districts

img

போர் குணம் மிக்க தொழிலாளி வர்க்கம்

ஒன்றுபட்ட கோவை மாவட்டத்தில் தொழி லாளர் வர்க்க, தொழிற்சங்க இயக்கத்தை துவக்கி வைத்த பெருமை மாபெரும் தேச பக்தர் வ.உ.சிதம்பரனாருக்கே உரியது. ஆங்கிலேய அரசாங்கத்தால் ஜோடிக்கப் பட்ட நெல்லை கலவர வழக்கில் இரட்டை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட வ.உ.சிதம்பரனார், கோவை சிறையில் செக்கிழுத்தார். கடின  வேலைகளைச் செய்யும்படி நிர்ப்பந்திக்கப்பட் டார். மேல்முறையீட்டில் தண்டனை குறைக் கப்பட்ட அவர், பின்னர் சென்னையில் மிகுந்த வறுமையில் வாடினார். அங்கே தொழிற்சங்க  இயக்கத்திற்கு உதவினார். அச்சமயத்தில்தான் கோவையிலிருந்த மனிதாபிமானம் மிக்க நண் பர்கள் சிலர், வ.உ.சியை கோவைக்கு வந்து தங்கும்படி கேட்டுக் கொண்டனர். அவர் அங்கே சென்ற பின் மிகவும் குறைந்த கூலியில், அடி, உதைகளைத் தாங்கி வாழவேண்டியிருந்த பஞ்சாலைத் தொழிலாளருக்கென சங் கத்தை உருவாக்கித் தரும்படி கேட்டுக் கொண்ட னர். இதன் விளைவாக உருவானது தான்  கோவை தொழிலாளர் சங்கம். வ.உ.சி இந்த  சங்கத்தை உருவாக்கித் தந்ததோடு, தொழிலா ளருக்கென மலிவு விலைக்கடையையும் திறக்கச் செய்தார். பிரபல வழக்கறிஞரும், தேசபக்தருமான என்.எஸ்.ராமசாமி அய்யங்கார் தலைமையி லான இச்சங்கம் தொழிலாளிகளுக்கென பல  போராட்டங்களை நடத்தியது. ஆலை நிர்வாகங் களின் கடும் எதிர்ப்பை அது சந்திக்க வேண்டியி ருந்தது. ராமசாமி அய்யங்கார் தொழிற்சங் கத்தை நடத்திய விதமே அலாதியானது. மில்  நிர்வாகத்துடன் தொழிலாளிகள் பிரச்சனை குறித் துப் பேசுவார். அவர்கள், கோரிக்கையை ஏற்க  மறுத்து பிடிவாதமாக இருந்தால், அந்த நிர்வா கியின் மண்டையை மட்டும் உடைக்கும்படி தொழிலாளிகளிடம் கூறுவார். அவர்களும் அவ் வாறே செய்து கைதாவார்கள். வழக்கறிஞரான அய்யங்கார், அவர்களை ஜாமீனில் வெளியே  கொண்டு வந்து வழக்கை நடத்தி அனை வருக்கும் விடுதலை வாங்கித் தருவார். இந்நிலையில்தான் தந்தை பெரியார் 1932 ஆம் ஆண்டில் உலக சுற்றுப்பயணம் முடிந்து இந்தியா திரும்பினார். இப்பயணத்தின் போது சோவியத் நாட்டிற்கும் சென்ற பெரியார், அங்கே கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையின் கீழ் மகத்தான சோசலிச அமைப்பு உருவாகி வருவதைக் கண்டு பெருமிதம் கொண்டார்; அத னால் மிகவும் கவரப்பட்டார். ஈரோட்டிற்குத் திரும் பியதும், அவரும், அவருடைய நெருங்கிய நண் பர் எஸ்.ராமனாதனும் சேர்ந்து மார்க்ஸ், ஏங் கல்ஸ் எழுதிய “கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை”யை முதன் முறையாக தமிழில் மொழியாக்கம் செய்து வெளியிட்டனர். “இரு ஜெர்மானியர்கள் கருத்து” என்ற தலைப்பில் இது வெளியானது. ஏங்கெல்ஸ் எழுதிய கம்யூனிசக் கோட்பாடுகள் நூலை தமிழில் அவர் வெளியிட்டார். மே  தினத்தை சமதர்மப் பெருநாளாகக் கொண்டாட வேண்டுமென பெரியார் கேட்டுக் கொண்டார். மார்க்சிய அறிஞர் ம.சிங்காரவேலரிடம் தன் னுடைய சுயமரியாதை இயக்கத்திற்காக ஒரு வேலைத் திட்டம் எழுதித் தர வேண்டுமென்று கேட்டுக் கொண்டார். அவ்வாறு உருவானது தான் ஈரோட்டுத் திட்டம். இது “ஈரோட்டுப் பாதை” என்றும் அழைக்கப்பட்டது. இது கம்யூனிஸ்ட் கட்சியின் திட்டம் போலவே இருந்தது. இதைத் தொடர்ந்து தமிழகமெங்கும் சோசலிச பிரச் சாரத்தில் பெரியார் இறங்கினார். முதலாளி ஒழிப்பு மாநாடு, நிலச்சுவான்தார் ஒழிப்பு மாநாடு, லேவாதேவி ஒழிப்பு மாநாடு போன்ற பல மாநாடுகளை கோவை மாவட்டத்திலும், இதர  மாவட்டங்களிலும் நடத்தினார். இதில் அவருக்கு வலது கையாக இருந்தவர் இளம் கம்யூனிஸ்ட் ஜீவா! தன் முதல் இலக்காக கோவை நகரைத்  தேர்ந்தெடுத்த ஜீவா, அவல நிலையில், குறைந்த  கூலியில் உழன்று வந்த தொழிலாளிகளை தன் ஆவேசமிக்க உரைகளால் ஈர்த்தார். ரஷ்ய புரட்சி குறித்தும். சோசலிசம் குறித்தும் விளக்கும் ஜீவா தொழிலாளி வர்க்கம் என்பதுதான் புரட்சி யின் சக்தி சோசலிசம் தான் முதலாளித்துவச் சுரண்டலை ஒழிக்கும் என்பதை ஆவேசமாக விளக்கி கூறுவார். சுக்கிரவார்பேட்டை, பீள மேடு, சிங்காநல்லூர், இருகூர் மற்றும் குறிச்சி  ஆகிய இடங்களில் தொழிலாளிகள் ஜீவாவிற்கு பெரும் வரவேற்பு கிடைத்தது.

 குடும்பம், குடும்பமாக அவரது கூட்டங்களில் பங்கேற்றனர். தொழிலா ளிகளின் வாழ்க்கை நிலைமையை சோக மாக சித்தரிக்கும், “காலுக்கு செருப்பும் இல்லை; கால் வயிற்று கூலும் இல்லை” என்ற பாடல் மிகப் பிரபலமா னது இக்காலகட்டத்தில் தான். ஜீவா எழுதி கோவை ராம்தாஸ் பாடிய இப்பா டல் கேட்போரை கண்கலங்கச் செய் யும். ஆனால் அந்த 1930 ஆம் ஆண்டு களில் நடுப்பகுதியில் தொழிலாளிக ளின் உணர்வுக்கேற்ப தொழிற்சங்கம் இல்லாத நிலை இருந்தது. கோவையில் அந்த இடத்தை கைப்பற்றிக் கொண்டு இருந்தவர் வாசுதேவ் என்ற நீதிக் கட்சிக் காரர். தொழிற்சங்க தலைவர் என்ற போர்வையில் இயங்கி வந்த வாசுதேவ், கோவை மில் முதலாளிகளின் செல்லப் பிள்ளை. தொழிலாளிகளின் போராட்ட உணர்வை மழுங்கடிப்பது தான் அவ ரது நோக்கம். 1936 ஆம் ஆண்டில் கோவை ஸ்டேன்ஸ் மில் நிர்வாகம் ஆங்கி லேய அரசாங்கம் கூறியபடி வேலை நேரத்தை 10 மணியிலிருந்து 9 மணி நேரமாக குறைக்க மறுத்தது. இதை எதிர்த்து அந்த மில்லின் தொழிலாளி கள் வேலை நிறுத்தத்தில் இறங்கினர். ஆனால், தொழிற்சங்கத் தலைவரான வாசுதேவ், இரண்டு வார காலம் கழித்து தான் அங்கே வந்து, தொழிலாளிகள் வேலை நிறுத்தத்தை கைவிட்டு வேலைக்கு திரும்ப வேண்டும், எனக் கூறி னார். இது தொழிலாளிகளுக்கு அவர் மீது வெறுப்பை ஏற்படுத்தியது. விரை வில் அவர் தலைவர் பதவியில் இருந்து அகற்றப்பட்டு, பெரியாரின் நண்பரும், சுயமரியாதை இயக்க ஆதரவாளரும், காங்கிரஸ்காரருமான எஸ்.ராமநாதனை தலைவராக தேர்ந்தெடுத்தனர். சங்கத் தின் பெயரும் கோயம்புத்தூர் மில் தொழிலாளர் சங்கம் எனப் பெயர்  மாற்றப்பட்டது. ஆனால், 1937 ஆம் ஆண்டு ராஜாஜி தலைமையில் சென்னை மாகாணத் தில் காங்கிரஸ் அமைச்சரவை அமைக் கப்பட்ட போது, எஸ்.ராமநாதன் சுகாதா ரத்துறை அமைச்சர் ஆனார். எனவே அவர் தலைவர் பதவியில் இருந்து விலகி னார். ராஜாஜி தலைமையில் அமைச்ச ரவை அமைந்தது, இது தொழிலாளர்க ளுக்கு இடையில் பெரும் நம்பிக்கையை உருவாக்கியது. நிர்வாகங்களின் அடக்குமுறை, மேஸ்திரிகளின் அட்டூழி யம் போன்றவற்றால் பாதிக்கப்பட்ட தொழிலாளிகள் வேலை நிறுத்தங்களில் இறங்கினர். மில் நிர்வாகங்கள் ரவுடி கள் மற்றும் மேஸ்திரிகளை கொண்டு போர்க்குணம் மிக்க தொழிலாளிகள் மீது தாக்குதல் கொடுத்தனர். காளீஸ்வரா மில் நிர்வாகம் கே.ரமணியை வேலை நீக்கம் செய்தது. பாப்பநாயக்கன்பா ளையம் லட்சுமி மில் தொழிலாளிகள்  8 அம்ச கோரிக்கையை முன்வைத்து வேலை நிறுத்தத்தில் இறங்கினர். லட் சுமி மில் முதலாளி குப்புசாமி நாயுடு தனது குண்டர்கள் மூலம் தொழிலாளி கள் மீது தாக்குதல் தொடுத்தார். தொழி லாளிகளுக்கு எப்பொருளையும் விற்கக் கூடாதென கடைக்காரர்களை மிரட்டி னார். இச்சூழ்நிலையில் தான் தங்க ளுக்கு வழிகாட்ட உறுதியான தலைமை தேவை என்று உணர்ந்த தொழிலாளி கள், சென்னையில் தொழிற்சங்க இயக் கத்தை உருவாக்கி வந்த இளம் கம்யூ னிஸ்ட் தலைவர்களை சந்தித்து அவர்க ளிடம் ஆலோசனை பெற முடிவு செய்த னர். கே ரமணி மற்றும் இரண்டு தொழி லாளிகளை சென்னைக்கு அனுப்பினர். அவர்கள் சென்னையில் பி.ராமமூர்த்தி, ஜீவா, ஏ.எஸ்.கே,பி.சீனிவாசராவ் உள்ளிட்ட தலைவர்களை சந்தித்து பேசி வழிகாட்ட வேண்டுமென கோரி னர்.

அவர்களும் அதையோற்று முதலில் ஜீவாவை கோவைக்கு அனுப்பினர். ஜீவாவின் ஆவேசமிக்க உரைகள் வேலை நிறுத்தத்தில் இறங்கியிருந்த தொழிலாளிகளுக்கு ஆவேசத்தை ஊட் டியது. பீளமேட்டில் நடைபெற்ற கூட்டத் தில் 15 ஆயிரம் பேர் பங்கேற்ற னர். ஜீவாவை தொடர்ந்து பி.ராம மூர்த்தி கோவைக்கு வந்தார்,  அவர் மாகாண தொழிலாளர் நல அமைச்சர் வி.வி.கிரியையும் அங்கே வரச் செய்தார். போராட்ட வீச்சு, மிக பலமாக இருந்ததால் முன்பு 8 கோரிக்கை களை முன்வைத்த தொழிற்சங்க தலை வர்கள், இப்பொழுது அதை 13 ஆக அதிகரித்தனர். வேறு வழியின்றி நிர்வா கமும் பணிந்தது. இந்த கோரிக்கை களில் மிக முக்கியமானதாக கருதப்பட வேண்டியது தொழிற்சங்கத்தை நிர்வா கம் அங்கீகரிக்க வேண்டும் என்பதா கும். கோவை தொழிலாளி வர்க்கத்தின் இந்த மகத்தான வெற்றியானது செங் கொடி இயக்கத்தை கோவை மண்ணில் தடம் பதிக்க செய்தது அடுத்து வந்த காலங்களில் கம்யூ னிஸ்டுகள் தலைமையிலான தொழிற் சங்க இயக்கம் வரலாறு முன்னே எப்பொ ழுதும் கண்டிராத வர்க்க போராட்டங்க ளுக்கு தலைமை தாங்கி நடத்தியது. தமி ழகத்தில் வர்க்க போராட்டத்தின் தலை வனாக கோவை தொழிலாளி வர்க்கம்  எழுந்தது தொழிலாளர்களின் வீர மிக்க போராட்டம் வியக்கத்தக்கதாகும். அளப்பரிய சாதனை என்று அதன் சாதனைகளை கூறிக் கொண்டே போகலாம். அவை ஒவ்வொன்றும் தனி வரலாறாக விரியும்.