உதகை, நவ.13- நீலகிரி மாவட்டத்தில் பெய்து வரும் கனமழையால் உதகை, குன்னூர் ஆகிய பகு தியில் 8 வீடுகள் சேதம் அடைந்துள்ளன. நீலகிரி உட்பட தமிழகம் முழுவதும் கடந்த 2 நாட்களாக கனமழை பெய்து வருகிறது. நீலகிரி மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக பெய்த மழை காரணமாக ஆங்காங்கே சாலை களில் மரங்கள் விழுந்தன. மேலும் ஒரு சில இடங்களில் மண்சரிவு ஏற்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் ஞாயிறன்று மதியம் வரை குன் னூர் பகுதியில் 4, பந்தலூர் மற்றும் கோத்த கிரியில் தலா ஒன்று, உதகையில் 2 வீடுகள் என 8 வீடுகள் சேதமடைந்துள்ளன. இதற்கி டையே உதகை கோடப்பமந்து கால்வாய் பகு தியில் மாவட்ட ஆட்சியர் ச.பா.அம்ரித் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது கால்வாயிலிருந்து ரயில் நிலையம் அருகே உள்ள சாலைக்கு கழிவுநீர் வராமல் இருக்க மணல் மூட்டைகளை கொண்டு அடுக்குமாறு நகராட்சி நிர்வாகத்திற்கு உத்தரவிட்டார். குன்னூர் காந்திபுரம் பகுதியில் ஞாயி றன்று பெய்த கனமழையால் நடைப்பாதை மற்றும் தடுப்புச்சுவர் இடிந்து விழுந்தது.
மேலும், தொடர் மழையால் தொட்டபெட்டா சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகனங்கள் நீண்ட தூரத்துக்கு அணி வகுத்து நின்றன. இதேபோல் குன்னூர் நான்சச் மற்றும் கிளன்டன் பகுதியில் சாலை யில் மரம் விழுந்தது. அதை தீயணைப்பு துறை யினர் உடனடியாக வெட்டி கட்டினார். இதற் கிடையே அதிதீவிர பாதிப்பு இருக்கும் என்று நீலகிரி மாவட்டத்தில் எதிர்பார்த்த நிலையில் தற்போது பாதிப்பு குறைவாக இருக்கும் என்ப தால் அரக்கோணத்தில் இருந்து வந்த தேசிய பேரிடர் மீட்பு படையினர் வேறு இடத்திற்கு மாற்றி அனுப்பப்பட்டனர். கடந்த வாரம் மாவட்ட நிர்வாகம் குறித்து அறிந்து கொள்வதற்காக பயிற்சி வகுப்புக் காக வந்த தேசிய பேரிடர் மீட்பு படையினர் 14 பேர் தற்போது உதகையிலுள்ள தமிழகம் விருந்தினர் மாளிகையில் தயார் நிலையில் உள்ளனர். மேலும் அபாயகரமான நிகழ்வு கள் ஏற்பட்டால் நீலகிரி மாவட்ட பேரிடர் மேலாண்மை நிர்வாகத்தை 1077 அல்லது 04232442344 என்ற எண்களில் தொடர்பு கொள் ளலாம் மாவட்ட நிர்வாகம் அறிவித்து உள் ளது.