கோவை, செப்.16- கோவையில் வாகன விபத்தில் மூளைச்சாவு ஏற்பட்ட ஆணின் உடல் உறுப்புகள் தானம் செய்யப் பட்டது. நான்கு பேருக்கு உயிர்ச் சேவை செய்து மறைந்தவரின் உட லுக்கு மருத்துவர்கள், செவிலியர் கள் மற்றும் இறந்தவரின் குடும்பத் தினர் அஞ்சலி செலுத்தினர். திண்டுக்கல் மாவட்டம், நிலக் கோட்டை தாலுகா ஒட்டுபட்டி கிரா மத்தைச் சேர்ந்தவர் (43) தீத்தி பாளையம் அருகில் கூலி வேலை செய்து வந்தார். கடந்த 13.07.2022 அன்று கோவை கொண்டாட்டம் அருகில் மதியம் 3 மணியளவில் அவர் இருசக்கர வாகனத்தில் சென்ற போது விபத்து ஏற்பட்டுள்ளது. தலையில் பலத்த காயம் ஏற்பட்ட நிலையில் கோவை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவ மனையில் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.பின்பு அவருக்கு மூளைச்சாவு ஏற்பட்டது. பின்னர் அவரின் உடல் உறுப்பு களை தானம் செய்யஉறவினர்கள் முன் வந்தனர். இதனையடுத்து 2 சிறுநீரகங்கள், கல்லீரல் மற்றும் இருதயம் உள்ளிட்ட உறுப்பு களை நான்கு நபர்களுக்கு தானமாக வழங்க தமிழ்நாடு உறுப்பு மாற்று ஆணையத்தின் வழிகாட்டு தலின்படி கோவை மருத்துவக்கல் லூரி மருத்துவமனை நிர்வாகம் ஏற் பாடு செய்தது.
முன்னதாக மூளைச்சாவு அடைந்து நான்கு பேருக்கு உயிர்ச் சேவை அளித்து மறைந்த நபரின் உடலுக்கு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் நிர்மலா, மருத்துவர்களும் மற்றும் ஊழியர் களும் இறுதி மரியாதை செலுத்தி னர். இதுகுறித்து, கோவை மருத்து வக்கல்லூரி மருத்துவமனை முதல் வர் நிர்மலா கூறுகையில் மூளைச் சாவு அடைந்தவரின் இரண்டு சிறு நீரகங்களில் ஒன்று தொடர் Dialysis சிகிச்சையில் இருக்கும். கோவை மருத்துவக்கல்லூரி மருத்துவம னையைச் சேர்ந்த நோயாளி ஒரு வருக்கும், மற்றொன்று சேலம் அரசு மருத்துவமனையைச் சேர்ந்த நோயாளிக்கும் தானமாக அளிக்கப் பட்டது. கல்லீரலும், இருதயமும் கோவையைச் சேர்ந்த தனியார் மருத்துவமனையில் சிகிச்சையில் இருக்கும் நோயாளிகளுக்கு தான மாக வழங்கப்பட்டது. இறந்தவரின் குடும்பத்தினருக்கு அவர்கள் செய்த மகத்தான சேவைக்கு நன்றி தெரி வித்தோம். இந்த உறுப்புக்களை எடுத்து தேவைபடுபவர்களுக்கு பொறுத்துவதற்கு உறுதுணை யாக இருந்த மருத்துவர்கள், செவி லியர்கள் மற்றும் பிற உயிர்களுக் கும் நன்றியையும் பாராட்டையும் தெரிவித்தார்.