வெறிநாய் கடித்து 6 பேர் காயம்
சேலம், ஜூலை 10- நங்கவள்ளியில் வெறிநாய் கடித்ததில் 6 பேர் காய மடைந்து, அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட் டுள்ளனர். சேலம் மாவட்டம், நங்கவள்ளியில் ஏராளமான இறைச்சிக் கடைகள் உள்ளன. இந்த கடைகளில் இருந்து வீசப்படும் எலும்புத் துண்டுகளுக்காக ஏராளமான நாய் கள் சுற்றித் திரிகின்றன. பேரூராட்சி பேருந்து நிலையம் பகுதியில் ஏராளமான நாய்கள் உலாவுவதால் பயணி கள் அச்சமடைந்துள்ளனர். நாய்கள் குறுக்கே சென்று விடுவதால், இருசக்கர வாகனங்களில் செல்வோர் விபத்துக்குள்ளாகின்றனர். இந்நிலையில், செவ்வா யன்று நங்கவள்ளி, சாணாரப்பட்டியில் சாலையில் நடந்து சென்ற தங்கமணி (55), சின்னையன் (72), வெங்க டாசலம் (70), அங்கப்பன் (75), காசி கவுண்டர் (55), இளையபாரதி (17) ஆகியோரை வெறிநாய் கடித்தது. இதையடுத்து காமடைந்தவர்கள் அனைவரும் மேட்டூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப் பட்டனர். தெரு நாய்களின் எண்ணிக்கையைக் கட்டுப் படுத்தி, பொதுமக்களை பாதுகாக்க நங்கவள்ளி பேரூ ராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
கள்ளச்சாராயம் விற்றவர் கைது
தருமபுரி, ஜூலை 10- ஏரியூர் அருகே கள்ளச்சாராய விற்பனையில் ஈடு பட்டிருந்தவரை காவல் துறையினர் கைது செய்தனர். தருமபுரி மாவட்டம், பென்னாகரத்தை அடுத்த ஏரி யூர் காவல் நிலையத்திற்குட்பட்ட பகுதியில், காவல் ஆய்வாளர் யுவராஜன் தலைமையிலான காவலர்கள் புதனன்று ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது செம்மேடு காவிரி ஆற்றங்கரையோரப் பகுதிக்கு சென்ற போது, சுமார் 50 வயது மதிக்கத்தக்க நபர் சந்தேகம்படும் படி கையில் வெள்ளை நிற கேனுடன் நின்று கொண்டிருந் தார். மேலும், அவர் போலீசார் வருவதை கண்டதும் கேனை அங்கேயே போட்டுவிட்டு தப்பி ஓடினார். உடனே போலீசார் சுதாரித்து கொண்டு அந்த நபரை சுற்றி வளைத்து பிடித்து விசாரித்ததில், பென்னாகரம் அருகே உள்ள மஞ்சாரஅள்ளி, டி.சோளப்பாடி கிராமத்தைச் சேர்ந்த ராஜி (51) என்பதும், அவர் 10 லிட்டர் கேனில் கள் ளச்சாராய விற்பனையில் ஈடுபட்டிருந்ததும் தெரியவந் தது. இதையடுத்து அவரை கைது செய்த போலீசார், கள்ளச்சாராயத்தை சம்பவ இடத்திலேயே கீழே கொட்டி அழித்தனர்.
தேசிய கல்லூரியில் இடம் பிடித்து பழங்குடியின மாணவி சாதனை!
சேலம், ஜூலை 10- ஜேஇஇ நுழைவுத்தேர்வில் தேர்ச்சி பெற்று, திருச்சி என்ஐடி கல்லூரியில் இடம் பிடித்த, சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த பழங்குடி யின மாணவிக்கு பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். சேலம் மாவட்டம், பெத்தநாயக் கன்பாளையம் வட்டம், கருமந்து றையை அடுத்த வேளம்பட்டு கிரா மம் மலைவாழ் பழங்குடியினத் தைச் சேர்ந்த மாணவி சுகன்யா (17). தாயை இழந்த சுகன்யாவை, அவ ரது உறவினர்கள் படிக்க வைத்து வருகின்றனர். கரியக்கோயில் பழங் குடியினர் நல அரசு உண்டு உறை விட மேல்நிலைப்பள்ளியில் 12 ஆம் வகுப்பு முடித்தார். இந்நிலையில், மத்திய அரசு பொறியியல் கல்லூரி சேர்க்கைக்கான ஜேஇஇ நுழைவுத் தேர்வில் வெற்றி பெற்றார். இதைய டுத்து சுகன்யாவுக்கு திருச்சியில் உள்ள என்ஐடி தேசிய தொழில்நுட் பக் கல்லூரியில் சேரும் வாய்ப்பு கிடைத்துள்ளது. மலைவாழ் பழங் குடியின மாணவிகளுக்கு முன்னு தாரணமாகியுள்ள சுகன்யாவிற்கு, அரசு பள்ளி, கல்லூரி ஆசிரியர்கள், கல்வியாளர்கள் பாராட்டு தெரி வித்து வருகின்றனர். இதுகுறித்து மாணவி சுகன்யா கூறுகையில், பள்ளியிலேயே பயிற்சி அளித்து ஜேஇஇ நுழைவுத்தேர்வு எழுதுவதற்கு ஊக்கமளித்தனர். பழங்குடியின மாணவ, மாணவி கள் தன்னம்பிக்கையுடன் படித்து தேசிய அளவிலான தொழில்நுட் பக் கல்லூரிகளில் பயிலும் வாய்ப் பையும், பெரிய நிறுவனங்களில் சேரும் வாய்ப்பையும் பெற வேண் டும், என்றார். இதுகுறித்து பழங்குடியின செயற்பாட்டாளர் ஒடியன் லட்சும ணன் கூறுகையில், கடந்த 60 ஆண்டு களில் திருச்சி என்ஐடி-யில் முதன் முதலாக பழங்குடி இன மாணவிக ளான சுகன்யா மற்றும் ரோஹி ணிக்கு இடம்கிடைத்திருக்கிறது என் கிற செய்தி பல ஊடகங்களில் வரு கிறது. இருவருக்கும் வாழ்த்துகள். ஆனால் திருச்சி என்ஐடியில் இடம் கிடைத்து படித்த முதல் பழங்குடி யின மாணவியின் பெயர் சபிதா. சபிதா இருளர் பழங்குடியினத்தை சேர்ந்தவர் கோவை மாவட்டம், வெள்ளியங்காடு ஊராட்சியில் உள்ள காளியூர் என்னும் பழங்குடி கிராமத்தை சேர்ந்தவர். வெள்ளி யங்காடு அரசு மேல்நிலைப்பள்ளி யில் பயின்ற அவர் பள்ளியில் முதல் மாணவியாக திகழ்ந்தார். பொதுத் தேர்வில் பள்ளியில் முதலிடம் பிடித் தார். ஆசிரியர்கள் வழிகாட்டுதலில் ஜேஇஇ தேர்வைமுடித்து திருச்சி என்ஐடியில் வேதிப் பொறியியல் பிரிவில் 2017இல் சேர்ந்தார். என்ஐடிக்களுக்கிடையேயான தேசிய அளவிலான கபடிப் போட்டி களில் சிறந்த வீராங்கனையாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். திருச்சி என்ஐடிக்கு தன் வாழ்நாளில் அப் படியொரு பரிசை முதன்முதலாக சபிதாதான் வாங்கித்தந்தார். வேதிப் பொறியியலில் சிறந்த நிலை யில் தேர்ச்சியடைந்த சபீதா. தற் போது மங்களூரில் புகழ்பெற்ற ஒரு நிறுவனத்தில் பணியாற்றி வருகி றார், என்றார்.
நிலத்தை அளவீடு செய்யாததால் சாலை மறியல்!
நாமக்கல், ஜூலை 10- நிலத்தை அளவீடு செய்யாமல் அதி காரிகள் அலைகழிப்பதாக குற்றம் சாட்டி, இலுப்புலி கிராமத்தில் பொது மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். நாமக்கல் மாவட்டம், இலுப்புலி கிரா மம், மாரப்பம்பாளையம் அருந்திய தெரு அருகாமையில் அரசு புறம்போக்கு நிலம் சுமார் ஒன்றை ஏக்கர் நிலம் உள் ளது. இதனை அளவீடு செய்ய வேண் டும் என்று அப்பகுதி பொதுமக்கள் கடந்த ஒரு வருடமாக மாவட்ட ஆட்சி யர், வட்டாட்சியர், வருவாய் கோட்டாட் சியர் என பல்வேறு துறைகளுக்கு கோரிக்கை மனு அளித்து வந்தனர். இந் நிலையில் தொடர்ந்து கால தாமதம் செய்து வந்ததால், மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் சார்பில் போராட்ட அறி விப்பு கடந்த சில வாரங்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து வருவாய் ஆய்வாளர் அனுராதா, துணை வட்டாட்சியர் கனகலட்சுமி உள்ளிட் டோர் நேரில் வந்து நில அளவீடு செய்த னர். இந்நிலையில் அரசு சார்பில் போடப் பட்டுள்ள முட்டுக்களில் இருந்து நில அளவீடு செய்யாமல் விட்டுவிட்டனர். இந்த அளவீட்டில் முழுமையாக பணிகளை செய்து முடிக்காமல் செல் வதை கவனித்த அப்பகுதி பொதுமக் கள் முழுமையாக அளவீடு செய்து தர வேண்டும் என கேட்டனர். அப்போது எங்களுக்கு நேரமில்லை மீண்டும் இன் னொரு நாள் வைத்துக் கொள்ளலாம் என்று அலுவலர்கள் தெரிவித்துள்ள னர். இதனை கண்டித்து, எலச்சிபாளை யம் ஒன்றிய கவுன்சிலர் சு.சுரேஷ் தலை மையில் பொதுமக்கள் புதனன்று சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு வந்த வருவாய் ஆய் வாளர் அனுராதா பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு, முழுமையாக அளவீடு செய்வ தாக உத்தரவாதம் அளித்ததின் பேரில் போராட்டத்தை கைவிட்டனர். பொதுமக் களின் மறியல் காரணமாக சிறிது நேரம் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
புதிய திட்டப்பணிகள்: அமைச்சர் துவக்கி வைப்பு
திருப்பூர், ஜூலை 10- திருப்பூர் மாவட்டம், வெள்ளகோவில் ஊராட்சி ஒன்றியம், பச்சாபாளையம் மற்றும் மேட்டுப்பாளையம் ஊராட்சிகளில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டுத் திட்டம், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம், மாநில நிதிக் குழு மானியத்திட்டம் ஆகிய திட்டங்களின் கீழ் ரூ.49.33 லட்சம் மதிப்பீட்டில் புதிய திட்டப்பணிகளை தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் புதனன்று துவக்கி வைத்து, முடிவுற்ற பணியினை திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் கோ.மலர்விழி, திருப்பூர் மாநகராட்சி 4 ஆம் மண்டலத்தலைவர் இல.பத்மநாபன், வெள்ளகோவில் வட் டார வளர்ச்சி அலுவலர்கள் மற்றும் துறை சார்ந்த அலுவலர் கள் பலர் கலந்து கொண்டனர்.
பூலாங்கிணரில் நாளை மின்தடை
பூலாங்கிணரில் நாளை மின்தடை உடுமலை, ஜூலை 10- பூலாங்கிணர் துணைமின் நிலையத்தில் பராமரிப்பு வேலைகள் நடைபெறுவதால் வெள்ளியன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை ஏற்படும் என தெரிவிக்கப் பட்டுள்ளது. மின்தடை ஏற்படும் பகுதிகள். பூலாங்கிணர், அந்தியூர், சடையபாளையம், பாப்ப னூத்து, சுண்டக்காம்பாளையம், வாளவாடி, ராகல்பாவி, தளி, மொடக்குபட்டி, ஆர்.வேலூர், குறிச்சிக்கோட்டை, திரு மூர்த்தி நகர், பொன்னாலம்மன் சோலை, விளாமரத்துப்பட்டி, உடுக்கம்பாளையம், கஞ்சம்பட்டி, குண்டலப்பட்டி, லட்சுமா புரம் மற்றும் தென் குமாரபாளையம் ஆகிய பகுதிகளில் மின் தடை ஏற்படும் என்று செயற்பொறியாளர் மூர்த்தி தெரிவித் துள்ளார்.
ஜூலை 13 சிறப்பு குறைதீர் முகாம்
ஜூலை 13 சிறப்பு குறைதீர் முகாம் திருப்பூர், ஜூலை 10- திருப்பூரில் ஜூலை 13 ஆம் தேதி சிறப்பு குறைதீர் முகாம் நடைபெற உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் பொது விநியோகத் திட்ட சிறப்பு குறைதீர் முகாம் ஜூலை 13ஆம் தேதி காலை 10 மணி முதல் 1 மணி வரை அவிநாசி, தாராபுரம், காங்கேயம், மடத்துக் குளம், பல்லடம், திருப்பூர் வடக்கு, திருப்பூர் தெற்கு, உடு மலைப்பேட்டை, ஊத்துக்குளி ஆகிய வட்டங்களில் நடை பெற உள்ளது. இந்தக் குறைதீர் முகாமில் திருப்பூர் மாவட் டத்தில் உள்ள அனைத்து குடிமை பொருள் தனி வட்டாட் சியர்கள் வட்ட வழங்கல் அலுவலர்கள் மற்றும் தனி வருவாய் ஆய்வாளர்கள் கலந்து கொண்டு முகாமில் பெறப்படும் மனுக் களுக்கு உடனடி தீர்வு செய்ய உள்ளார்கள். பொதுமக்கள் குடும்ப அட்டைகளில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கம், முகவரி மாற்றம், கைப்பேசி எண் பதிவு மாற்றம், புதிய குடும்ப அட்டை, உள்ளிட்ட கோரிக்கைகளை நிவர்த்தி செய்து கொள்ள இந்த முகாமை பயன்படுத்தி கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் தா. கிறிஸ்துராஜ் தெரிவித்துள்ளார்.
கல்பனா சாவ்லா விருது: ஜூலை 15க்குள் விண்ணப்பிக்க அழைப்பு
கல்பனா சாவ்லா விருது: ஜூலை 15க்குள் விண்ணப்பிக்க அழைப்பு திருப்பூர், ஜூலை 10- வீர தீர செயல்களில் ஈடுபட்டவர்களுக்கு வழங்கப்படும் கல் பனா சாவ்லா விருதுக்கு ஜூலை 15 ஆம் தேதிக்குள் விண்ணப் பம் செய்ய வேண்டும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித் துள்ளார். 2024 ஆம் ஆண்டிற்கான கல்பனா சாவ்லா விருது சுதந்திர தின விழாவின் போது வழங்கப்பட உள்ளது. பாராட்டத்தக்க வகையில் வீர தீர செயல்களில் ஈடுபட்டவர்கள் மற்றும் ஏதே னும் ஒரு வகையில் துணிச்சலான முறையில் ஈடுபட்டு செய லாற்றிய தமிழகத்தைச் சார்ந்த பெண்கள் விண்ணப்பம் செய் யலாம். இந்த விருதுக்கு விண்ணப்பம் செய்ய விரும்பு பவர்கள் https//awards.tn.gov.in என்ற இணையதளம் வாயிலாக ஜூலை 15ஆம் தேதிக்குள் விண்ணப்பம் செய்திட வேண்டும். தகுதி வாய்ந்த நபர்கள் உரிய ஆதாரங்களுடன் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம் மாவட்ட சமூக நூலகம் அறை எண் 36 ஐ அணுகி உரிய படிவம் பெற்று விண் ணப்பம் செய்ய வேண்டும் என மாவட்ட ஆட்சியர் தா.கிறிஸ் துராஜ் தெரிவித்துள்ளார்.
சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் அமைச்சகத்தின் செயலர்கள் திருப்பூர் தொழில்துறையினர் கலந்துரையாடல் கூட்டத்தில் பங்கேற்பு
திருப்பூர், ஜூலை 10- சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் அமைச்சகத்தின் மத்திய செயலர் தாஸ், தமிழ்நாடு அரசின் சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவன தொழில் செயலர் அர்ச்சனா பட் நாயக் உள்ளிட்ட 10 ஐஏஎஸ் அதிகா ரிகள் செவ்வாயன்று திருப்பூர் ஏற்று மதியாளர்கள் சங்க அலுவலகத் தில் தொழில்துறையினருடன் ஆலோசனையில் ஈடுபட்டு, தொழில்துறையினர் கருத்துக் களை கேட்டறிந்தனர். திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க அலுவலகத்தில் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் அமைச் சகத்தின் மத்திய செயலர் தாஸ், தமிழ்நாடு அரசின் சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவன தொழில் செயலர் அர்ச்சனா பட்நாயக் உள்ளிட்ட 10 ஐஏஎஸ் அதிகாரிகள், திருப்பூர் பின் னலாடை ஏற்றுமதியாளர்களுடன் கலந்துரையாடல் கூட்டத்தில் பங் கேற்றனர். இதில், திருப்பூர் ஏற்றும தியாளர்கள் சங்கத் தலைவர் கே. எம்.சுப்பிரமணியன் வரவேற்று பேசுகையில், வரும் 2027 ஆம் ஆண்டு கிரீன் திருப்பூர் என்பதை இலக்காக கொண்டு பாடுபட்டு கொண்டிருக்கிறோம். இன்றைக்கு உலக அளவில் பின்னலாடை தொழிலில் இந்தியா கோலோச்சு வதற்கு, திருப்பூர் முக்கிய காரண மாக உள்ளது. இன்றைக்கு ரூ.35 ஆயிரம் கோடியை ஏற்றுமதியில் தொட்டுள்ளோம் என பேசினார். இதையடுத்து திருப்பூர் ஏற்றும தியாளர்கள் சங்கத்தின் கௌரவத் தலைவர் ஏ.சக்திவேல் பேசும் போது, மத்திய மாநில அரசுகளின் முதன்மை தொழில் அதிகாரிகளாக 10 ஐஏஎஸ் அதிகாரிகள் இணைந்து, திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங் கத்துக்கு வந்திருப்பது, சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில்களை நல்ல நிலைக்கு எடுத்துச் செல்லும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. இங்குள்ள பல ஏற்றுமதியாளர்கள் விவசாய குடும்பத்தை சேர்ந்தவர் கள். 1984 ஆம் ஆண்டு திருப்பூரின் ஏற்றுமதி வெறும் ரூ.10 கோடி தான். இன்றைக்கு ரூ.35 ஆயிரம் கோடியை தொட்டுள்ளோம். குடி யிருப்பு பகுதி மட்டுமின்றி, தொழிற் சாலைகளிலும் வேறெங்கும் இல் லாத வகையில் திருப்பூரில் 24 மணி நேரம் தண்ணீர் கிடைக்கிறது. வரும் பட்ஜெட்டில் தொழிலுக்கு தேவை யான முக்கிய பங்கு இருக்கும் என்று நம்புகிறோம். கொரோனா, உக்ரைன் போர் என உலக அள வில் சூழல் மாறினாலும், கிரீன் டெக் ஸ்டைல் திருப்பூர் என்பதை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறோம். உலக நாடுகள் வியக்கும் வகையில் பூஜிய நிலை சுத்திகரிப்பு இங்கு அமல்படுத்தி உள்ளது. இதை மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் 24 மணி நேரம் கண்காணிக்கலாம். பருத்தி, சோலார், காற்றாலை மின் சாரம் என உற்பத்தியில் பசுமை கொள்கையை பின்பற்றுகிறோம். சாய ஆலைகளில் நாள் ஒன்றுக்கு 13 ஆயிரம் கோடி லிட்டர் மறுசுழற் சிக்கு பயன்படுத்துகிறோம். கடன் மற்றும் மானிய விஷயங்களில் மத்திய, மாநில அரசுகள் பல்வேறு திட்டங்களை தரும்போது, தொழில் மேலும் மேம்படும் என பேசினார். தமிழ்நாடு அரசின் சிறு, குறு மற் றும் நடுத்தர நிறுவன தொழில் செய லர் அர்ச்சனா பட்நாயக் பேசியதா வது, தமிழகத்தின் முக்கியத் தொழில் நகரமாக திருப்பூர் பின்ன லாடைத் தொழில் மூலம் மாநிலத் தின் கவனத்தை தொடர்ந்து ஈர்த்து வருகிறது. இங்கு பல்வேறு விஷ யங்கள் குறித்து ஆலோசித்து உள் ளோம். சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில்கள் குறித்து சரி, தவறு களை அரசின் கவனத்துக்கு கொண்டு செல்வோம். இந்த தொழி லின் நீண்ட நாள் கோரிக்கைகள் குறித்து மாநில அரசுக்கு கொண்டு செல்லப்படும் என கூறினார். சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் அமைச்சகத்தின் மத்திய செயலர் தாஸ் பேசுகையில், ஏற்று மதியில் ஜவுளித்துறை முன்னிலை யில் உள்ளது. ஜவுளித்தொழிலில் செயற்கை நூலிழை உலக அள வில் 70 சதவீதம் பயன்பாட்டில் உள் ளது. வெளிநாடுகளில் 3 மாதங்கள் கோடையும், 9 மாதங்கள் குளிரும் இருப்பதால் அங்கு அதிகளவில் செயற்கை நூலிழை எனப்படும் பாலிஸ்டரின் பயன்பாடு தான் அதி களவில் உள்ளது. இன்றைக்கு ரூ.35 ஆயிரம் கோடி ஏற்றுமதி என்பது நல்ல கட்டமைப்பு தான் தொடர்ந்து முன்னோக்கி செல்ல, இந்த கட்ட மைப்பு நமக்கு பயன்படும். நாட்டின் வளர்ச்சிக்கு இது உதவும். கிரீன் டெக்லாஜிக்கான மூலப்பொருட் களில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். நிதி ஆயோக் மூலம் இந்த தொழிலை அடுத்த கட்டத் துக்கு கொண்டு செல்லப்படும். நாட் டின் பொருளாதாரத்துக்கு திருப்பூர் போன்ற பின்னலாடை நகரங்கள் பக்கபலமாக உள்ளன என்றார். இதைதொடர்ந்து தொழில்துறை யினருடன் ஆலோசனையில் ஈடுபட்டு, தொழில்துறையினர் கருத் துக்களை கேட்டறிந்தார். இதில், மத்திய, மாநில அரசுகள் தனித்தனியாக மானியங்கள் வழங் கும் போது அவற்றால் தொழில்து றையினர் பாதிக்கப்படுகின்றனர். மகாராஷ்ரா மற்றும் குஜராத் போன்று ஒருங்கிணைந்து தரும் போது, அதன் மூலம் தொழில்துறை யினர் கூடுதல் பயன்பெறுவார்கள். பிஎல்ஐ திட்டத்தில் ரூ.25 கோடி முதலீடு செய்து ரூ. 75 கோடி வர்த்த கம் நடைபெறும் வகையில் மாற்றி னால், அதன் மூலம் முதலீட்டு கடன் உள்ளிட்டவைகளை எளிமை யாக்க வேண்டும் என திருப்பூர் ஏற் றுமதியாளர்கள் மற்றும் தொழில் துறையினர் சார்பில் பலரும் கோரிக்கை விடுத்தனர்.
எம்எஸ்எம்இ கோரிக்கைகளை நிறைவேற்றித்தர திருப்பூர் எம்பியிடம் தொழில் துறையினர் கோரிக்கை
திருப்பூர், ஜூலை 10- கோவையில் தொழில் துறை அமைச்சர் எம்எஸ்எம்இ கோரிக்கை கள் தேர்தலுக்கு பின்னர் பரிசீலிக்கப் படும் என்று உத்தரவாதம் அளித்தி ருந்தார். எனவே அதை முன் நின்று நடத்தித் தரும்படி திருப்பூர் நாடாளு மன்ற உறுப்பினர் கே.சுப்பராயனிடம் நிட் கிளாத் மேனுபேக்சர்ஸ் அசோசியே சன் சார்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது. நிட் க்ளாத் மேனுபேக்சர்ஸ் அசோசி யேசன் திருப்பூர் நாடாளுமன்ற உறுப் பினர் கே.சுப்பிராயனிடம் புதனன்று அளித்த மனுவில் கூறியிருப்பதாவது, எம்எஸ்எம்இ தொழில்துறையினர் தொழில்துறை சார்ந்த எல்டிசிடி நுகர் வோர்கள் அனைவரும் தமிழக மின்வா ரியத்திடம் மட்டுமே மின்சாரத்தை வாங்க இயலும் என்பதால், தனியார் ஜெனரேட்டர்களை விட 1.15 பைசா யூனிட் ஒன்றுக்கு அதிக கட்டணம் கொடுத்து வாங்கி பெரு நிறுவனங்க ளுடன் போட்டியிடும் நிலை உள்ளது. இந்நிலையில் எல்டிசிடி நுகர்வோர்க ளுக்கு 430 சதவீதம் டிமாண்ட் சார்ஜ் கிலோவாட் ஒன்றுக்கு 35ல் இருந்து 153 ஆக உயர்த்தியுள்ளனர். தொழிற்சா லையை இயங்கினாலும் இயங்காவிட் டாலும் ரூ.3920 கட்டி வந்ததை தற்போது ரூ.17136 செலுத்த வேண்டும் என்ற உத்த ரவு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. இதை ரத்து செய்து பழைய நிலை கட்ட ணத்தை பெற ஆவணம் செய்ய வேண் டும். சோலார் முதலீட்டு மானியம் 25 சத வீதம் என எம்எஸ்எம்இ க்கு அறிவித்த அரசாங்கம், இன்னும் அதை பயன்பாட் டிற்கு கொண்டு வரவில்லை. உடனடி யாக எல்டிசிடி, எச்டி என பாகுபாடு பார்க் காமல் கூறையின் மீது சோலார் பேனல் போட்ட அனைவருக்கும் நெட்வொர்க் கட்டணத்தை நீக்குவதுடன், மானியம் அளித்து ஊக்கப்படுத்த ஆவணம் செய்ய வேண்டும். வெல்டிங் லைனுக்கு விதிக்கும் 15 சதவீதம் கூடு தல் கட்டணத்தை ரத்து செய்ய வேண் டும். வருடம் ஒருமுறை அதிகபட்சம் 6 சத வீதம் வரை மின்கட்டணம் உட்பட அனைத்து விதர கட்டணங்களையும் உயர்த்திக் கொள்ள டிஎன்இஆர்சி ஒரு தரப்புக்கு சாதகமாக அனுமதித்த சட் டத்தை ரத்து செய்ய வேண்டும். இந்த கோரிக்கைகளை தொழில்து றையினர் 8கட்ட போராட்டங்கள் நடத்தி அரசாங்க கவனத்தை ஈர்த்து, இறுதி யாக முதலமைச்சரை சந்தித்த தருவா யில் பாராளுமன்ற தேர்தலுக்கு பின்னர் நல்லதொரு தீர்ப்பை ஏற்படுத்திக் கொடுக்கிறோம் என்றும், கோவையில் தொழில் துறை அமைச்சர் எம்எஸ் எம்இ கோரிக்கைகள் தேர்தலுக்கு பின் னர் பரிசீலிக்கப்படும் என்றும் உத்தரவா தம் அளித்துள்ளார். எனவே தாங்கள் முன் நின்று இதற்கு நல்லதொரு தீர்ப்பை ஏற்படுத்த வேண்டும் என நிட்மா சார்பாகவும், தொழில்துறை சார்பாக வும் கேட்டுக்கொள்கிறோம் என கூறப் பட்டுள்ளது.
ரியல் எஸ்டேட்டுகளாக மாறும் பஞ்சாலைகள்
மேலும் பேசிய அசோகன், “இந்தியாவில் புதிய பொருளா தாரக் கொள்கையை தீவிரமாக அமலாக்கிய காலகட்டத் தில் திண்டுக்கல்,கோவை, திருப்பூர் பகுதிகளில் புதிய புதிய மில்கள் துவங்கப்பட்டன. அதற்கு வங்கிகள் தாராள மாக கடன்களை வழங்கின. சிஏவி மில்லில் கடைசியாக 400 பேர் பணியாற்றினார்கள். இவர்களில் சிஐடியுவில் இணைந்த தொழிலாளர்கள் 107 பேர். மில் நிர்வாகத்திற்கு எதிராக 14 பேர் முதன் முதலாக வழக்கு தொடுத்தனர். சிஐடியு சார்பாக பணிக்கொடை கேட்டு வழக்கு தொடுத்தவர்கள் 142 பேர். மற்றவர்கள் நமது சங்கத்திற்கு வரவில்லை. அத னால் அந்த தொழிலாளர்களுக்கு பணிக்கொடை கிடைக்க வில்லை. இந்த வழக்கில் இணைந்த தொழிலாளர்களுக்கு அதிகபட்சமாக ரூபாய் ஒன்றரை லட்சம் வரை பணிக்கொடை கிடைத்துள்ளது. இந்த மில் சங்கம், லே ஆப் சம்பளம் கேட்டும் வழக்கு தொடுத்துள்ளது. அந்த தொகையும் கிடைத்தால் தொழிலாளர்களுக்கு இரட்டிப்பு சந்தோசம். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஒரு மில்லில் பணிக் கொடை தரமாட்டோம் என்று சொன்னார்கள். தொழிலாளி களுக்கு தெரிவிக்காமல் மில்லை மூடினர். மில் முதலாளி இல்லை. ஆனால் அலுவலகத்தில் மேனேஜர் மற்றும் சிலர் வேலை செய்கிறார்கள். அந்த மில் தொழிலாளர்களுக்கு 18 மாத சம்பளம் வேண்டும் என்று வழக்கு போட்டோம். ஒரு தொழிலாளிக்கு ரூபாய் ஒன்றரை லட்சம் முதல் 3 லட்சம் வரை பணம் கிடைக்கும். சிஐடியு சங்கம் மூலம் யார் யாருக்கெல்லாம் விண்ணப்பித்தோமோ அவர்களுக் கெல்லாம் பணம் கிடைத்தது. திருச்சியில் உள்ள ஒரு மில், 2007ல் மூடிவிட்டனர். 820 தொழிலாளர்கள் பணியாற்றிய நிலையில் சிஐடியுவில் 400 பேர் தான் உறுப்பினராக சேர்ந்தனர். அந்த தொழிலாளர்களின் பணிக் கொடைக்காக இன்று வரை வழக்கு நடத்தி வருகி றோம். மில்லை ஏலம்விட்டது போக உள்ளது ரூ 34 கோடிதான். முதலாளி பி.எப் பிடித்தம் செய்த தொகையை இதுவரை செலுத்தாத நிலை உள்ளது. 17 ஆண்டுகளாக வழக்கு நடத்தப் பட்டு வருகிறது. அதிகார வர்க்கம் தொழிலாளிக்கு சேர வேண் டிய பணத்தை தருவதற்கு பதிலாக சட்டம் பேசிக்கொண்டு உள்ளது. இத்தகைய சூழலில் நீங்கள் வழக்கு நடத்தி வெற்றி பெற்றிருப்பது நமது சங்கத்தின் தொடர் நடவடிக்கைக்கு கிடைத்த மாபெரும் வெற்றியாகும்” என்று பாராட்டு தெரி வித்தார். நாட்டில் உள்ள 50 விழுக்காடு பாஞ்சாலைகள் தமிழ்நாட்டில் தான் உள்ளன. 30 விழுக்காடு மில்கள் மகா ராஷ்டிராவிலும், 10 விழுக்காடு மில்கள் குஜராத்திலும் உள் ளன. தனியார் முதலாளிகளுக்கு முன் மாதிரியாக அரசு இருக்க வேண்டும். ஆனால் மோடி அரசாங்கம் கொரோனா காலத்தில் மூடிய தேசிய பஞ்சாலைகளை திறக்கவில்லை. மில்லை நடத்துவதை விட அந்த மில்லில் உள்ள நிலங் களை ரியல் எஸ்டேட் செய்து லாபமடைய பார்க்கிறது. மும்பையில் நகரின் மையப்பகுதி யில் உள்ள மில்லை மூடினர். ஒரு லட்சத்து 38 ஆயிரம் சதுர அடி நிலம் ரியல் எஸ்டேட்காரர்களுக்கு பல ஆயிரக்கணக்கான கோடிக்கு விற்கப்பட்டது. ஜவுளித்துறை அமைச்சராக உள்ள பியூஸ் கோயல் அடிக்கடி கோவை மாநகருக்கு வருவதன் மர்மம் அது தான் என்றும் அசோகன் விமர்சித்தார்.