தருமபுரி, ஜன.10- தருமபுரி மாவட்டத்தில் கொரோனா வால் பாதிக்கப்படுவோருக்கு சிகிச்சை அளிப்பதற்காக 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட படுக்கைகள் தயார் நிலையில் உள்ளது என உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தகவல் தெரிவித்துள்ளார். தருமபுரி மாவட்ட ஆட்சியர் கூடுதல் கூட் டரங்கில் கொரோனா நோய் தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து சுகாதாரத்துறை, வருவாய்த்துறை, வளர்ச்சி துறை, காவல்துறை உள்ளிட்ட துறை அலுவலர்களுக்கான ஆய்வுக்கூட் டம் திங்களன்று நடைபெற்றது. இக்கூட் டத்திற்கு வேளாண்மை மற்றும் உழவர் நலத் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல் வம் தலைமை வகித்து பேசுகையில், தரும புரி மாவட்டத்தை பொறுத்தவரையில் தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்து வமனை, 3 அரசு மருத்துவமனைகள் மற்றும் 5 தனியார் மருத்துவமனைகள் என மொத் தம் 9 மருத்துவமனைகளில் கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்படுவர்களுக்கு சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள் ளது. இதுதவிர 2 ஆயிரத்து 250க்கும் மேற் பட்ட படுக்கை வசதிகளுடன் 10 இடங்களில் கோவிட் பராமரிப்பு மையம் அமைக்கும் பணியும், மேலும், தருமபுரி மாவட்டத்தில் தரம் உயர்த்தப்பட்ட 9 அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் இடைநிலை கோவிட் பரா மரிப்பு மையங்கள் அமைக்கும் பணியும் நடைபெற்று வருகிறது. மேலும், தருமபுரி மாவட்டத்தில் கொரோனாவிற்கு சிகிச்சை அளிப்பதற்காக ஆக்சிஜன் வசதியுடன் கூடிய 464 படுக்கைகளும், ஆக்ஸிஜன் வசதி இல்லாத 2550 படுக்கை வசதிகளும் என மொத்தம் 3000க்கும் மேற்பட்ட படுக்கை வசதிகள் தயார் நிலையில் உள் ளதாக, அமைச்சர் தெரிவித்தார். இதனைத்தொடர்ந்து, அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தருமபுரி நகர ஆரம்ப சுகாதார நிலையத்தில் தடுப்பூசி (பூஸ்டர் டோஸ்) செலுத்தும் முகாமினை தொடங்கி வைத்தார். இதன்பின், தரும புரி, செட்டிக்கரை அரசு பொறியியல் கல்லூ ரியில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா பரா மரிப்பு மையத்தினை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து, கொரோனா நோய் தொற் றால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்காக அனு மதிக்கப்படும் நோயாளிகளுக்கு ஏற்ப டுத்தப்பட்டுள்ள படுக்கை வசதிகள், குடிநீர் வசதிகள், கழிப்பறை வசதிகள் உள்ளிட்ட விவரங்கள் குறித்து அலுவலர்களிடம் கேட் டறிந்தார். முன்னதாக, இந்நிகழ்ச்சிகளில் மாவட்ட ஆட்சியர் ச.திவ்யதர்சினி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ச.கலைச்செல்வன், தரு மபுரி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பி.வெங்க டேஷ்வரன், முன்னாள் சட்டமன்ற உறுப்பி னர்கள் தடங்கம் பெ.சுப்பிரமணி, பி.என்.பி. இன்பசேகரன் உட்பட பலர் கலந்து கொண் டனர்.