districts

img

தான் பிறந்த மருத்துவமனையிலேயே மருத்துவராக சேர்ந்த அரசு பள்ளி மாணவி

நாமக்கல், மார்ச் 29- குமாரபாளையம் அரசு மருத்துவம னையில் பிறந்த குழந்தை, அதே மருத்துவமனையில் மருத்துவராக பணியில் சேர்ந்துள்ளார். நாமக்கல் மாவட்டம், குமாரபாளை யம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி சாலை, முருங்கைக்காடு பகுதியைச் சேர்ந்தவர் பானு (53). இவரது கணவர்  உடல்நலமில்லாமல் சுமார் 23 ஆண்டுக ளுக்கு முன் இறந்துவிட்டார். இவர்க ளுக்கு புவனேஸ்வரி (31), சாந்தலட்சுமி  (29) இரு மகள்கள் உள்ளனர். கைத் தறி கூலி வேலை செய்து இருவரையும்  வளர்த்து ஆளாக்கியுள்ளார் பானு.  மூத்த மகள் டிப்ளமோ இன் கார் மெண்ட்ஸ் டெக்னாலஜி படித்துள்ளார்.  இளைய மகள் சாந்தலட்சுமி தற்போது மருத்துவராக குமாரபாளையம் அரசு  மருத்துவமனையில் பணியில் சேர்ந் தார். இவரை தலைமை மருத்துவர் பாரதி, மருத்துவர் அருண், செவிலியர் மேற்பார்வையாளர் சாந்தி உள்பட பல ரும் வாழ்த்தினர். சாந்தலட்சுமி இதே  மருத்துவமனையில் 1995 ஆம் ஆண்டு  பிறந்தவர் என்பதும், குமாரபாளையம் அரசு பள்ளியில் பயின்று, தற்போது மருத்துவராக பணியில் சேர்ந்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.