திருப்பூர், பிப். 3 - 19 ஆவது திருப்பூர் புத்தகத் திருவிழா 2023 -ல் நாள்தோறும் காலை நேரம் மாண வர்களுக்கு அறிவியல் சிந்தனையைத் தூண் டும் அற்புதமான நிகழ்ச்சிகள் நடத்தப்பட் டன. பிப்ரவரி 27 வெள்ளின்று முதல் நாள் மாலை புத்தகத் திருவிழா தொடக்க நிகழ்ச்சி நடைபெற்றது. அதைத் தொடர்ந்து இரண் டாம் நாள் சனிக்கிழமை முதல் ஒவ்வொரு நாளும் காலை நேர நிகழ்ச்சிகள் புத்தகத் திரு விழா அரங்கில் நடைபெற்றது. இந்த நிகழ்ச் சியில் எழுத்தாளர் சரிதா ஜோ பங்கேற்று பாலின சமத்துவம் குறித்து கதைகள் மூலம் எடுத்துரைத்தார். இந்நிகழ்வில் 600 மாணவர் கள் கலந்து கொண்டனர். இதில் மேலும் சிறப்பு சேர்க்கும் வகையில் பாரதி புத்தகால யம் சார்பில் மாணவர்களுக்கான 50 புத்தகங் கள் குழந்தைகளால் வெளியிடப்பட்டது. கடந்த ஞாயிறன்று நடைபெற்ற நிகழ்வில், ஐஏஎஸ் ஆவது எப்படி என்ற தலைப்பில் மாணவர்களுக்கான போட்டித் தேர்வு பயிற்சி குறித்து கோவையைச் சேர்ந்த ஓய்வு பெற்ற விமானப்படை அதிகாரி கணேசன் சிறப்புரை ஆற்றினார். 21 ஆம் நூற்றாண்டில் மாணவர்க ளுக்கு தேவையான திறன்கள் குறித்து அவர் உரையாடினார்.
இந்நிகழ்வை திருப்பூர் சார் ஆட்சியர் ஸ்ருதன் ஜெய் நாராயணன் தலைமை ஏற்று நடத்தினார். கருத்தரங்கிற்கு சிறப்பு விருந்தினர்களாக ஐஏஎஸ் அதிகாரிக ளான பல்லவி வர்மா, பொன்தாரணி மற்றும் பிரியங்கா ஆகியோர் பங்கேற்றனர். மாண வர்கள் நான்கு ஐஏஎஸ் அதிகாரிகளிடம் கேள் விகளைக் கேட்டு உரையாடினர். இந்நிகழ் வில் 400க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர். திங்கள்கிழமை நடைபெற்ற நிகழ்வில் ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி குறித்தும் வானியல் குறித்தும் மாணவர்களுக்கு மிக வும் எளிமையாக புரியும் வகையில் தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாநில கருத்தா ளர் ஜெயமுருகன் கருத்துரை வழங்கினார். இந்நிகழ்வில் 500 மாணவர்கள் பங்கேற்றனர். மாணவர்கள் மிகவும் உற்சாகத்துடன் கருத்த ரங்கை கண்டு ரசித்தனர். செவ்வாயன்று பள்ளி மாணவர்களுக் கான திறன் மேம்பாடு குறித்து டாக்டர் கவிதா சன் சிறப்பாக உரையாற்றினார். கல்வி மற்றும் சமூகம் குறித்து விரிவான விழிப்புணர்வை மாணவர்களிடையே ஏற்படுத்தினார். 400க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர். புதனன்று மாணவர்களிடம் சூழலியல் குறித்து எழுத்தாளர் கோவை சதாசிவம் உரையாற்றினார். மனிதனின் செயல்களால் இயற்கை எவ்வளவு குழம்பி உள்ளது என் பதை குறித்தும் கடந்த 20 ஆண்டுகளில் உல கம் கண்ட மாற்றங்கள் குறித்தும் நெகிழி யின் தாக்கம் குறித்தும் மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் உரை யாற்றினார். மாணவர்கள் தங்கள் சூழலியல் சார்ந்த சந்தேகங்களை எழுத்தாளரிடம் கேட்டு விடை பெற்றனர். 350க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர். வியாழனன்று தமிழ்நாட்டு தலைவர் களை நெஞ்சம் மறக்குமா என்ற தலைப்பில் எழுத்தாளர் அனிதா கிருஷ்ணமூர்த்தி மாண வர்களிடையே உரையாற்றினார். சுதந்திரப் போராட்டம் முதல் தற்பொழுது வரை தமிழ் நாட்டில் நம்மிடையே வாழ்ந்து மறைந்த தலை வர்கள் குறித்து நினைவூட்டினார். அதைத் தொடர்ந்து மண்பாண்டங்கள் செய்யும் முறை குறித்து கனகராஜ் விளக்கம் அளித்து நேரடியாக செயல்முறை விளக்கம் அளித் தார்.
மாணவர்கள் மிகுந்த ஆர்வத்துடனும், உற்சாகத்துடனும் இதைக்கண்டு களித் தனர். இந்நிகழ்வில் 350 மாணவர்கள் கலந்து கொண்டனர். ஆறாம் நாளான வெள்ளியன்று கதை சொல்லி ஜானகி சபேஷ் மிகவும் உற்சாகமூட் டும் எளிமையான நடையில் மாணவர்க ளுக்கு கதைகளை கூறினார். அதைத்தொ டர்ந்து தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் அமரராஜன் கற்பனையும், கைத்திறனும் என்ற தலைப்பில் ஓரிகாமி மற்றும் கைவினை பயிற்சியை செயல்முறை மூலம் விளக்கி னார். மிகுந்த ஆர்வத்துடன் மாணவர்கள் பங் கேற்றனர். 400 மாணவர்கள் இந்நிகழ்வில் பங் கேற்றனர். புத்தகத் திருவிழா என்பது புத்தகங் களை மட்டும் விற்பனை செய்யும் வணிக நிகழ்ச்சியாக மட்டும் இல்லாமல், மாணவர்க ளுக்கு கல்வியின் மேல் ஆர்வத்தையும், கேள்வி ஞானத்தையும் தூண்டக்கூடிய முறையில் மிகவும் அர்த்தச் செறிவுடன் இந்த நிகழ்வுகள் நடைபெற்றன. இந்த காலை நேர அமர்வுகளில் பங்கேற்ற மாணவர்கள் ஒவ்வொரு நாளும் இங்கேயே வகுப்பறை யாக இருக்கக் கூடாதா என்ற ஏக்கத்துடன் கலைந்து சென்றனர்.