்தொடர்ந்து சத்தியமங்கலம் பேருந்து நிலையத்தில் அரசு போக்குவரத்து ஊழியர் சங்க மண்டல தலைவர் கே.மாரப் பன் தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட் டது. கோபிசெட்டிபாளையம் பேருந்து நிலை யத்தில் சிஐடியு மாவட்ட செயலாளர் ஹெச். ஸ்ரீராம் தலைமையில் வரவேற்பு அளிக்கப் பட்டது.
இதனிடையே போக்குவரத்து அரங் கத்திலிருந்து ஜான் கென்னடி தலைமையில் எடுத்து வரப்பட்ட எஸ்.நாராயணசாமி, பி. எஸ்.ஸ்டாலின் மற்றும் பி.சரவணன் நினைவு ஜோதிகள், அந்தியூரிலிருந்து பொதுத்தொழி லாளர் சங்கத்திலிருந்து ஏ.கே.பழனிசாமி தலைமையில் எம்.என்.காளியண்ணன் நினைவு ஜோதி, சித்தோட்டிலிருந்து மின் அரங்கத்திலிருந்து பி.ஸ்ரீதேவி தலைமை யில் எம்.என்.சிவசங்கரன் நினைவு ஜோதி, பவானியிலிருந்து பொது தொழிலாளர் சங் கத்தின் சார்பில் எ.கே.பாலசுப்ரமணியம் நினைவு ஜோதி, கட்டுமான தொழிலாளர் சங் கத்தின் சார்பில் எஸ்.மாதவன் தலைமையில் எடுத்து வரப்பட்ட எம்.எஸ்.ராமன் நினைவு ஜோதி, பீடி, சுருட்டு தொழிலாளர் சங்கத்தின் சார்பில் ஆர்.செந்தில்குமார் தலைமையில் எடுத்து வரப்பட்ட கே.துரைசாமி நினைவு ஜோதி மற்றும் சாலை போக்குவரத்து தொழி லாளர் சங்கத்தின் சார்பில் பி.கனகராஜ் தலை மையில் எடுத்து வரப்பட்ட சி.என்.சிதம்பரம் நினைவு ஜோதிகள் பயண குழுவிடம் அளிக்கப் பட்டது. இதில், சிஐடியு மாவட்ட உதவித்தலை வர் ஆர்.ரகுராமன் மற்றும் பொது தொழி லாளர்கள், போக்குவரத்து, மின் ஊழியர், மருத்துவ பிரதிநிதிகள், டாஸ்மாக் தொழி லாளர்கள் ஏராளமானோர் கொட்டும் மழை யிலும் தியாகிகள் ஜோதிக்கு எழுச்சிமிகு வர வேற்பு அளித்தனர்.