districts

img

போலியோ விழிப்புணர்வு 3 ஆயிரம் பேர் பங்கேற்ற சிலம்பம்

நாமக்கல், ஆக. 26- நாமக்கல்லில் போலியோ விழிப்புணர்வுக்காக, ரோட்டரி சங்கம் சார்பில், 3 ஆயிரம் பள்ளி மாணவ மாணவிகள் பங் கேற்ற, உலக சாதனை சிலம்பம் போட்டி திங்களன்று  நடை பெற்றது.  நாமக்கல்  மாவட்ட ரோட்டரி சங்கங்களின் சார்பில், போலியோ விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில விழிப்பு ணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. 3 ஆயிரம் பள்ளி மாணவ,  மாணவிகள் கலந்து கொண்ட, சிலம்பப் பயிற்சி நாமக்கல்- சேலம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பொம்மைக் குட்டை மேடு அருகில் திங்களன்று  நடைபெற்றது. விழா விற்கு ரோட்டரி மாவட்ட கவர்னர் சிவகுமார் தலைமை வகித்தார். மாவட்ட போலீஸ் எஸ்.பி. ராஜேஷ் கண்ணன் போட்டியை துவக்கி வைத்தார்.  இந்நிகழ்வில், அரசு மற்றும் தனியார் பள்ளிகளைச் சேர்ந்த  3,000 மாணவ மாணவிகள் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர். இவர்கள், இடைவிடாது தொடர்ந்து ஒரு மணி நேரம் சிலம் பம் சுழற்றி பயிற்சியில் ஈடுபட்டனர். உலக சாதனை நிகழ்ச்சி யாக நடைபெற்ற, இந்த சிலம்பப் போட்டியை ஜெட்லி புக்  ஆஃப் ரெக்கார்ட் நிறுவன அதிகாரிகள் நேரில் பார்வை யிட்டு அங்கீகார சான்று அளித்தனர்.  இதில், ரோட்டரி மாவட்ட சிலம்பம் போட்டி திட்டத்தலை வர் சுரேஷ்குமார், செயலாளர் கருணாகர பன்னீர் செல்வம்,  பொருளாளர் செல்வரத்தினம், வல்வில் ஓரி சிலம்பம் அசோசி யேசன் தலைவர் பன்னீர் உள்ளிட்டோர் நிகழ்வை ஒருங் கிணைத்தனர்.