கோவை, ஆக. 14- ரோந்துப்பணிகளை மேற்கொள்ள வசதியாக கோவை மாநகர காவல்துறைக்கு ட்ரைக் எனப்படும் மூன்று சக்கர வாகனம் வாங்கப்பட உள்ளது. கோவை மாநகரில் குற்றச் சம்பவங்களைத் தடுக்கும் விதமாக பல்வேறு நடவடிக்கைகளை காவல் துறையினர் மேற்கொண்டு வருகின்றனர். இதன் ஒருபகுதியாக, பந்தய சாலை, வ.உ.சி பூங்கா உள்ளிட்ட பொதுமக்கள் அதி கம் கூடும் இடங்களில் ரோந்துப் பணியை மேற்கொள்ள வசதியாக கோவை மாநகர காவல்துறைக்கு ட்ரைக் மூன்று சக்கர வாகனம் வாங்கப்பட்டுள் ளது. காவல் துறையினர் சுலபமாக நெரிசலுக்குள் நுழைந்து வெளி யேற முடியும். பேட்டரி மூலம் இயங்கும் இந்த ட்ரைக் பைக்கில் ஒலிபெருக்கியும் பொருத்தப்பட்டுள்ளது. நவீனமயமாக்கும் விதமாக வாங்கப்பட்டுள்ள இந்த ட்ரைக் வாகனத்தை புதனன்று கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் ஆய்வு செய்து, இயக்கி பார்த்து, வாகனத்தில் மேம்படுத்த வேண்டிய அம்சங்கள் குறித்தும் எடுத்து ரைத்தார். இந்த ட்ரைக் வாகனம் விரைவில் கோவை மாநகரம் முழுவதும் ரோந்து செல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.